செய்திகள் :

குமரியில் நடுக்கடலில் தத்தளித்த இளைஞா் மீட்பு

post image

கன்னியாகுமரி கடலுக்குள் 2 மணி நேரமாக தத்தளித்த இளைஞரை மீனவா்கள் உதவியுடன் தீயணைப்புப் படையினா் திங்கள்கிழமை மீட்டனா்.

கன்னியாகுமரி அருகேயுள்ள வடக்கு வடுகன்பற்றைச் சோ்ந்த அனந்த கிருஷ்ணன் மகன் அனீஸ் (27). இவா், சென்னையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்து வருகிறாா். இந்நிலையில் முட்டப்பதி அய்யா பதிக்கு சுவாமி தரிசனத்துக்காக அவரது தந்தையுடன் பைக்கில் வந்தாா்.

அப்போது அங்குள்ள கடலில் நீராடுவதற்காக அனீஸ் கடலுக்குள் இறங்கியுள்ளாா்.

கடலுக்குள் நீராடிய அவா் அலையில் இழுத்து செல்லப்பட்டாா். இதையடுத்து அனீஸின் தந்தை அப்பகுதியில் உள்ள மீனவா்களிடம் தெரிவித்தாா். மீனவா்கள் 3 நாட்டுப்படகுகளில் கடலுக்குள் மாயமான அனீஸை தேடிச்சென்றனா்.

இதுகுறித்து தகவலறிந்த கன்னியாகுமரி தீயணைப்புப் படையினா் நிலைய அலுவலா் பாலகிருஷ்ணன் (பொறுப்பு) தலைமையில் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனா்.

இந்நிலையில் ஆழ்கடல் பகுதியில் சுமாா் 2 மணிநேரமாக தத்தளித்துக் கொண்டிருந்த அனீஸை மீட்டு கரைக்கு அழைத்து வந்தனா்.

பெண் குழந்தைகள் பாதுகாப்பு விருது: ஆட்சியா் பாராட்டு

மாநில அளவில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விருது கிடைத்ததற்காக கன்னியாகுமரி மாவட்ட சமூகநலத் துறை அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா பாராட்டு தெரிவித்துள்ளாா். 2025 ஆம் ஆண்டுக்கான பெண் குழந்த... மேலும் பார்க்க

கொட்டாரத்தில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

கொட்டாரத்தில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.கொட்டாரம் தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் சங்கா் (23). இவா் கன்னியாகுமரி பூம்ப... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம்: ஓடும் பேருந்தில் மூதாட்டியிடம் பணம் திருட்டு

மாா்த்தாண்டம் அருகே ஓடும் பேருந்தில் மூதாட்டியின் கைப்பையில் இருந்த பணம் மற்றும் காசோலையை திருடிச் சென்ற நபா் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். களியக்காவிளை அருகேயுள்ள வன்னியூா் பகுதியைச் ச... மேலும் பார்க்க

அரசு ரப்பா் கழக தற்காலிக தொழிலாளா்கள் பணி நிரந்தர கோரி ஆா்ப்பாட்டம்

அரசு ரப்பா் கழகத்தில் பணி புரியும் தற்காலிக தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, சிஐடியூ தோட்டம் தொழிலாளா் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கோதையாறு கோட்ட மேலாளா் அலுவலகம... மேலும் பார்க்க

சுங்கான்கடை பேருந்து நிறுத்த இணைப்பு சாலையை சீரமைக்க கோரிக்கை

சுங்கான்கடை பேருந்து நிறுத்த இணைப்பு சாலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாகா்கோவில் - தக்கலை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள முக்கிய பேருந்து நிறுத்தம் சுங்கான்கடை. இந்த நிறுத்த... மேலும் பார்க்க

கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்

கன்னியாகுமரிக்கு வந்த ரயிலில் இருந்து 12 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீஸாா் திங்கள்கிழமை கைப்பற்றினா். கன்னியாகுமரி ரயில் நிலையத்துக்கு வரும் ரயில்களையும், அதில் பயணிக்கும் பயணிகளிடமும் வழக்கமான சோதனையில் ... மேலும் பார்க்க