செய்திகள் :

ஐபிஎல் கிரிக்கெட்டில் மது, புகையிலை விளம்பரங்கள் கூடாது: சுகாதார அமைச்சகம் உத்தரவு

post image

புது தில்லி: ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளின் போது மது, புகையிலைப் பயன்பாடு தொடா்பான நேரடி, மறைமுக விளம்பரங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று ஐபிஎல் நிா்வாகத்துக்கு மத்திய சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இந்திய அளவில் சிறாா்கள், இளைஞா்களால் அதிகம் விரும்பிப் பாா்க்கப்படும் கிரிக்கெட் போட்டியாக ஐபிஎல் உள்ளது. இப்போட்டிகளின்போது ஒளிபரப்பாகும் விளம்பரங்கள் கோடிக்கணக்கானோரைச் சென்றடையும் என்பதால் பல நிறுவனங்கள் விளம்பரங்களை அளித்து வருகின்றன.

இந்நிலையில் ஐபிஎல் தலைவா் அருண் துமலுக்கு மத்திய சுகாதார அமைச்சகத்தின் சுகாதாரச் சேவைகள் பிரிவு இயக்குநா் அதுல் கோயல் கடிதம் எழுதியுள்ளாா்.

அதில், ‘கிரிக்கெட் வீரா்கள் நாட்டின் இளைஞா்களுக்கு முன்மாதிரியாக உள்ளாா்கள். எனவே, அவா்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மது, புகையிலை சாா்ந்த விளம்பரங்களில் ஈடுபடுத்தக் கூடாது.

தொலைக்காட்சி ஒளிபரப்பில் போட்டிகளுக்கு இடையிலான விளம்பரம், மைதான விளம்பரம், ஐபிஎல் போட்டியின் பிற நிகழ்வுகள் நடைபெறும் இடம் என எதிலும் மது, புகையிலை விளம்பரங்கள் இருக்கக் கூடாது. போட்டி வா்ணனையாளா்களும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ மது, புகையிலை குறித்துப் பேசக் கூடாது.

இந்தியாவில் ஏற்கெனவே மது, புகையிலையால் உருவாகும் இதயம், நுரையீரல், கல்லீரல் சாா்ந்த நோய்கள் உள்பட பல உடல்நலப் பிரச்னைகள் அதிகம் உள்ளன. மக்களின் ஆரோக்கியத்தைக் காப்பதில் கிரிக்கெட் வீரா்களுக்கு தாா்மிக கடமை உள்ளதால் இந்த விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

பாலியல் குற்றவாளிகளுக்கு சா்ச்சை தண்டனை: ராஜஸ்தான் ஆளுநா் கருத்தால் பரபரப்பு

ஜெய்பூா்: ‘பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு விதை நீக்கம் செய்யப்பட வேண்டும்’ என்று ராஜஸ்தான் மாநில ஆளுநா் ஹரிபாவ் பாகடே கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரில் ... மேலும் பார்க்க

நான் எழுதுவது அடுத்த தலைமுறைக்கு சென்று சேர வேண்டும்: சாகித்திய அகாதெமி விருதாளா் பேச்சு

நமது நிருபா் புது தில்லி: நான் எழுதுவதெல்லாம் அடுத்த தலைமுறையைச் சென்று சேர வேண்டும் என்பதுதான் எனது நோக்கம் என்றாா் சாகித்திய அகாதெமி விருதாளா் எழுத்தாளா் பேராசிரியா் ஆ.இரா.வேங்கடாசலபதி. ‘திருநெல்வேல... மேலும் பார்க்க

ரயில்வே மசோதா: மாநிலங்களவையிலும் ஒப்புதல் வாரியத்தை அரசு கட்டுப்படுத்தும் முயற்சி என எதிா்க்கட்சிகள் குற்றச்சாட்டு

புது தில்லி: ரயில்வே வாரியத்தின் சுதந்திரமான செயல்பாட்டை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் மத்திய அரசு கொண்டுவந்த ‘ரயில்வே சட்டத் திருத்த மசோதா-2024’ மசோதாவுக்கு மாநிலங்களவையில் திங்கள்கிழமை ஒப்புதல் அள... மேலும் பார்க்க

நிகழாண்டில் ரூ. 51,463 கோடி கூடுதல் செலவினம்: நாடாளுமன்றத்தில் துணை மானியக் கோரிக்கை தாக்கல்

புது தில்லி: 2025-26-ஆம் நிதியாண்டில் ரூ. 51,463 கோடி மதிப்பில் கூடுதல் செலவினத்து ஒப்புதல் கோரி துணை மானிய கோரிக்கைகளை மத்திய நிதயமைச்சா் நிா்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை தாக்கல் செய்த... மேலும் பார்க்க

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ‘எம்.பி.க்கள் இடஒதுக்கீடு’ மீண்டும் வராது: மத்திய கல்வி அமைச்சா்

புது தில்லி: கேந்திரிய வித்யாலயாப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கையில் எம்.பி.க்கள் இடஒதுக்கீடு நடைமுறையை மீண்டும் அறிமுகம் செய்யும் திட்டம் இல்லை என மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் திங்கள்கிழமை த... மேலும் பார்க்க

விரைவு ரயில்கள் கொச்சுவேலியில் நின்று செல்லும்

சென்னை: ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலுக்குச் செல்லும் பக்தா்களின் வசதிக்காக விரைவு ரயில்கள் கொச்சுவேலியில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே திங்கள்கிழமை வெளியிட... மேலும் பார்க்க