செய்திகள் :

4 மனைவிகளுடன் குடும்பம் நடத்திய கல்யாணராமன் கைது!

post image

இன்றைய இளைஞர்கள் பலர் திருமணம் செய்ய பெண் கிடைக்காமல் தவிக்கும் சூழலில், கேரளத்தைச் சேர்ந்தவொரு வாலிபர் இளம்பெண்கள் நால்வரை ஏமாற்றி திருமணம் செய்துகொண்டு குடும்பம் நடத்தி வந்திருப்பது தெரிய வந்துள்ளது.

தான் 4 பெண்களை மணம்புரிந்திருப்பதை தன்னுடைய 4 மனைவிகளுக்கும் தெரியாமல் பார்த்துக்கொண்டு படுசாமர்த்தியமாக மணவாழ்க்கை(களை) நடத்தி வந்துள்ளார் காசர்கோடு மாவட்டம் வெள்ளரிக்குன்று பகுதியைச் சேர்ந்த 36 வயது இளைஞர் தீபு திலீப்.

அதில் சுவாரசியம் என்னவென்றால்... இவர் கடைசியாக திருமணம் செய்துகொண்டுள்ள பெண்ணின் ஃபேஸ்புக்(முகநூல்) தோழியாக இருப்பவர், அன்னாரது இரண்டாவது மனைவியாவார்.

இந்த நிலையில், அவரது கடைசி மனைவிக்கு தனது கணவனை பற்றி இரண்டாவது மனைவி மூலம் தெரியவரவே தலையில் இடி இறங்கியது. அதனைத்தொடர்ந்து, காலம் தாழ்த்தாமல் உடனடியாக தனது மோசடிக்காரர் கணவன் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

வெள்ளரிக்குன்று பகுதியைச் சேர்ந்தவொரு இளம்பெண்ணை கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பே திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்துள்ளார் தீபு திலீப். இந்த தம்பதிக்கு 2 குழந்தைகளும் உள்ளனர். முதல் மனைவி மூலம் இரு குழந்தைகளுக்கு தந்தையான பின், தனது மனைவியிடமிருந்து தங்க நகைகளையும் பணத்தையும் சுருட்டிக்கொண்டு குடும்பத்தை விட்டுப்பிரிந்து மாயமாகிவிட்டார் திலீப்.

அதுவும் தனியாக அல்ல.. காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டதைத்தொடர்ந்து, அவரையும் அழைத்துக்கொண்டு தமிழகத்தில் அடைக்கலம் தேடி ஜோடியாக புறப்பட்டு வந்துவிட்டனர் திலீப்பும் அவரது இரண்டாவது மனைவியும்.

இரண்டாவது மனைவியோடும் வாழ்க்கை புளித்துப்போகவே, அவரையும் விட்டுப்பிரிந்து எர்ணாகுளத்தில் அடைக்கலம் தேடிச் சென்றுள்ளார் திலீப். அங்கு ஒரு பெண்ணுடன் பழகி அவரையும் மணம்புரிந்து குடும்பம் நடத்தியுள்ளார். அதுவும் கொஞ்சகாலத்துக்குத்தான்...

அதன்பின், ஆலப்புழையைச் சேர்ந்த பெண்ணுடன் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டு அவரையே தனது நான்காவது மனைவியாக்கிக் கொண்டுள்ளார். பாதிக்கப்பட்டுள்ள அந்த பெண்மணி அளித்துள்ள பாலியல் வன்கொடுமை புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் அந்த நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தன்னிடம் அறிமுகமாகும் இளம்பெண்களிடம், தான் ஒரு அநாதை என்றே தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு பழகுவது இவரது பழக்கவழக்கமாக இருந்து வந்துள்ளது. இதை நம்பி ஏமாறும் பெண்கள், அவர் மீது இரக்கப்பட்டு பாசமழை பொழிவதை தனக்கு சாதகமாக்கி, அவர்களை தனது காமப்பசிக்கு இரையாக்கிவிட்டு அதன்பின் வேறு ஊர்களுக்கு இடம்பெயர்வதே இவரது பாணி...

இந்த நிலையில், தலைமறைவாக இருந்த தீபுவை நேற்று(பிப். 10) அதிகாலை 2 மணியளவில் பத்தனம்திட்டையில் கைது செய்துள்ள கொன்னி காவல் துறையினர், இதுபோல பிற பெண்கள் யாரேனும் அவரால் ஏமாற்றப்பட்டுள்ளனரா? என்ற கோணத்தில் தீபுவிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெண்களே உஷார்!

தனியார் கிடங்கிலிருந்து 400 குவிண்டால் ரேஷன் அரிசி பறிமுதல்!

இந்தூர்: இந்தூர் நிர்வாகமானது தனியார் கிடங்கிலிருந்து சுமார் 400 குவிண்டால் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.இந்தூர்-உஜ்ஜைன் சாலையில் உள்ள கிடங்கில் சட்டவிரோதமாக சேமித்து வைக்கப்பட்டு, குஜராத்துக்கு அன... மேலும் பார்க்க

கும்பமேளா: ரயிலில் இடம் கிடைக்காததால் ஏசி பெட்டிகளில் ஜன்னல்களை உடைத்து நுழைந்த பயணிகள்!

உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் திரண்டுள்ளது. அங்குள்ள திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிவிட்டு தங்கள் சொந்த ... மேலும் பார்க்க

தெலங்கானா: இன்றுமுதல் பீரின் விலையில் 15% உயர்வு!

தெலங்கானாவில் பீரின் விலையில் 15 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.தெலங்கானாவில் பீர் விலையை அதிகரிக்குமாறு கோரிய யுனைடெட் ப்ரூவெரிஸின் கோரிக்கையால் பீர் விலையில் 15 சதவிகிதம்வரையில் அதிகரித்து தெலங்கானா ... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற ஆசிரியை.. கண்ணியத்துடன் இறக்கும் உரிமையைப் பெறப்போகும் முதல் ஆள்!

தேவநாகரி: கர்நாடக மாநிலத்தில் பல்வேறு சட்டப்போராட்டங்களுக்குப் பின், ஓய்வுபெற்ற அரசுப் பள்ளி ஆசிரியை காரிபசம்மா (85) கண்ணியத்துடன் இறக்கும் உரிமையைப் பெறும் முதல் ஆளாக மாறப்போகிறார்.கண்ணியத்துடன் இறக்... மேலும் பார்க்க

கட்சிவிட்டுக் கட்சி தாவுவது காங்கிரஸ் கலாசாரம்! -ஆம் அத்மி

புது தில்லி : ஆம் ஆத்மி கட்சிக்குள் எந்தவொரு சலசலப்பும் இல்லை என்று பஞ்சாப் மாநில முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.கடந்த 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற... மேலும் பார்க்க

விருந்து விஷமானது: உ.பி.யில் 40 பேர் உடல்நல பாதிப்பு!

உத்தரப் பிரதேசத்தின் ஃபரித்பூர் கிராமத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் விருந்து சாப்பிட்ட சுமார் 40 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றுள்ள... மேலும் பார்க்க