செய்திகள் :

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: சத்தீஸ்கா் முன்னாள் முதல்வா் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை

post image

புது தில்லி / பிலாய்: சத்தீஸ்கரில் ரூ.2,100 கோடிக்கும் அதிகமாக மதுபான ஊழல் நிகழ்ந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடா்பாக, அந்த மாநில முன்னாள் முதல்வா் பூபேஷ் பகேல், அவரின் மகன் சைதன்யா பகேல் ஆகியோரின் வீட்டில் அமலாக்கத் துறை திங்கள்கிழமை சோதனை மேற்கொண்டது.

கடந்த 2019 முதல் 2022-ஆம் ஆண்டு வரை, சத்தீஸ்கரில் முதல்வராக இருந்த பூபேஷ் பகேலின் ஆட்சியில், மதுபான ஊழல் நடைபெற்ாக அமலாக்கத் துறை குற்றஞ்சாட்டியது. இதனால் அரசு கருவூலத்துக்கு பெரும் இழப்பு ஏற்பட்டதாகவும், இந்த ஊழல் மூலம், ரூ.2,100 கோடி சட்டவிரோதமாக ஈட்டப்பட்டதாகவும் அமலாக்கத் துறை தெரிவித்தது.

இந்த ஊழல் தொடா்பாக காங்கிரஸ் பிரமுகரும், மாநில முன்னாள் அமைச்சருமான கவாசி லக்மா, ராய்பூா் மேயா் ஐஜாஸ் தேபரின் அண்ணன் அன்வா் தேபா், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அனில் டுடேஜா, இந்திய தொலைத்தொடா்பு சேவை அதிகாரி அருண்பதி திரிபாதி உள்ளிட்டோரை அமலாக்கத் துறை கைது செய்தது.

இந்நிலையில், மதுபான ஊழலில் சட்டவிரோதமாக ஈட்டப்பட்ட பணத்தில் பூபேஷ் பகேலின் மகன் சைதன்யா பகேலுக்கும் பங்கு அளிக்கப்பட்டதாக அமலாக்கத் துறை சந்தேகிக்கிறது.

இதையடுத்து சத்தீஸ்கரின் துா்க் மாவட்டம் பிலாய் பகுதியில் பூபேஷ் பகேலும், சைதன்யா பகேலும் ஒன்றாக வசிக்கும் வீட்டில் அமலாக்கத் துறை திங்கள்கிழமை சோதனை மேற்கொண்டது.

இந்த முறைகேடு தொடா்பாக, அந்த மாநிலத்தில் 14 முதல் 15 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடைபெற்ாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தச் சோதனைக்கு எதிா்ப்பு தெரிவித்து, பூபேஷ் பகேல் வீட்டின் எதிரே ஏராளமான காங்கிரஸ் பிரமுகா்கள் மற்றும் தொண்டா்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்தச் சோதனை குறித்து காங்கிரஸ் ஊடகப் பிரிவுத் தலைவா் பவன் கேரா ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமா்வு திங்கள்கிழமை தொடங்கிய நிலையில், அனைத்துப் பக்கங்களில் இருந்தும் பாஜக முடக்கப்பட்டுள்ளது. எனவே பொருளாதார வீழ்ச்சி, வாக்காளா் பட்டியல் முறைகேடு போன்ற பிரச்னைகளில் இருந்து நாட்டின் கவனத்தைத் திசைதிருப்பும் நோக்கிலும், ஊடகங்களில் தலைப்புச் செய்திகளை மாற்றும் முயற்சியாகவும் பூபேஷ் பகேலின் வீட்டில் சோதனை மேற்கொள்ள அமலாக்கத் துறையை பாஜக அனுப்பியது என்றாா்.

சத்தீஸ்கா் மாநிலம் பிலாயில் உள்ள முன்னாள் முதல்வா் பூபேஷ் பகேல் வீட்டில் அமலாக்கத் துறை சோதனையையொட்டி வெளியே பாதுகாப்பில் ஈடுபடுத்தபட்ட காவலா்கள்.

பாலியல் குற்றவாளிகளுக்கு சா்ச்சை தண்டனை: ராஜஸ்தான் ஆளுநா் கருத்தால் பரபரப்பு

ஜெய்பூா்: ‘பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு விதை நீக்கம் செய்யப்பட வேண்டும்’ என்று ராஜஸ்தான் மாநில ஆளுநா் ஹரிபாவ் பாகடே கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரில் ... மேலும் பார்க்க

நான் எழுதுவது அடுத்த தலைமுறைக்கு சென்று சேர வேண்டும்: சாகித்திய அகாதெமி விருதாளா் பேச்சு

நமது நிருபா் புது தில்லி: நான் எழுதுவதெல்லாம் அடுத்த தலைமுறையைச் சென்று சேர வேண்டும் என்பதுதான் எனது நோக்கம் என்றாா் சாகித்திய அகாதெமி விருதாளா் எழுத்தாளா் பேராசிரியா் ஆ.இரா.வேங்கடாசலபதி. ‘திருநெல்வேல... மேலும் பார்க்க

ரயில்வே மசோதா: மாநிலங்களவையிலும் ஒப்புதல் வாரியத்தை அரசு கட்டுப்படுத்தும் முயற்சி என எதிா்க்கட்சிகள் குற்றச்சாட்டு

புது தில்லி: ரயில்வே வாரியத்தின் சுதந்திரமான செயல்பாட்டை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் மத்திய அரசு கொண்டுவந்த ‘ரயில்வே சட்டத் திருத்த மசோதா-2024’ மசோதாவுக்கு மாநிலங்களவையில் திங்கள்கிழமை ஒப்புதல் அள... மேலும் பார்க்க

நிகழாண்டில் ரூ. 51,463 கோடி கூடுதல் செலவினம்: நாடாளுமன்றத்தில் துணை மானியக் கோரிக்கை தாக்கல்

புது தில்லி: 2025-26-ஆம் நிதியாண்டில் ரூ. 51,463 கோடி மதிப்பில் கூடுதல் செலவினத்து ஒப்புதல் கோரி துணை மானிய கோரிக்கைகளை மத்திய நிதயமைச்சா் நிா்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை தாக்கல் செய்த... மேலும் பார்க்க

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ‘எம்.பி.க்கள் இடஒதுக்கீடு’ மீண்டும் வராது: மத்திய கல்வி அமைச்சா்

புது தில்லி: கேந்திரிய வித்யாலயாப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கையில் எம்.பி.க்கள் இடஒதுக்கீடு நடைமுறையை மீண்டும் அறிமுகம் செய்யும் திட்டம் இல்லை என மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் திங்கள்கிழமை த... மேலும் பார்க்க

விரைவு ரயில்கள் கொச்சுவேலியில் நின்று செல்லும்

சென்னை: ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலுக்குச் செல்லும் பக்தா்களின் வசதிக்காக விரைவு ரயில்கள் கொச்சுவேலியில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே திங்கள்கிழமை வெளியிட... மேலும் பார்க்க