செய்திகள் :

Trump: 'இந்தியா குறைக்க உள்ள இறக்குமதி வரிகள்... காரணம் ட்ரம்ப்-பா?' - ஆய்வறிக்கை சொல்வதென்ன?!

post image
அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்பதற்கு முன்பே, கனடா மீது வரி, மெக்சிகோ மீது வரி, சீனா மீது வரி... என்று வரிகளை அடுக்கிக்கொண்டு போனார் ட்ரம்ப்.

அப்போது அவர் பேசுகையில், "இந்தியா, அமெரிக்கா பொருட்கள் மீது அதிக வரிகளை விதித்து வருகிறது. இது தொடர்ந்தால், இந்தியா மீது அமெரிக்கா 100 சதவிகித வரியை விதிக்கும்" என்று கூறியிருந்தார். இப்போதும் அதே நிலைப்பாட்டில் தான் இருக்கிறார்.

இந்த நிலையில், Nomura என்னும் உலக அளவிலான நிதி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இப்போது இந்தியா அமெரிக்காவுடன் எந்த வர்த்தக பிரச்னையில் ஈடுபடவும் விரும்பவில்லை.

தற்போது தாக்கலான இந்திய பட்ஜெட்டில், எலக்ட்ரானிக்ஸ், ஜவுளித்துறை ஆகியவற்றில் இறக்குமதி வரியை குறைத்துள்ளது இந்திய அரசு.

ஆடம்பர வாகனங்கள், சோலார் செல்கள், ரசாயனம் ஆகியவற்றின் இறக்குமதி வரி மற்றும் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கிட்டத்தட்ட 30 பொருட்களின் இறக்குமதி வரியை குறைக்கவும், அமெரிக்காவில் இருந்து பாதுகாப்பு மற்றும் எனர்ஜி சம்பந்தமான விஷயங்களை மேலும் வாங்கவும் இந்திய அரசு ஆலோசித்து வருகிறது.

இந்தியா - அமெரிக்கா

பிற நாடுகளை ஒப்பிடும்போது, இந்தியா அமெரிக்காவின் மீது அதிக வரிகளை விதித்து வருகிறது.

இந்தியா அதிகம் ஏற்றுமதி செய்யும் டாப் நாடுகளில் ஒன்று அமெரிக்கா. இந்தியா ஏற்றுமதிகளில் 18 சதவிகிதம் அமெரிக்காவிற்கு சென்று சேர்கிறது. இது இந்திய ஜி.டி.பி-யில் 2.2 சதவிகிதத்தை கொண்டுள்ளது" என்று கூறுப்பட்டுள்ளது.

சமீப ஆண்டுகளில், இந்தியா - அமெரிக்காவின் வர்த்தக உறவு அதிகரித்து வருகிறது. இப்போது, அமெரிக்கா இந்திய பொருட்களின் மீது அதிக வரி விதித்தால், உறவில் விரிசல் விழலாம்... இந்தியாவின் ஏற்றுமதிகள் பாதிக்கும். முக்கியமாக, இந்த அதிக வரி விதிப்பு, ஏற்றுமதி பாதிப்புகள் இந்திய பொருளாதாரத்தை பாதிக்கும் என பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.

மசினகுடி: கட்டுமான பொருட்கள் அனுமதி விவகாரம்; அதிமுக எம்‌.எல்.ஏ மீது வழக்கு பதிவு! - என்ன நடந்தது?

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வெளி மண்டல பகுதிகளில் பல்வேறு கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளன. நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் வனவிலங்கு பாதுகாப்பு வழிமுறைகளை புலிகள் காப்பக ... மேலும் பார்க்க

DMK: "திமுக ஆட்சியில் அதிக பாலியல் வழக்குகள் பதிவாக இதான் காரணம்..." - அமைச்சர் ரகுபதி சொல்வதென்ன?

அண்ணாமலை பல்கலைக்கழக மாணவி மீதான பாலியல் கொடுமை, கிருஷ்ணகிரியில் 8ம் வகுப்பு படிக்கும் அரசுப் பள்ளி மாணவி மூன்று ஆசிரியர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், வேலூரில் ஓடும் ரயில் கர்ப்பிணிப் ப... மேலும் பார்க்க

"சாதி வாரிக் கணக்கெடுப்பு... இல்லையெனில் தமிழ்நாடே கலவர பூமியாகும்" - அன்புமணி காட்டம்

பாட்டாளி மக்கள் கட்சியின் 'தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான அவசர, அவசிய தேவைகள்' குறித்த கலந்தாய்வுக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது.இந்தக் கலந்தாய்வுக் கூட்டத்தில் , தமிழ்நாட்டி... மேலும் பார்க்க

'பட்ஜெட்டில் நிதியமைச்சர் அறிவித்த புதிய வருமான வரி சட்டம்..!' - எப்போது, எதற்காக வருகிறது?!

கடந்த 1-ம் தேதி தாக்கல் செய்த பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "அடுத்த வாரம் புதிய வருமான வரி சட்டம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்" என்று அறிவித்திருந்தார். இந்த சட்டத்திற்கு... மேலும் பார்க்க

Meta: 3000 பேரை பணி நிக்கம் செய்யும் மெட்டா; AI தொழில்நுட்பம்தான் காரணமா... பின்னனி என்ன?

கூகுள், மைக்ரோசாஃப்ட், ஆமேசான் போன்ற நிறுவனங்கள் தொடர்ந்து ஆயிரக் கணக்கான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து வருகிறது.அந்த வரிசையில் தற்போது ஃபேஸ்புக், வாட்ஸ் ஆஃப், இன்ஸ்டாகிராம் நிறுவனங்களின் தாய் நிறுவனம... மேலும் பார்க்க

US penny: ``இனி புதிய பென்னி நாணயங்களை அச்சிட வேண்டாம்'' -ட்ரம்ப் சொன்ன கணக்கு... தொடரும் அதிரடி!

'இனி நாணயங்களை அச்சிடாதீர்கள்' - இதோ ட்ரம்பின் அடுத்த அதிரடி வந்துவிட்டது. அமெரிக்காவில் 'பென்னி' என்ற நாணயத்தை இனி அச்சிட வேண்டாம் என்று இப்போது ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். பென்னி என்பது அமெரிக்காவில்... மேலும் பார்க்க