செய்திகள் :

21 சதங்கள்.. 39 அரைசதங்கள்.. 7200 ரன்கள்.. ஓய்வை அறிவித்த கேகேஆர் நட்சத்திரம்!

post image

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் முன்னாள் வீரர் ஷெல்டன் ஜாக்சன் ஓய்வை அறிவித்துள்ளார்.

15 வருடங்களாக விளையாடிவரும் சௌராஷ்டிரா அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ஷெல்டன் ஜாக்சன் செவ்வாய்க்கிழமை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.

ரஞ்சி டிராபியின் காலிறுதியில் சௌராஷ்டிரா அணி குஜராத்திடம் தோல்வியடைந்தது. இதன் மூலம் அவர் ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். 38 வயதான ஜாக்சன், 105 முதல்தரப் போட்டிகளில் 7200 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். அதிகபட்சமாக 186 ரன்கள் விளாசியுள்ளார். இவர் 21 சதங்கள் மற்றும் 39 அரைசதங்கள் அடித்துள்ளார்.

நடுவர் நிதின் மேனன் விலகல்! சாம்பியன்ஸ் டிராபிக்கான நடுவர்கள் யார்? -முழு விவரம்

ஜாக்சன் ஒரு பன்முகத் திறமைகொண்ட கிரிக்கெட் வீரராகவும், சிறந்த பீல்டராகவும் இருந்துள்ளார். சௌராஷ்டிரா அணிக்காக விக்கெட் கீப்பராகவும் இருந்துள்ளார். 2011 ஆம் ஆண்டு கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

2012-13 ஆம் ஆண்டு ரஞ்சி சீசனில் அவர் 4 அரைசதங்கள் மற்றும் 3 சதங்களை அடித்தார். இதில் கர்நாடகம் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு எதிரான காலிறுதி மற்றும் அரையிறுதியில் தொடர்ச்சியாக சதங்கள் விளாசினார். இதன் மூலம் சவுராஷ்டிரா அணி முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற உதவியது குறிப்பிடத்தக்கது.

சாம்பியன்ஸ் டிராபி: ஜேக்கப் பெத்தேல் விலகல்! மாற்று வீரர் யார்?

நடுவர் நிதின் மேனன் விலகல்! சாம்பியன்ஸ் டிராபிக்கான நடுவர்கள் யார்? -முழு விவரம்

சாம்பியன்ஸ் டிராபிக்கான தொடரில் இருந்து இந்திய நடுவர் நிதின் மேனன் விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும், சாம்பியன்ஸ் டிராபிக்கான நடுவர்கள் யார்? என்பதற்கான முழு விவரம் வெளியாகியுள்ளது.இந்தியா, பாகிஸ்தான்... மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் டிராபி: ஜேக்கப் பெத்தேல் விலகல்! மாற்று வீரர் யார்?

சாம்பியன்ஸ் டிராபியிலிருந்து இங்கிலாந்து அதிரடி ஆட்டக்காரர் ஜேக்கப் பெத்தேல் விலகுவதாக அறிவித்துள்ளார். இந்தியா, பாகிஸ்தான் உள்பட 8 அணிகள் பங்கேற்கும் 9-வது சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானின் கராச்... மேலும் பார்க்க

அசத்திய ஷர்துல் தாக்குர்..! காலிறுதியில் மும்பை வெற்றி!

ரஞ்சி கோப்பை தொடரில் மும்பை அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு தேர்வாகியுள்ளது. ஹரியாணா, மும்பை அணிக்கு நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் மும்பை அணி 152 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரஞ்சி கோப்பை வ... மேலும் பார்க்க

ஆஸி. ஒருநாள் தொடர்: இலங்கை அணி அறிவிப்பு!

ஆஸ்திரேலிய ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 2 டெஸ்ட் மற்றும் 2 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தத் தொடரின் முதல் டெஸ்டில் ... மேலும் பார்க்க

கம்பீர் செய்வது சரியில்லை..! முன்னாள் தேர்வுக்குழுத் தலைவர் விமர்சனம்!

முன்னாள் தேர்வுக்குழுத் தலைவர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் முடிவுகளை விமர்சித்து பேசியுள்ளார். இந்திய அணி தொடர்ச்சியாக தோல்விகளைச் சந்தித்து வந்தன. த... மேலும் பார்க்க

உயர்கோபுர மின் விளக்கால் ஒடிசா கிரிக்கெட் வாரியத்துக்கு புதிய சிக்கல்! ஏன்?

கிரிக்கெட் திடலில் இருந்த உயர்கோபுர மின் விளக்கால் ஒடிசா கிரிக்கெட் வாரியத்துக்கு புதிய சிக்கல் ஒன்று உருவாகியுள்ளது. உலகிலேயே அதிக வருவாய்மிக்க கிரிக்கெட் வாரியமான இந்திய கிரிக்கெட் வாரியத்தின்கீழ் 5... மேலும் பார்க்க