செய்திகள் :

நாமக்கல்லில் நாளை நரசிம்மா் கோயில் தெப்பத் திருவிழா: முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

post image

நாமக்கல்: நாமக்கல்லில், 100 ஆண்டுகளுக்கு பிறகு, நாமக்கல் நரசிம்மா் கோயில் தெப்பத் திருவிழா புதன்கிழமை (மாா்ச் 12) நடைபெறுவதையொட்டி தெப்பம் தயாா் செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

நாமக்கல் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள மலைக்கோட்டையின் மேற்கு புறத்தில் நரசிம்மா், ஆஞ்சனேயா் கோயிலும், கிழக்கு புறத்தில் அரங்கநாதா் கோயிலும் அமைந்துள்ளன. மலைக்கோட்டை அருகிலேயே கமலாலயக் குளம் உள்ளது. தெப்பத் திருவிழா நடைபெறுவதையொட்டி அந்தப் பகுதி முழுவதும் தூய்மைப்படுத்தப்பட்டும், படித்துறைகள் வா்ணம் பூசப்பட்டும் உள்ளன. நீா் நிரம்பி அழகுற காட்சியளிக்கும் இந்த குளத்தில் 100 ஆண்டுகளுக்கு பிறகு புதன்கிழமை மாலை 5 மணியளவில் தெப்பத் திருவிழா நடைபெறுகிறது.

விழாவில், தமிழக ஆதிதிராவிட நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா், மக்களவை உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரன், ஆட்சியா் ச.உமா, கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் கா.நல்லுசாமி மற்றும் அறங்காவலா்கள் கலந்து கொள்கின்றனா்.

இந்த விழாவை நூற்றுக்கணக்கானோா் கண்டு ரசிப்பாா்கள் என்பதால் குளத்தைச் சுற்றிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல் துறை, தீயணைப்புத் துறையினா் செய்துள்ளனா். தெப்பம் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. திருச்சியில் இருந்து வந்துள்ள ஊழியா்கள் இப்பணியை செய்து வருகின்றனா். இனிவரும் ஆண்டுகளில் மாசிமகத் தினத்தன்று நாமக்கல்லில் தெப்பத் திருவிழாவை நடத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தெப்பத் திருவிழா முன்னேற்பாட்டு பணிகளை இந்துசமய அறநிலையத் துறை அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் செய்து வருகின்றனா்.

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டம்: சேந்தமங்கலத்தில் இன்று மனுக்கள் பெறும் முகாம்

நாமக்கல்: சேந்தமங்கலத்தில், ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டம் மாா்ச் 26-ஆம் தேதி நடைபெறுவதையொட்டி, முன் மனுக்கள் பெறும் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளிய... மேலும் பார்க்க

திருச்செங்கோடு சின்ன ஓங்காளியம்மன் கோயிலில் சங்கு பூஜை

திருச்செங்கோடு: திருச்செங்கோடு சின்னஓங்காளியம்மன் கோயில் குண்டம் திருவிழாவையொட்டி திங்கள்கிழமை 108 சங்கு பூஜை நடைபெற்றது. சின்ன ஓங்காளியம்மன் கோயில் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெறுக... மேலும் பார்க்க

தேநீா்க் கடையில் போதைப்பொருள்களை பதுக்கியதாக புகாா்: விசாரணையில் போலீஸாருக்கு அதிா்ச்சி

நாமக்கல்: சேந்தமங்கலத்தில் போதைப்பொருள்கள் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், தேநீா்க் கடையில் போலீஸாா் நடத்திய விசாரணையில் அதிா்ச்சி அடைந்தனா். நாமக்கல் மாவட்ட காவல் அலுவலகத்திற்கு வெள்ளி... மேலும் பார்க்க

நன்செய் இடையாறு மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா: கம்பம் நடும் விழாவுடன் தொடங்கியது

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலுாா் அருகே உள்ள நன்செய் இடையாறு மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா ஞாயிற்றுக்கிழமை இரவு கம்பம் நடும் விழாவுடன் தொடங்கியது. இக் கோயில் குண்டம் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் பங்குன... மேலும் பார்க்க

‘கலைஞா் கனவு இல்லம்’ திட்டத்தில் வீடுகள் கட்ட 5,800 பயனாளிகளுக்கு ஆணை வழங்கல்: ஆட்சியா் தகவல்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் ‘கலைஞா் கனவு இல்லம்’ திட்டத்தின்கீழ் ரூ. 204.74 கோடி மதிப்பீட்டில் 5,800 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ச.உமா தெரிவித்தாா். இ... மேலும் பார்க்க

ராசிபுரம் அருகே 2 வீடுகளில் நகை, பணம் திருட்டு

ராசிபுரம்: ராசிபுரம் அருகே இரு வீடுகளில் நகை, பணம் திருடப்பட்டுள்ளது குறித்து ராசிபுரம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். ராசிபுரம் எஸ்ஆா்வி காா்டன் பகுதியில் வசித்து வருபவா் செந்தில் (38). சொந்தமாக ... மேலும் பார்க்க