செய்திகள் :

'பட்ஜெட்டில் நிதியமைச்சர் அறிவித்த புதிய வருமான வரி சட்டம்..!' - எப்போது, எதற்காக வருகிறது?!

post image

கடந்த 1-ம் தேதி தாக்கல் செய்த பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "அடுத்த வாரம் புதிய வருமான வரி சட்டம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்" என்று அறிவித்திருந்தார்.

இந்த சட்டத்திற்கு கடந்த வெள்ளிக்கிழமை, மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது. அநேகமாக, இந்த மசோதா இந்த வாரம் நிறைவேறக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சட்டத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தப்பிறகு, நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பப்படும் என்று தகவல்கள் கூறப்படுகின்றன.

சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதித்துறை செயலாளர் காந்தா பாண்டே, "புதிய வருமான வரி சட்டம் எளிதாகவும், மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்றவாறும் இருக்கும்" என்று கூறியிருந்தார்.

எளிமைப்படுத்த...

இந்தக் கூற்றையும், இப்போது அமலில் இருக்கும் வருமான வரி சட்டத்தையும் சற்று ஒப்பீடு செய்து பார்ப்போம்.

இப்போது நாம் பின்பற்றி வரும் வருமான வரி சட்டம் 1961-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது ஆகும். இது சற்று அப்போதைய சூழலுக்கு ஏற்றவாறு உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், அதில் உள்ள சில பிரிவுகள், சில வார்த்தைகள் மக்கள் புரிந்துகொள்வதற்கு கடினமாக இருந்தது... இருக்கிறது.

இந்த சிக்கல்களை தீர்க்க தான், இப்போது புதிய வருமான வரி சட்டம் இயற்றப்பட உள்ளது என்கிறார்கள். இப்போது அறிமுகமாக இருக்கும் சட்டம் காலத்திற்கேற்ப தகவமைக்கப்பட்டிருக்கும், மக்களுக்கு ஏற்றதாக இருக்கும், முக்கியமாக, மக்கள் எளிதாக புரிந்துகொள்ளும்படியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த புதிய சட்டம் குறித்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் தாக்கல் செய்த பட்ஜெட்டிலேயே அறிவித்திருந்தார் நிர்மலா சீதாராமன். இதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டு, வரி செலுத்துபவர்கள், மக்கள், வரி சம்பந்தமான நிபுணர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. இதற்காக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வலைதளம் கூட அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில், இந்த வாரம், இந்த சட்டம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படலாம். பொறுத்திருந்து பார்ப்போம்!

DMK: "திமுக ஆட்சியில் அதிக பாலியல் வழக்குகள் பதிவாக இதான் காரணம்..." - அமைச்சர் ரகுபதி சொல்வதென்ன?

அண்ணாமலை பல்கலைக்கழக மாணவி மீதான பாலியல் கொடுமை, கிருஷ்ணகிரியில் 8ம் வகுப்பு படிக்கும் அரசுப் பள்ளி மாணவி மூன்று ஆசிரியர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், வேலூரில் ஓடும் ரயில் கர்ப்பிணிப் ப... மேலும் பார்க்க

"சாதி வாரிக் கணக்கெடுப்பு... இல்லையெனில் தமிழ்நாடே கலவர பூமியாகும்" - அன்புமணி காட்டம்

பாட்டாளி மக்கள் கட்சியின் 'தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான அவசர, அவசிய தேவைகள்' குறித்த கலந்தாய்வுக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது.இந்தக் கலந்தாய்வுக் கூட்டத்தில் , தமிழ்நாட்டி... மேலும் பார்க்க

Meta: 3000 பேரை பணி நிக்கம் செய்யும் மெட்டா; AI தொழில்நுட்பம்தான் காரணமா... பின்னனி என்ன?

கூகுள், மைக்ரோசாஃப்ட், ஆமேசான் போன்ற நிறுவனங்கள் தொடர்ந்து ஆயிரக் கணக்கான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து வருகிறது.அந்த வரிசையில் தற்போது ஃபேஸ்புக், வாட்ஸ் ஆஃப், இன்ஸ்டாகிராம் நிறுவனங்களின் தாய் நிறுவனம... மேலும் பார்க்க

US penny: ``இனி புதிய பென்னி நாணயங்களை அச்சிட வேண்டாம்'' -ட்ரம்ப் சொன்ன கணக்கு... தொடரும் அதிரடி!

'இனி நாணயங்களை அச்சிடாதீர்கள்' - இதோ ட்ரம்பின் அடுத்த அதிரடி வந்துவிட்டது. அமெரிக்காவில் 'பென்னி' என்ற நாணயத்தை இனி அச்சிட வேண்டாம் என்று இப்போது ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். பென்னி என்பது அமெரிக்காவில்... மேலும் பார்க்க

Delhi: ``முஸ்தஃபாபாத் தொகுதியின் பெயரை `ஷிவ்புரி' என மாற்றுவேன்'' -பாஜக மோகன் சிங்

சமீபத்தில் நடந்து முடிந்த டெல்லி சட்டமன்றத் தேர்தலில் முஸ்தஃபாபாத் தொகுதியில் வெற்றி பெற்ற மோகன் சிங் பிஷ்ட், முஸ்தஃபாபாதை 'ஷிவ்புரி' அல்லது ஷிவ் விஹார் என பெயர் மாற்றம் செய்வது குறித்து மீண்டும் வலிய... மேலும் பார்க்க

ADMK: ``எடப்பாடி நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்கள் இல்லை..'' -செங்கோட்டையன் ஓபன் டாக்

தமிழகத்தின் மேற்கு மண்டலமான கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட விவசாயிகள் மத்தியில் கடந்த அரை நூற்றாண்டுக்காலமாக இருந்துவந்த கோரிக்கையான `அத்திக்கடவு - அவிநாசி’ திட்டம் நிறைவேறியிருக்கிறது.ஜெயலலிதா மறைவுக... மேலும் பார்க்க