செய்திகள் :

வயநாடு: புலியைத் தொடர்ந்து யானை, முழு கடையடைப்பிற்கு அழைப்பு! - என்ன நடக்கிறது?

post image

வனங்கள் அடர்ந்த கேரள மாநிலத்தின் வயநாட்டில் பல ஆண்டுகளாக தொடர்ந்து மேற்கொள்ளப்படும் முறையற்ற வளர்ச்சிப் பணிகளின் காரணமாக வனப்பகுதிகள் துண்டுபட்டு கிடக்கின்றன. வனவிலங்குகளின் வாழிடங்கள் மற்றும் வழித்தடங்களில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியிருப்பதால் மனித - வனவிலங்கு எதிர்கொள்ளல்கள் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

மனித வனவிலங்கு எதிர்கொள்ளல்கள்

காப்பி தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த ராதா என்ற பெண் கடந்த மாதம் புலி தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார். அவரின் உடல் பாகங்களையும் அந்த புலி தின்றிருந்தது. மக்கள் கொந்தளிப்பில் இருந்த நிலையில், அந்த புலி வனத்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் தப்பியது. பின்னர், அருகில் இருந்த குடியிருப்பு பகுதியில் மறுநாள் காலை சடலமாக மீட்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அடுத்த சில நாள்களில் வனத்துறையினர் மேற்கொண்ட ரோந்து பணியின் போது மூன்று புலிகள் இறந்து கிடப்பதைக் கண்டறிந்தனர். ஒரே நாளில் மூன்று புலிகள் உயிரிழந்த விவகாரம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தான் வயநாடு நூல்புழா பகுதியைச் சேர்ந்த பழங்குடி இளைஞர் மனு மற்றும் அவரின் மனைவி ஆகிய இருவரும்

மனித வனவிலங்கு எதிர்கொள்ளல்கள்

நேற்று முந்தினம் இரவு கடைத்தெருவிற்குச் சென்று வீடு திரும்புகையில் யானை தாக்கியதில்... இளைஞர் மனு‌ பரிதாபமாக உயிரிழந்துள்ளார். யானையிடம் இருந்து தப்பியோடி வனத்திற்குள் விடிய விடிய தவித்த அவரின் மனைவியை நேற்று காலை உயிருடன் மீட்டுள்ளனர். தொடர் வனவிலங்கு எதிர்கொள்ளல்களால் வனத்துறை மீது மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர். வயநாட்டில் முழு கடையடைப்பு நடத்த பல்வேறு அமைப்புகளும் அழைப்பு விடுத்துள்ளன. காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் உள்ளுர் மக்களிடம் தொடர்ந்து சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

ஆமை: தனிமை விரும்பிகள், மனிதனுக்கு மூத்தவை -ஆமைகள் பற்றிய 8 ஆச்சரிய உண்மைகள்!

ஆமைகள் மிகவும் வயதான தோற்றத்தைக் கொண்டிருக்கும். எதாவது ஆபத்து வந்தால் தனது ஓட்டுக்குள் சென்று ஒளிந்துகொள்ளும்.மிகவும் மெதுவாக இயங்கும். பெரும்பாலும் கிழங்கு, தண்டு, இலைகளை உண்ணும். வெகு சில கடலாமைகள்... மேலும் பார்க்க

Wayanad : இறந்த புலியின் வயிற்றில் பெண்ணின் தலைமுடி, கம்மல்! - வனத்துறை சொல்வதென்ன?

கேரள மாநிலம், வயநாடு மாவட்டம், மானந்தவாடி பகுதியைச் சேர்ந்த ராதா என்பவரை கடந்த சில தினங்களுக்கு முன்பு புலி தாக்கிக் கொன்றது. அவரின் உடல் பாகங்களையும் அந்த புலி தின்றுள்ளது. அடுத்தடுத்து மனிதர்களை தாக... மேலும் பார்க்க

கோவை: ரேஷன்அ​ரி​சியைத் தேடி வீட்டுக்குள் நுழைந்த யானை - பதறிய வட மாநில தொழிலாளர்கள்..!

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக ஒற்றை ஆண் காட்டு யானை குடியிருப்புப் பகுதிகளில் வலம் வந்து கொண்டிருக்கிறது. கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு வேலுமணி என்... மேலும் பார்க்க

``யானை – மனித மோதலை தவிர்க்க ஏ.ஐ கேமரா தொழில்நுட்பம்'' -களமிறங்கிய மலை கிராமம்

கோவை மாவட்டம் முழுவதுமே யானை – மனித மோதல் பிரச்னை அதிகரித்து வருகிறது. அதிலும் மேட்டுப்பாளையம் சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் யானை மற்றும் பிற வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக இருந்து வருகிறது. குறிப்பாக... மேலும் பார்க்க

மரக்காணம்: உப்பளத்தில் முகாம்; மீன்களை வேட்டையாடிய `சீகல்ஸ்' பறவைகள்! - Photo Clicks

மீன்களை வேட்டையாடும் "சீகல்ஸ்" பறவைகள்...மீன்களை வேட்டையாடும் "சீகல்ஸ்" பறவைகள்...மீன்களை வேட்டையாடும் "சீகல்ஸ்" பறவைகள்...மீன்களை வேட்டையாடும் "சீகல்ஸ்" பறவைகள்...மீன்களை வேட்டையாடும் "சீகல்ஸ்" பறவைக... மேலும் பார்க்க