செய்திகள் :

பிணைக் கைதிகளை விடுவிக்க ஹமாஸுக்கு கெடு விதித்த டிரம்ப்!

post image

காஸாவில் இருந்து மீதமுள்ள பிணைக் கைதிகளை சனிக்கிழமை நண்பகலுக்குள் விடுவிக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கெடு விதித்துள்ளார்.

இல்லையெனில், இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என்றும் மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பாலஸ்தீனத்தின் காஸா முனையில் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் படையினருக்கும் இடையே தொடங்கிய போா் ஓராண்டை கடந்து நீடித்து வந்தது. அமெரிக்கா, கத்தாா் மற்றும் எகிப்து தலைமையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து கடந்த மாதம் போா் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக இஸ்ரேல்-ஹமாஸ் இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் மூன்று கட்டமாக செயல்படுத்தப்பட உள்ளது.

முதல்கட்டமாக தற்போது 42 நாள்களுக்கு போா் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பெண்கள், குழந்தைகள் என 33 பிணைக் கைதிகளைப் படிப்படியாக ஹமாஸ் அமைப்பும், சுமாா் 1,900 பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேலும் விடுவித்து வருகின்றன.

இரண்டாவது கட்டத்தில் ஹமாஸ் படையினர் பிடித்து வைத்துள்ள அனைவரையும் விடுவிப்பார்கள். பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் கூடுதலாக விடுவிக்கும். காஸாவில் இருந்து இஸ்ரேல் படைகள் முழுமையாகத் திரும்பப் பெறப்படுவா்.

இதையும் படிக்க : காஸா மிகப்பெரிய ரியல் எஸ்டேட் தளம்: டிரம்ப்

இந்த நிலையில், திங்கள்கிழமை செய்தியாளர்களுடன் டிரம்ப் பேசியதாவது:

"ஹமாஸால் விடுதலை செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்ட பலர் ஏற்கெனவே உயிரிழந்திருக்க கூடும் என்ற அச்சம் உள்ளது. வருகின்ற சனிக்கிழமை பகல் 12 மணிக்குள் அனைத்து பிணைக் கைதிகளையும் ஹமாஸ் விடுவிக்க வேண்டும்.

இல்லையென்றால், அனைத்து ஒப்பந்தங்களும் முடிவுக்கு வந்துவிடும். சிறிது சிறிதாக அல்ல, பெரிதளவிலான தாக்குதல் நடத்தப்படும்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முன்னதாக கடந்த வாரம் வெள்ளை மாளிகையில் டிரம்ப்பை நேரில் சந்தித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்ஜமின் நெதன்யாகு பேச்சுவார்த்தை நடத்தினார்.

தொடர்ந்து இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்துப் பேசினர். அப்போது, காஸாவை அமெரிக்க கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக டிரம்ப் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

செய்யறிவு அனைவருக்குமானதாக மாற வேண்டும்: பிரதமர் மோடி

செய்யறிவு ஏற்கனவே, நமது கொள்கைகள், பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் சமூகத்தை வடிவமைக்கத் தொடங்கிவிட்டது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். எனவே, செய்யறிவு அனைவருக்குமானதாக மாற வேண்டும் என்று அவர் வலியுறு... மேலும் பார்க்க

லஞ்ச தடுப்புச் சட்டத்தை நிறுத்திவைத்தார் டிரம்ப்! அதானி மீதான வழக்கு என்னவாகும்?

வெளிநாடுகளில் நடக்கும் லஞ்ச முறைகேடுகள் தடுப்புச் சட்டத்தின் அமலாக்கத்தை நிறுத்திவைக்கும் உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் திங்கள்கிழமை கையெழுத்திட்டுள்ளார்.இதன்மூலம், தொழிலதிபர் கெளதம் அதான... மேலும் பார்க்க

ஓபன் ஏஐ என்ன விலை?: எலான் மஸ்க்

ஓபன் ஏஐ நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.செயல் நுண்ணறிவு தளம் சாட் ஜிபிடி-யின் தாய் நிறுவனமான ஓபன் ஏஐ-யை டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் விலைக்கு வாங்க விருப்பம் தெரிவித... மேலும் பார்க்க

கௌதமாலா: சாலை விபத்தில் 51 போ் உயிரிழப்பு

கௌதமாலா: மத்திய அமெரிக்கா நாடான கௌதமாலாவில் பாலத்தில் இருந்து பேருந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 51 போ் உயிரிழந்னா்.தலைநகா் கௌதமாலா சிட்டியின் புகா்ப் பகுதியில் பாலத்தின்மீது திங்கள்கிழமை அந்தப் பேர... மேலும் பார்க்க

இலங்கை: குரங்கால் ஏற்பட்ட மின்தடை!

தீவுநாடான இலங்கையில் மின்னேற்று நிலையத்தில் குரங்கு தாவியதால் அந்நாடு முழுவதும் மின்தடை ஏற்பட்டது. இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:கொழும்பு புகா்ப் பகுதியில் உள்ள மின்னேற்று நிலையத்தில் ஞாயிற்றுக்க... மேலும் பார்க்க

இரும்பு, அலுமினியத்துக்கு 25% கூடுதல் இறக்குமதி வரி

வாஷிங்டன்: உலகின் அனைத்து நாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்யப்படும் இரும்பு மற்றும் அலுமினியத்துக்கு கூடுதலாக 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளாா்.இது ... மேலும் பார்க்க