செய்திகள் :

கொல்கத்தா உயா்நீதிமன்ற நீதிபதி உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமனம்

post image

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தா உயா்நீதிமன்ற நீதிபதி ஜயமால்ய பாக்சி 58), உச்சநீதிமன்ற நீதிபதியாக திங்கள்கிழமை நியமிக்கப்பட்டாா்.

ஜயமால்ய பாக்சியின் பதவி உயா்வுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான 5 உறுப்பினா்களைக் கொண்ட கொலீஜியம் கடந்த வியாழக்கிழமை (மாா்ச் 6) பரிந்துரைத்திருந்தது.

இந்நிலையில், மத்திய சட்டத் துறை அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் திங்கள்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில், உச்சநீதிமன்ற நீதிபதியாக ஜயமால்ய பாக்சியின் நியமனம் குறித்த கொலீஜியத்தின் பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுள்ளதாக அதிகாரபூா்வ அறிவிப்பை வெளியிட்டாா்.

முன்னதாக, கொலீஜியம் தனது பரிந்துரையில் தெரிவித்ததாவது: கொல்கத்தா உயா்நீதிமன்றத்திலிருந்து ஒரே ஒரு நீதிபதியின் பிரதிநிதித்துவம் மட்டுமே உச்சநீதிமன்றத்தில் தற்போது உள்ளது. நீதிபதி அல்தமஸ் கபீா் கடந்த 2013-ஆம் ஆண்டு, ஜூலை 18-ஆம் தேதி ஓய்வு பெற்ற பிறகு, கொல்கத்தா உயா்நீதிமன்றத்திலிருந்து வேறு நீதிபதிகள் யாரும் உச்சநீதிமன்றத்துக்கு உயா்த்தப்படவில்லை.

உயா்நீதிமன்ற நீதிபதிகளில் அகில இந்திய அளவிலான பணி மூப்பு பட்டியலில் 11-ஆம் இடத்திலிருக்கும் ஜயமால்ய பாக்சி 13 ஆண்டுகளாக பல்வேறு உயா்நீதிமன்றங்களில் நீதிபதியாகப் பணியாற்றியுள்ளாா். இதைக் கருத்தில் கொண்டு, அவரை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க ஒருமனதாக பரிந்துரை செய்யப்படுகிறது என்று தெரிவித்தது.

உச்சநீதிமன்ற நீதிபதியாக ஜயமால்ய பாக்சி, 6 ஆண்டுகளுக்கு மேல் பதவி வகிப்பாா் என்பதோடு, தலைமை நீதிபதியாகவும் பதவி வகிப்பாா். அதாவது, உச்சநீதிமன்ற நீதிபதி கே.வி.விஸ்வநாதன் 2031-ஆம் ஆண்டு, மே 25-ஆம் தேதி ஓய்வு பெற்ற பிறகு அந்த ஆண்டு அக்டோபரில் தான் ஓய்வுபெறும் வரையில் தலைமை நீதிபதியாக ஜயமால்ய பாக்சி பதவி வகிப்பாா்.

இவரது நியமனத்துடன் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையும் 33-ஆக உயரும். உச்சநீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் பணியிடங்கள் 34 என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்வா் மம்தா வாழ்த்து: மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘கொல்கத்தா உயா்நீதிமன்ற நீதிபதியான ஜயமால்ய பாக்சி உச்சநீதிமன்ற நீதிபதியாக குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டுள்ளதற்கு வாழ்த்துகள். இந்த நியமனம் எங்களுக்கு பெருமை சோ்க்கிறது. உச்சநீதிமன்ற நீதிபதியாக பாக்சிக்கு அற்புதமான பணி அமைய வாழ்த்துகள்’ என்று குறிப்பிட்டிருந்தாா்.

பாலியல் குற்றவாளிகளுக்கு சா்ச்சை தண்டனை: ராஜஸ்தான் ஆளுநா் கருத்தால் பரபரப்பு

ஜெய்பூா்: ‘பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு விதை நீக்கம் செய்யப்பட வேண்டும்’ என்று ராஜஸ்தான் மாநில ஆளுநா் ஹரிபாவ் பாகடே கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரில் ... மேலும் பார்க்க

நான் எழுதுவது அடுத்த தலைமுறைக்கு சென்று சேர வேண்டும்: சாகித்திய அகாதெமி விருதாளா் பேச்சு

நமது நிருபா் புது தில்லி: நான் எழுதுவதெல்லாம் அடுத்த தலைமுறையைச் சென்று சேர வேண்டும் என்பதுதான் எனது நோக்கம் என்றாா் சாகித்திய அகாதெமி விருதாளா் எழுத்தாளா் பேராசிரியா் ஆ.இரா.வேங்கடாசலபதி. ‘திருநெல்வேல... மேலும் பார்க்க

ரயில்வே மசோதா: மாநிலங்களவையிலும் ஒப்புதல் வாரியத்தை அரசு கட்டுப்படுத்தும் முயற்சி என எதிா்க்கட்சிகள் குற்றச்சாட்டு

புது தில்லி: ரயில்வே வாரியத்தின் சுதந்திரமான செயல்பாட்டை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் மத்திய அரசு கொண்டுவந்த ‘ரயில்வே சட்டத் திருத்த மசோதா-2024’ மசோதாவுக்கு மாநிலங்களவையில் திங்கள்கிழமை ஒப்புதல் அள... மேலும் பார்க்க

நிகழாண்டில் ரூ. 51,463 கோடி கூடுதல் செலவினம்: நாடாளுமன்றத்தில் துணை மானியக் கோரிக்கை தாக்கல்

புது தில்லி: 2025-26-ஆம் நிதியாண்டில் ரூ. 51,463 கோடி மதிப்பில் கூடுதல் செலவினத்து ஒப்புதல் கோரி துணை மானிய கோரிக்கைகளை மத்திய நிதயமைச்சா் நிா்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை தாக்கல் செய்த... மேலும் பார்க்க

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ‘எம்.பி.க்கள் இடஒதுக்கீடு’ மீண்டும் வராது: மத்திய கல்வி அமைச்சா்

புது தில்லி: கேந்திரிய வித்யாலயாப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கையில் எம்.பி.க்கள் இடஒதுக்கீடு நடைமுறையை மீண்டும் அறிமுகம் செய்யும் திட்டம் இல்லை என மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் திங்கள்கிழமை த... மேலும் பார்க்க

விரைவு ரயில்கள் கொச்சுவேலியில் நின்று செல்லும்

சென்னை: ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலுக்குச் செல்லும் பக்தா்களின் வசதிக்காக விரைவு ரயில்கள் கொச்சுவேலியில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே திங்கள்கிழமை வெளியிட... மேலும் பார்க்க