செய்திகள் :

கட்சிவிட்டுக் கட்சி தாவுவது காங்கிரஸ் கலாசாரம்! -ஆம் அத்மி

post image

புது தில்லி : ஆம் ஆத்மி கட்சிக்குள் எந்தவொரு சலசலப்பும் இல்லை என்று பஞ்சாப் மாநில முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.

கடந்த 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி மொத்தமுள்ள 117 இடங்களில் 92 இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸிடமிருந்து ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. அதனைத்தொடர்ந்து, அம்மாநில முதல்வராக பகவந்த் மான் பதவி வகித்து வருகிறார்.

இந்த நிலையில், தில்லியில் கடந்த பத்தாண்டுகளாக ஆளுங்கட்சியாக இருந்த ஆம் ஆத்மி கடந்த வாரம் நடைபெற்ற பேரவைத் தேர்தலில் பாஜகவிடம் வெற்றி வாய்ப்பை இழந்தது. இதனைத் தொடர்ந்து, ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் இன்று(பிப். 11) ஆம் ஆத்மி கட்சி முக்கிய தலைவர்களைச் சந்தித்துப் பேசியுள்ளார்.

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் பார்தாப் சிங் பாஜ்வா ஆம் ஆத்மி கட்சிக்குள் உள்கட்சி பூசல் அதிகரித்திருப்பதாக தெரிவித்துள்ளார். அவர் பேசும்போது, “ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த 30 எம்.எல்.ஏ.க்கள் கங்கிரஸுடன் தொடர்பிலிருப்பதாகக்” கூறினார்.

இன்னொருபுறம், ஆம் ஆத்மி மீதான விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் விதத்தில் பேசியுள்ள பகவந்த் மான், ஆம் ஆத்மி கட்சிக்குள் எந்தவொரு சலசலப்பும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

தில்லியில் செய்தியாளர்களுடன் பேசிய பகவந்த் மான், “காங்கிரஸ் தலைவர்கள் கடந்த காலங்களில் தாங்கள் இருக்கும் கட்சியைவிட்டு இன்னொரு கட்சியில் சென்றிணைந்து கொண்ட வரலாறு உண்டு. கட்சி தாவுவது காங்கிரஸ் கலாசாரம்; அப்படியிருக்கையில், அவர்கள் தங்களைப் பற்றி கவலைப்படாமல் பிறரைக் குறித்து விமர்சிக்கின்றனர்.

தில்லியில் காங்கிரஸுக்கு எத்தனை எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். காங்கிரஸ் தலைவர் பார்தாப் சிங் பாஜ்வா பஜ்வா இதுபோன்ற விமர்சனங்களை கடந்த காலங்களிலும் முன்வைத்துள்ளார். அவர்கள் அப்படி சொல்லிக் கொண்டேயிருக்கட்டும்.

நாங்கள் கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் சென்று அங்குள்ள மக்களை சந்தித்து இரத்தமும் வியர்வையும் சிந்தி இக்கட்சியை உருவாக்கியுள்ளோம்.

தில்லி மக்களுக்கு இன்னும் எங்கள் மீது பாசமிருப்பது வெளிப்படுகிறது. தில்லி மாடல் நிர்வாகத்தை பஞ்சாபிலும் செயல்படுத்தியுள்ளோம். பஞ்சாபில் 17 சுங்கச் சாவடிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மக்களால் தினசரி ரூ. 62 லட்சம் சேமிக்க முடிகிறது.

பஞ்சாபை மாநிலத்தையொரு முன்மாதிரி மாநிலமாக மாற்றி ஒட்டுமொத்த தேசத்துக்கும் எடுத்துக்காட்டாக மற்றுவோம்.

இனி வரும் நாள்களில் மகளிருக்கு ரூ. 1,000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் செயல்பாட்டுக்கு வரும். இது மக்களின் பணம், அதனை மக்களுக்காகவே செலவழிக்கிறோம்” என்றார்.

தனியார் கிடங்கிலிருந்து 400 குவிண்டால் ரேஷன் அரிசி பறிமுதல்!

இந்தூர்: இந்தூர் நிர்வாகமானது தனியார் கிடங்கிலிருந்து சுமார் 400 குவிண்டால் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.இந்தூர்-உஜ்ஜைன் சாலையில் உள்ள கிடங்கில் சட்டவிரோதமாக சேமித்து வைக்கப்பட்டு, குஜராத்துக்கு அன... மேலும் பார்க்க

கும்பமேளா: ரயிலில் இடம் கிடைக்காததால் ஏசி பெட்டிகளில் ஜன்னல்களை உடைத்து நுழைந்த பயணிகள்!

உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் திரண்டுள்ளது. அங்குள்ள திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிவிட்டு தங்கள் சொந்த ... மேலும் பார்க்க

தெலங்கானா: இன்றுமுதல் பீரின் விலையில் 15% உயர்வு!

தெலங்கானாவில் பீரின் விலையில் 15 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.தெலங்கானாவில் பீர் விலையை அதிகரிக்குமாறு கோரிய யுனைடெட் ப்ரூவெரிஸின் கோரிக்கையால் பீர் விலையில் 15 சதவிகிதம்வரையில் அதிகரித்து தெலங்கானா ... மேலும் பார்க்க

4 மனைவிகளுடன் குடும்பம் நடத்திய கல்யாணராமன் கைது!

இன்றைய இளைஞர்கள் பலர் திருமணம் செய்ய பெண் கிடைக்காமல் தவிக்கும் சூழலில், கேரளத்தைச் சேர்ந்தவொரு வாலிபர் இளம்பெண்கள் நால்வரை ஏமாற்றி திருமணம் செய்துகொண்டு குடும்பம் நடத்தி வந்திருப்பது தெரிய வந்துள்ளது... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற ஆசிரியை.. கண்ணியத்துடன் இறக்கும் உரிமையைப் பெறப்போகும் முதல் ஆள்!

தேவநாகரி: கர்நாடக மாநிலத்தில் பல்வேறு சட்டப்போராட்டங்களுக்குப் பின், ஓய்வுபெற்ற அரசுப் பள்ளி ஆசிரியை காரிபசம்மா (85) கண்ணியத்துடன் இறக்கும் உரிமையைப் பெறும் முதல் ஆளாக மாறப்போகிறார்.கண்ணியத்துடன் இறக்... மேலும் பார்க்க

விருந்து விஷமானது: உ.பி.யில் 40 பேர் உடல்நல பாதிப்பு!

உத்தரப் பிரதேசத்தின் ஃபரித்பூர் கிராமத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் விருந்து சாப்பிட்ட சுமார் 40 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றுள்ள... மேலும் பார்க்க