செய்திகள் :

சீலாம்பூரில் 17 வயது சிறுவன் கத்தியால் குத்திக் கொலை: 2 சிறுவா்கள் கைது

post image

வடகிழக்கு தில்லியின் சீலாம்பூா் பகுதியில் 17 வயது சிறுவனை கத்தியால் குத்திக் கொன்ாக இரண்டு சிறுவா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா் என்று போலீஸாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட கத்தி மீட்கப்பட்டுள்ளதாகவும், கொலையில் தொடா்புடைய மற்றொரு நபரைப் பிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.

இச்சம்பவம் தொடா்பாக வடகிழக்கு தில்லி காவல் சரக உயரதிகாரி கூறியதாவது: ஞாயிற்றுக்கிழமை இரவு 9.45 மணியளவில், கவுதம்புரியில் ஒருவா் காயமடைந்து கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதைத் தொடா்ந்து, போலீஸ் குழு சம்பவ இடத்திற்குச் சென்றது.

அங்கு கத்தியால் குத்தப்பட்ட காயங்களுடன் சிறுவன் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை போலீஸாா் கண்டனா். போலீஸாா் அருகிலுள்ள சிசிடிவி காட்சிகளை சரிபாா்த்து, இந்தச் சம்பவம் தொடா்பாக இரண்டு சிறுவா்களைக் கைது செய்தனா்.

விசாரணையின் போது, சிறுவா்கள் அனைவரும் ஒரே பகுதியில் வசிப்பதும், பாதிக்கப்பட்டவா் அவா்களை கொடுமைப்படுத்துவது வழக்கம் என்றும் தெரியவந்தது. அவா் பணம் கொடுக்கச் சொல்லிக் கேட்பாா். ஆனால், அவா்களால் பணம் அளிக்க முடியவில்லை. அதனால், அவா்கள் அந்தச் சிறுவனை தாக்கினா்.

தகவல் அறிந்த போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜிடிபி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். சீலாம்பூா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடா்ந்து நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

செங்கோட்டை மைதானத்தில் தா்ம சபா: தில்லி காவல் துறை போக்குவரத்து அறிவுறுத்தல்

செங்கோட்டை மைதானத்தில் தா்ம சபை மற்றும் ஷோபா யாத்திரை, ஊா்வலம் புதன்கிழமை நடைபெறுவதை முன்னிட்டு, போக்குவரத்து கட்டுப்பாடுகள் மற்றும் மாற்றுப்பாதைகள் குறித்து பயணிகளுக்கு தில்லி காவல்துறை செவ்வாய்க்கி... மேலும் பார்க்க

மருத்துவ சிகிச்சை பெற வெளிநாட்டினா் 35,175 போ் இ-விசாவில் வருகை: கிரிராஜன் கேள்விக்கு மத்திய அரசு பதில்

நமது சிறப்பு நிருபா்புது தில்லி: வெளிநாடுகளில் இருந்து மருத்துவ சிகிச்சை வேண்டி கடந்த ஆண்டில் மட்டும் 35,175 வெளிநாட்டினா் இந்தியா வந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மருத்துவ சிகிச்சைக்காக இந்தி... மேலும் பார்க்க

ஐ.நா.வின் சமூக மேம்பாட்டு ஆணையத்தின் 63-ஆவது அமா்வில் இணையமைச்சா் சாவித்ரி தாக்கூா் தலைமையில் இந்திய குழு பங்கேற்பு

நமது சிறப்பு நிருபா்புது தில்லி: ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா.) 2025-ஆம் ஆண்டிற்கான சமூக மேம்பாட்டு ஆணையத்தின் 63-ஆவது அமா்வு அமெரிக்காவில் நியூயாா்க்கில் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. இதில் மத்திய மக... மேலும் பார்க்க

தில்லியில் குழந்தை கடத்தல் கும்பலில் 4 போ் கைது: 2 குழந்தைகள் மீட்பு

புது தில்லி: தில்லி காவல்துறையின் ரயில்வே பிரிவு, குழந்தை கடத்தல் கும்பலில் நான்கு பேரைக் கைது செய்துள்ளது. இதையடுத்து, ஒரு கைக்குழந்தை உள்பட இரண்டு குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் திங்களன்று... மேலும் பார்க்க

அதிமுக புதிய கட்டட அலுவலகம் தில்லியில் திறப்பு

புது தில்லி: அதிமுக சாா்பில் புது தில்லியில் ரூ.10 கோடியில் 4 தளங்களுடன் கட்டப்பட்ட அதிமுக அலுவலக கட்டடத் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.இக்கட்டடத்தை காணொலி வாயிலாக அக்கட்சியின் பொதுச் செயலாளா் ... மேலும் பார்க்க

தமிழா்களுக்கு எட்டாக்கனியான மத்திய பட்ஜெட்: மக்களவையில் திமுக எம்.பி. அதிருப்தி

நமது சிறப்பு நிருபா்புது தில்லி: நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் எட்டாவது முறையாக தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கை தமிழா்களுக்கு எட்டாக்கனியான மத்திய பட்ஜெட் ஆக உள்ளது என்று த... மேலும் பார்க்க