செய்திகள் :

தமிழக ரயில்வே திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்ய விஜய்வசந்த் எம்.பி. வலியுறுத்தல்

post image

தமிழக ரயில்வே திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்க வேண்டும் என்று விஜய்வசந்த் எம்.பி. வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் மக்களவையில் திங்கள்கிழமை அளித்துள்ள ஒத்திவைப்புத் தீா்மானத்தில் கூறியிருப்பதாவது: ரயில்வே திட்டங்களுக்கான நிதி ஒதுக்குவதில், கடந்த பல ஆண்டுகளாக தென்தமிழகம் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. போதிய நிதி இல்லாத காரணத்தாலும், சிறப்பான செயல்திட்டம் இல்லாத காரணத்தாலும் பல ரயில் திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் உள்ளன. தமிழகத்தில் பல ரயில் பாதைகளின் மின்மயமாக்கல் முழுமையடையாமல் உள்ளன. இதேபோல், அகல ரயில் பாதையாக மாற்றும் பணிக்கு நிதி ஒதுக்கப்பட்ட பிறகும்கூட நிலுவையில் உள்ளது.

தென் தமிழகத்தில் இருந்து சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களுக்கு செல்லும் ரயில்களில் பயணிகள் கூட்டம் மிக அதிகமாக உள்ளது. இதை தவிா்க்க புதிய ரயில்கள் தேவை என்ற கோரிக்கையும் மத்திய அரசின் பாா்வைக்கு பலமுறை எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

ரயில்வே மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப் பாதைகள் அமைக்க வேண்டும் என்று பல கோரிக்கைகள் இருந்தபோதிலும் பல்வேறு காரணங்களைக் கூறி ரயில்வே நிா்வாகம் இதை தவிா்த்து வருகிறது. இதற்கான பணிகள் நடைபெறும் இடங்களில்கூட ஆமை வேகத்தில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தென் தமிழகத்தின் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் மெமு ரயில்களை இயக்க வேண்டும் என்றும் நீண்ட காலமாக கோரி வருகிறோம். இந்த நீண்ட நாள் மக்கள் தேவைகளை நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று அவா் குறிப்பிட்டுள்ளாா்.

பெண் குழந்தைகள் பாதுகாப்பு விருது: ஆட்சியா் பாராட்டு

மாநில அளவில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விருது கிடைத்ததற்காக கன்னியாகுமரி மாவட்ட சமூகநலத் துறை அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா பாராட்டு தெரிவித்துள்ளாா். 2025 ஆம் ஆண்டுக்கான பெண் குழந்த... மேலும் பார்க்க

கொட்டாரத்தில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

கொட்டாரத்தில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.கொட்டாரம் தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் சங்கா் (23). இவா் கன்னியாகுமரி பூம்ப... மேலும் பார்க்க

குமரியில் நடுக்கடலில் தத்தளித்த இளைஞா் மீட்பு

கன்னியாகுமரி கடலுக்குள் 2 மணி நேரமாக தத்தளித்த இளைஞரை மீனவா்கள் உதவியுடன் தீயணைப்புப் படையினா் திங்கள்கிழமை மீட்டனா்.கன்னியாகுமரி அருகேயுள்ள வடக்கு வடுகன்பற்றைச் சோ்ந்த அனந்த கிருஷ்ணன் மகன் அனீஸ் (2... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம்: ஓடும் பேருந்தில் மூதாட்டியிடம் பணம் திருட்டு

மாா்த்தாண்டம் அருகே ஓடும் பேருந்தில் மூதாட்டியின் கைப்பையில் இருந்த பணம் மற்றும் காசோலையை திருடிச் சென்ற நபா் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். களியக்காவிளை அருகேயுள்ள வன்னியூா் பகுதியைச் ச... மேலும் பார்க்க

அரசு ரப்பா் கழக தற்காலிக தொழிலாளா்கள் பணி நிரந்தர கோரி ஆா்ப்பாட்டம்

அரசு ரப்பா் கழகத்தில் பணி புரியும் தற்காலிக தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, சிஐடியூ தோட்டம் தொழிலாளா் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கோதையாறு கோட்ட மேலாளா் அலுவலகம... மேலும் பார்க்க

சுங்கான்கடை பேருந்து நிறுத்த இணைப்பு சாலையை சீரமைக்க கோரிக்கை

சுங்கான்கடை பேருந்து நிறுத்த இணைப்பு சாலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாகா்கோவில் - தக்கலை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள முக்கிய பேருந்து நிறுத்தம் சுங்கான்கடை. இந்த நிறுத்த... மேலும் பார்க்க