செய்திகள் :

Meta: 3000 பேரை பணி நிக்கம் செய்யும் மெட்டா; AI தொழில்நுட்பம்தான் காரணமா... பின்னனி என்ன?

post image
கூகுள், மைக்ரோசாஃப்ட், ஆமேசான் போன்ற நிறுவனங்கள் தொடர்ந்து ஆயிரக் கணக்கான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து வருகிறது.

அந்த வரிசையில் தற்போது ஃபேஸ்புக், வாட்ஸ் ஆஃப், இன்ஸ்டாகிராம் நிறுவனங்களின் தாய் நிறுவனமான மெட்டா, 3000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யப்போவதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இந்திய நேரப்படி இன்று காலை 5 மணி முதலே உலகெங்கும் இருக்கும் தங்களின் ஊழியர்களுக்கு பணிநீக்க மெயில்களை மெட்டா அனுப்பி வருவதாக மெட்டா ஊழியர்கள் தகவல்கள் தெரிவித்து வருகின்றனர்.

மெட்டா | பணிநீக்கம்

குறைந்த செயல்திறனை வெளிப்படுத்துதல், நிறுவனத்தில் புதிய மாறுபாடுகளைக் கொண்டு வருதல் உள்ளிட்ட காரணங்களின் அடிப்படையில் ஊழியர்கள் பணி நீக்க செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது.

இந்தப் பணிநீக்கம் பல கட்டங்களாக பிப் 11ம் தேதி முதல் பிப் 18ம் தேதி வரை நடைபெறும் என்று கூறப்படுகிறது. இந்த பணிநீக்க நடவடிக்கைகள் முடிந்தபிறகு, புதிய ஊழியர்களுக்கான பணிநியமன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

மெட்டா

மெட்டா நிறுவனம் செயற்கைத் தொழில்நுட்பத்தில் கைதேர்ந்த ஊழியர்களைப் புதிதாகப் பணியமர்த்தத் திட்டமிட்டிருப்பதாகவும், 'AI' தொழில்நுட்பத் துறையில் அதிக முதலீடுகள் செய்யப்போவதாகவும் தொழில்நுட்ப வல்லுநர் கூறுகின்றனர்.

மெட்டா, கூகுள் நிறுவனங்கள் மட்டுமல்ல, ஐ.டி நிறுவனங்கள் பல இந்த ஆண்டு பணி நீக்க நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கப்போகின்றன என்பது தொழில்நுட்ப வல்லுநர்களின் கணிப்பாக இருக்கின்றன. ஐ.டி துறையில் பணியாற்றுபவர்கள் முன்னெச்சரிக்கையுடன் எதையும் திட்டமிட்டுக்கொள்வது சிறந்தது என்றும் திடீர் பணிநீக்கம், பணி மாறுதல், புதிய பணியைத் தேடுதலால் ஏற்படும் மன அழுத்தங்களை நம்பிக்கையுடன் கையாளுதல் அவசியம் என்றும் அறிவுறுத்தி வருகின்றனர்.

DMK: "திமுக ஆட்சியில் அதிக பாலியல் வழக்குகள் பதிவாக இதான் காரணம்..." - அமைச்சர் ரகுபதி சொல்வதென்ன?

அண்ணாமலை பல்கலைக்கழக மாணவி மீதான பாலியல் கொடுமை, கிருஷ்ணகிரியில் 8ம் வகுப்பு படிக்கும் அரசுப் பள்ளி மாணவி மூன்று ஆசிரியர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், வேலூரில் ஓடும் ரயில் கர்ப்பிணிப் ப... மேலும் பார்க்க

"சாதி வாரிக் கணக்கெடுப்பு... இல்லையெனில் தமிழ்நாடே கலவர பூமியாகும்" - அன்புமணி காட்டம்

பாட்டாளி மக்கள் கட்சியின் 'தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான அவசர, அவசிய தேவைகள்' குறித்த கலந்தாய்வுக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது.இந்தக் கலந்தாய்வுக் கூட்டத்தில் , தமிழ்நாட்டி... மேலும் பார்க்க

'பட்ஜெட்டில் நிதியமைச்சர் அறிவித்த புதிய வருமான வரி சட்டம்..!' - எப்போது, எதற்காக வருகிறது?!

கடந்த 1-ம் தேதி தாக்கல் செய்த பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "அடுத்த வாரம் புதிய வருமான வரி சட்டம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்" என்று அறிவித்திருந்தார். இந்த சட்டத்திற்கு... மேலும் பார்க்க

US penny: ``இனி புதிய பென்னி நாணயங்களை அச்சிட வேண்டாம்'' -ட்ரம்ப் சொன்ன கணக்கு... தொடரும் அதிரடி!

'இனி நாணயங்களை அச்சிடாதீர்கள்' - இதோ ட்ரம்பின் அடுத்த அதிரடி வந்துவிட்டது. அமெரிக்காவில் 'பென்னி' என்ற நாணயத்தை இனி அச்சிட வேண்டாம் என்று இப்போது ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். பென்னி என்பது அமெரிக்காவில்... மேலும் பார்க்க

Delhi: ``முஸ்தஃபாபாத் தொகுதியின் பெயரை `ஷிவ்புரி' என மாற்றுவேன்'' -பாஜக மோகன் சிங்

சமீபத்தில் நடந்து முடிந்த டெல்லி சட்டமன்றத் தேர்தலில் முஸ்தஃபாபாத் தொகுதியில் வெற்றி பெற்ற மோகன் சிங் பிஷ்ட், முஸ்தஃபாபாதை 'ஷிவ்புரி' அல்லது ஷிவ் விஹார் என பெயர் மாற்றம் செய்வது குறித்து மீண்டும் வலிய... மேலும் பார்க்க

ADMK: ``எடப்பாடி நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்கள் இல்லை..'' -செங்கோட்டையன் ஓபன் டாக்

தமிழகத்தின் மேற்கு மண்டலமான கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட விவசாயிகள் மத்தியில் கடந்த அரை நூற்றாண்டுக்காலமாக இருந்துவந்த கோரிக்கையான `அத்திக்கடவு - அவிநாசி’ திட்டம் நிறைவேறியிருக்கிறது.ஜெயலலிதா மறைவுக... மேலும் பார்க்க