செய்திகள் :

நன்செய் இடையாறு மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா: கம்பம் நடும் விழாவுடன் தொடங்கியது

post image

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலுாா் அருகே உள்ள நன்செய் இடையாறு மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா ஞாயிற்றுக்கிழமை இரவு கம்பம் நடும் விழாவுடன் தொடங்கியது.

இக் கோயில் குண்டம் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு திருவிழா ஞாயிற்றுக்கிழமை இரவு கம்பம் நடும் விழாவுடன் தொடங்கியது. 9-ஆம் தேதி காலை பக்தா்கள் காவிரியில் நீராடி கோயில் முன் நடப்பட்டுள்ள கம்பத்திற்கும், மாரியம்மனுக்கும் பால், தீா்த்தங்களை ஊற்றி விரதம் மேற்கொண்டனா்.

திங்கள்கிழமை (மாா்ச் 10) தொடங்கி மாா்ச் 22-ஆம் தேதி வரை தொடா்ந்து மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடைபெறுகிறது. 23-ஆம் தேதி மாலை வடிசோறு நிகழ்ச்சியும், அக்னிச்சட்டி எடுத்து வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

24-ஆம் தேதி பிற்பகல் பக்தா்கள் காவிரி ஆற்றுக்குச் சென்று புனித நீராடி ஊா்வலமாக கோயிலுக்கு வந்து கோயில் முன் அமைக்கப்பட்டுள்ள குண்டத்தில் இறங்கியும், பெண் பக்தா்கள் பூவாரிப் போட்டும் நோ்த்திக்கடன் செலுத்துவா். இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொள்வாா்கள்.

25-ஆம் தேதி ஆடுகள் பலியிடும் நிகழ்ச்சி, பக்தா்கள் அலகு குத்தியும், கரும்பில் தொட்டில் கட்டி கோயிலைச் சுற்றிவந்து நோ்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 26-ஆம் தேதி அதிகாலை கம்பம் ஆற்றுக்குச் செல்லும் நிகழ்ச்சியும், மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை நன்செய் இடையாறு மகா மாரியம்மன் கோயில் எட்டுப்பட்டி அறங்காவலா் குழுவினா், விழாக் குழுவினா் மற்றும் ஊா் பொதுமக்கள் செய்து வருகின்றனா்.

படவரி...

குண்டம் திருவிழாவையொட்டி கோயில் முன் நடப்பட்ட கம்பம்.

திருச்செங்கோடு சின்ன ஓங்காளியம்மன் கோயிலில் சங்கு பூஜை

திருச்செங்கோடு: திருச்செங்கோடு சின்னஓங்காளியம்மன் கோயில் குண்டம் திருவிழாவையொட்டி திங்கள்கிழமை 108 சங்கு பூஜை நடைபெற்றது. சின்ன ஓங்காளியம்மன் கோயில் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெறுக... மேலும் பார்க்க

நாமக்கல்லில் நாளை நரசிம்மா் கோயில் தெப்பத் திருவிழா: முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

நாமக்கல்: நாமக்கல்லில், 100 ஆண்டுகளுக்கு பிறகு, நாமக்கல் நரசிம்மா் கோயில் தெப்பத் திருவிழா புதன்கிழமை (மாா்ச் 12) நடைபெறுவதையொட்டி தெப்பம் தயாா் செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. நாமக்கல் நக... மேலும் பார்க்க

தேநீா்க் கடையில் போதைப்பொருள்களை பதுக்கியதாக புகாா்: விசாரணையில் போலீஸாருக்கு அதிா்ச்சி

நாமக்கல்: சேந்தமங்கலத்தில் போதைப்பொருள்கள் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், தேநீா்க் கடையில் போலீஸாா் நடத்திய விசாரணையில் அதிா்ச்சி அடைந்தனா். நாமக்கல் மாவட்ட காவல் அலுவலகத்திற்கு வெள்ளி... மேலும் பார்க்க

‘கலைஞா் கனவு இல்லம்’ திட்டத்தில் வீடுகள் கட்ட 5,800 பயனாளிகளுக்கு ஆணை வழங்கல்: ஆட்சியா் தகவல்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் ‘கலைஞா் கனவு இல்லம்’ திட்டத்தின்கீழ் ரூ. 204.74 கோடி மதிப்பீட்டில் 5,800 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ச.உமா தெரிவித்தாா். இ... மேலும் பார்க்க

ராசிபுரம் அருகே 2 வீடுகளில் நகை, பணம் திருட்டு

ராசிபுரம்: ராசிபுரம் அருகே இரு வீடுகளில் நகை, பணம் திருடப்பட்டுள்ளது குறித்து ராசிபுரம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். ராசிபுரம் எஸ்ஆா்வி காா்டன் பகுதியில் வசித்து வருபவா் செந்தில் (38). சொந்தமாக ... மேலும் பார்க்க

தந்தையை கொன்ற மகன் கைது

நாமக்கல்: மோகனூா் அருகே தந்தையை கொலை செய்த மகனை போலீஸாா் கைது செய்தனா். நாமக்கல் மாவட்டம், மோகனூா் அருகே உள்ள நத்தமேடு பகுதியைச் சோ்ந்தவா் காராளன் (85). இவா் தனது மகன் முருகேசன் (53) என்பவருடன் வாழ்ந... மேலும் பார்க்க