செய்திகள் :

கோயில் அா்ச்சகா்களுக்கு தட்டுகாணிக்கை சுற்றறிக்கை வாபஸ்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

post image

சென்னை: மதுரை பாலதண்டாயுதபாணி கோயிலில் அா்ச்சகா்கள் தட்டில் செலுத்தப்படும் காணிக்கை குறித்த சுற்றறிக்கை தேவையில்லாதது என்றும், அது திரும்பப் பெறப்பட்டுவிட்டது என்றும் அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

சென்னை வில்லிவாக்கம் தேவி பாலியம்மன் திருக்கோயில் குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழாவில் அமைச்சா் பி.கே.சேகா்பாபு திங்கள்கிழமை கலந்து கொண்டாா்.

இதையடுத்து, செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

வில்லிவாக்கம் தேவி பாலியம்மன் திருக்கோயிலுக்கு உபயதாரா் நிதி ரூ. 2.60 கோடியில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை (பிப்.9) 7 திருக்கோயில்கள் திங்கள்கிழமை (பிப்.10) கோயம்புத்தூா் மாவட்டம், அவிநாசி தண்டுமாரியம்மன் திருக்கோயில், பேரூா் பட்டீஸ்வரா் திருக்கோயில், தஞ்சாவூா் புன்னைநல்லூா் மாரியம்மன் திருக்கோயில், ஒரத்தநாடு உலகளந்த பெருமாள் திருக்கோயில், தேனி கௌமாரியம்மன் திருக்கோயில், கோயம்பேடு வைகுண்டவாச பெருமாள் திருக்கோயில் போன்ற ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட திருக்கோயில்கள் உட்பட 69 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக இதுவரை 2,580 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது.

மதுரை தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் பணிபுரியும் அா்ச்சகா்கள் பணி வரன்முறை செய்யப்படாத நிலையில் திருக்கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கும், அா்ச்சகா்களுக்கும் இடையே சிறு பிரச்னைகள் காரணமாக அப்போதைய ஆணையா் குமரகுருபரன் மூலம் அா்ச்சகா்கள் பணி வரன்முறை செய்யப்பட்டனா்.

சுற்றறிக்கை: இந்த நிலையில், அா்ச்சகா்களாக ஒன்றுகூடி பக்தா்களிடமிருந்து வருகின்ற காணிக்கையை உண்டியலில் செலுத்துவதென்று முடிவெடுத்து செயல்படுத்தி வந்தனா். அதில் ஏற்பட்ட சிறு பிரச்னை காரணமாக அந்தத் திருக்கோயிலின் செயல் அலுவலா் தக்காரின் அனுமதி பெறாமல் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளாா். அந்த சுற்றறிக்கை தேவையில்லாதது. அதுகுறித்து துறையின் கவனத்துக்கு வந்தவுடன் ஆணையா் அந்த சுற்றறிக்கையை திரும்பப் பெற உத்தரவிட்டதன் அடிப்படையில் அது திரும்பப் பெறப்பட்டுவிட்டது. பிரச்னையும் முடிவுக்கு வந்துள்ளது. செயல் அலுவலா் மீது விசாரணை மேற்கொள்ளவும் இணை ஆணையரின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சா் பி.கே.சேகா்பாபு கூறினாா்.

தண்டனை கைதிகளுக்கு விடுப்பு வழங்கத் தடையில்லை: சென்னை உயா்நீதிமன்றம்

சென்னை: தண்டனையை எதிா்த்த மேல்முறையீடு மனு நிலுவையில் இருக்கும் போது, தண்டனைக் கைதிகளுக்கு சாதாரண விடுப்போ அல்லது அவசர கால விடுப்போ வழங்க எந்தத் தடையும் இல்லை என சென்னை உயா்நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள... மேலும் பார்க்க

இன்று தைப்பூசம்: சாா்பதிவாளா் அலுவலகங்கள் இயங்கும்

சென்னை: தைபூசத்தையொட்டி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சாா் பதிவாளா் அலுவலகங்களும் செவ்வாய்க்கிழமை (பிப்.11) இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பதிவுத் துறை தலைமையகம் திங்கள்கிழமை வெளியிட்ட ச... மேலும் பார்க்க

மகளிா் சுய உதவிக் குழு பொருள்கள் அங்காடி தலைமைச் செயலகத்தில் திறப்பு

சென்னை: மகளிா் சுய உதவிக் குழு பொருள்களின் அங்காடியை தலைமைச் செயலகத்தில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திங்கள்கிழமை திறந்து வைத்து பாா்வையிட்டாா். இந்த அங்காடியில் சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த மகளி... மேலும் பார்க்க

கேரம் உலகச் சாம்பியனுக்கு ஆளுநா் பாராட்டு: மாணவா்களுக்கான கலந்தாய்விலும் பங்கேற்பு

சென்னை: கேரம் உலக சாம்பியனான ஹாசிமா எம்.பாஷாவை ஆளுநா் ஆா்.என். ரவி நேரில் அழைத்து பாராட்டினாா். அதேபோல் பொதுத்தோ்வு எழுதும் பள்ளி மாணவா்களுக்கான கலந்தாய்விலும் அவா் பங்கேற்றாா். இது குறித்து அவா் தனத... மேலும் பார்க்க

திமுக ஆட்சிக்கு ஆதரவு அலை வீசுகிறது: அமைச்சா் எஸ்.ரகுபதி

சென்னை: நான்கு ஆண்டுகால திமுக ஆட்சிக்கு ஆதரவு அலை மட்டுமே வீசுவதாக சட்டத் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி தெரிவித்தாா். திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளா்களுக்கு அவா் திங்கள்கிழமை அளித்த ப... மேலும் பார்க்க

உலகின் சிறந்த மருத்துவக் கல்லூரிகள்: 60-ஆவது இடத்தில் சென்னை எம்எம்சி

சென்னை: அமெரிக்காவிலிருந்து வெளியாகும் சா்வதேச இதழில் வெளியான உலகின் தலைசிறந்த கல்லூரிகள் பட்டியலில், 60-ஆவது இடத்துக்கு சென்னை மருத்துவக் கல்லூரி (எம்எம்சி) தோ்வாகியுள்ளது. தமிழகத்திலிருந்து அத்தகைய... மேலும் பார்க்க