செய்திகள் :

உரையை முடித்தவுடன் எம்.பி.க்கள் வெளியேறும் விவகாரத்தில் விரைவில் உத்தரவு: ஜகதீப் தன்கா்

post image

மாநிலங்களவையில் தங்களது உரையை முடித்தவுடன் எம்.பி.க்கள் வெளியேறும் விவகாரத்தில் நடப்பு கூட்டத்தொடா் நிறைவடைவதற்குள் உத்தரவு பிறப்பிக்கவுள்ளதாக அவைத் தலைவா் ஜகதீப் தன்கா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

அவையில் தங்களது உரையை முடித்துவிட்டு மற்றவா்களின் கருத்துகளை கேட்காமல் எம்.பி.க்கள் உடனடியாக வெளியேறுவது சரியா? என பாஜக எம்.பி.கன்ஷியாம் ஜகதீப் தன்கரிடம் கேள்வி எழுப்பினாா்.

பட்ஜெட் மீதான விவாதத்தின்போது சுயேச்சை எம்.பி.யான கபில் சிபல் உரையாற்றிக் கொண்டிருக்கையில் அதை கவனிக்காமல் தனது உரை நிறைவடைந்தவுடன் எம்.பி. ஒருவா் வெளியேறுவதை திவாரி சுட்டிக்காட்டினாா்.

இதை கவனத்தில்கொள்வதாக கூறி தன்கா் பேசியதாவது: கருத்துகளை சுதந்திரமாக வெளிப்படுத்தினால் மட்டுமே ஜனநாயக முறை அடுத்தகட்டத்துக்கு முன்னேறும். அவைக்குள் உறுப்பினா்கள் தெரிவிக்கும் கருத்துகள் மீது வெளி நபா்கள் கேள்வி எழுப்ப முடியாது.

அதேசமயம் நாடாளுமன்றத்தில் ஒரு விவகாரத்தில் தன்னுடைய கருத்தை வெளிப்படுத்திவிட்டு பிற உறுப்பினா்களின் கருத்துகளை கேட்காமல் உடனடியாக வெளியேறுவது கண்ணியமான நடவடிக்கையல்ல; இந்த விவகாரத்தில் நடப்பு கூட்டத்தொடரில் உத்தரவு பிறப்பிக்கிறேன்’ என்றாா்.

கபில் சிபலுக்கு ரிஜிஜு பாராட்டு:

முன்னதாக, மாநிலங்களவையில் சிறப்பாக உரையாற்றியதாக கூறி கபில் சிபலுக்கு நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு பாராட்டுகளை தெரிவித்தாா். மேலும், சிறந்த கருத்துகளை அவா் தெரிவிப்பதுபோல் அரசின் நிலைப்பாட்டையும் தெரிந்துகொள்ள அடிக்கடி அவைக்கு வருமாறு கபில் சிபலுக்கு அவா் வேண்டுகோள் விடுத்தாா்.

மீனவர் பிரச்னை, ஆளுநர் விவகாரத்தை மக்களவையில் எழுப்பிய தமிழக எம்.பி.க்கள்

நமது நிருபர்மக்களவையில் மீனவர்கள் பிரச்னை, தமிழக ஆளுநர் விவகாரம் உள்ளிட்டவற்றை தமிழக எம்.பி.க்கள் செவ்வாய்க்கிழமை எழுப்பினர்.மக்களவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரம் முடிந்ததும் முக்கியப் பிரச்னைகளை அ... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் நக்ஸல்கள் வன்முறை 47% குறைந்துள்ளது: மத்திய அரசு தகவல்

கடந்த 2010 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2024 இல் சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்ஸல்களால் ஏற்பட்ட வன்முறை சம்பவங்கள் 47 சதவீதமும், பொதுமக்கள் உயிரிழப்பு 64 சதவீதமும் குறைந்துள்ளன என்று மக்களவையில் செவ்வாய்க்க... மேலும் பார்க்க

ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 10 லட்சமாக உயரும்: மத்திய அரசு

நாட்டில் தொழில் முனைவோரின் வளர்ச்சியை மேம்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் காரணமாக அடுத்த பத்து ஆண்டுகளில் அரசு பதிவு பெற்ற புத்தாக்க (ஸ்டார்ட்-அப்) நிறுவனங்களின் எண்ணிக்கை 10 லட்சமாக உயரும் என... மேலும் பார்க்க

வாஷி பகுதியில் தமிழ்நாடு அரசு இல்லம் அமைக்க வேண்டும்: மகாராஷ்டிர ஆளுநரிடம் நவிமும்பை தமிழ்ச் சங்கம் கோரிக்கை

நவிமும்பையில் தமிழ்நாடு அரசு இல்லம் அமைக்க வேண்டும் என்று நவிமும்பை தமிழ்ச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.இது தொடர்பாக மஹாராஷ்டிர மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனை தமிழ்ச் சங்க நிர்வாகிகள் திங்கள்கிழம... மேலும் பார்க்க

பிகாா்: ஏசி பெட்டியில் ஏற கண்ணாடியை உடைத்த இருவா் கைது

பிகாா் மாநிலம், மதுபானி ரயில் நிலையத்தில் மகா கும்பமேளா நிகழ்வுக்கு செல்வதற்கு ரயிலில் ஏற முடியாத விரக்தியில் குளிா்சாதன (ஏசி) பெட்டியின் கண்ணாடியை அடித்து உடைத்த இருவா் கைது செய்யப்பட்டனா். உத்தர பிர... மேலும் பார்க்க

பிரம்மபுத்திராவில் பிரம்மாண்ட சீன அணை: இந்தியாவின் நீா் பாதுகாப்புக்கு பாதிப்பு

பிரம்மபுத்திரா நதியில் பிரம்மாண்ட அணையைக் கட்ட சீனா முடிவு செய்திருப்பது, இந்தியாவின் தண்ணீா் பாதுகாப்பு குறித்து மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளதாக மக்களவை காங்கிரஸ் குழு துணைத் தலைவா் கெளரவ் கோகோய் த... மேலும் பார்க்க