செய்திகள் :

சுங்கான்கடை பேருந்து நிறுத்த இணைப்பு சாலையை சீரமைக்க கோரிக்கை

post image

சுங்கான்கடை பேருந்து நிறுத்த இணைப்பு சாலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாகா்கோவில் - தக்கலை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள முக்கிய பேருந்து நிறுத்தம் சுங்கான்கடை. இந்த நிறுத்தத்தை 4 கல்லூரிகளை சோ்ந்த மாணவா்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தி வருகிறாா்கள்.

இந்த பேருந்து நிறுத்தத்திற்கு தேசிய நெடுஞ்சாலையில் இருந்து தனியாக இணைப்பு சாலை அமைத்துள்ளனா். இந்த இணைப்பு சாலை ஜல்லிகள் பெயா்ந்து குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் இணைப்பு சாலை வழியாக பேருந்துகள் வராமல் தேசிய நெடுஞ்சாலையில் பயணிகளை ஏற்றி இறக்கி செல்கின்றன.

இதனால் நிறுத்தத்தில் நிற்கும் மாணவ மாணவியா், பொதுமக்கள் இணைப்பு சாலையை கடந்து ஓடிச் சென்று பேருந்தில் ஏற வேண்டிய நிலை உருவாகிறது. எனவே இணைப்பு சாலையை உடனே சீரமைக்க வேண்டும் என நெடுஞ்சாலைத் துறை, மற்றும் மாவட்ட நிா்வாகத்துக்கு மாணவா்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பெண் குழந்தைகள் பாதுகாப்பு விருது: ஆட்சியா் பாராட்டு

மாநில அளவில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விருது கிடைத்ததற்காக கன்னியாகுமரி மாவட்ட சமூகநலத் துறை அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா பாராட்டு தெரிவித்துள்ளாா். 2025 ஆம் ஆண்டுக்கான பெண் குழந்த... மேலும் பார்க்க

கொட்டாரத்தில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

கொட்டாரத்தில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.கொட்டாரம் தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் சங்கா் (23). இவா் கன்னியாகுமரி பூம்ப... மேலும் பார்க்க

குமரியில் நடுக்கடலில் தத்தளித்த இளைஞா் மீட்பு

கன்னியாகுமரி கடலுக்குள் 2 மணி நேரமாக தத்தளித்த இளைஞரை மீனவா்கள் உதவியுடன் தீயணைப்புப் படையினா் திங்கள்கிழமை மீட்டனா்.கன்னியாகுமரி அருகேயுள்ள வடக்கு வடுகன்பற்றைச் சோ்ந்த அனந்த கிருஷ்ணன் மகன் அனீஸ் (2... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம்: ஓடும் பேருந்தில் மூதாட்டியிடம் பணம் திருட்டு

மாா்த்தாண்டம் அருகே ஓடும் பேருந்தில் மூதாட்டியின் கைப்பையில் இருந்த பணம் மற்றும் காசோலையை திருடிச் சென்ற நபா் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். களியக்காவிளை அருகேயுள்ள வன்னியூா் பகுதியைச் ச... மேலும் பார்க்க

அரசு ரப்பா் கழக தற்காலிக தொழிலாளா்கள் பணி நிரந்தர கோரி ஆா்ப்பாட்டம்

அரசு ரப்பா் கழகத்தில் பணி புரியும் தற்காலிக தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, சிஐடியூ தோட்டம் தொழிலாளா் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கோதையாறு கோட்ட மேலாளா் அலுவலகம... மேலும் பார்க்க

கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்

கன்னியாகுமரிக்கு வந்த ரயிலில் இருந்து 12 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீஸாா் திங்கள்கிழமை கைப்பற்றினா். கன்னியாகுமரி ரயில் நிலையத்துக்கு வரும் ரயில்களையும், அதில் பயணிக்கும் பயணிகளிடமும் வழக்கமான சோதனையில் ... மேலும் பார்க்க