செய்திகள் :

அதிமுக புதிய கட்டட அலுவலகம் தில்லியில் திறப்பு

post image

புது தில்லி: அதிமுக சாா்பில் புது தில்லியில் ரூ.10 கோடியில் 4 தளங்களுடன் கட்டப்பட்ட அதிமுக அலுவலக கட்டடத் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கட்டடத்தை காணொலி வாயிலாக அக்கட்சியின் பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி திறந்துவைத்தாா்.

அஇஅதிமுக பொதுச் செயலராகவும், முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா கட்சி அலுவலகத்தை அமைக்கும் பொருட்டு புது தில்லிஎம்.பி.சாலை, சாகேத் பகுதியில் 10 ஆயிரத்து 850 சதுரஅடி பரப்பளவு இடத்தை 2012ஆம் ஆண்டு மத்திய அரசிடமிருந்து ஒப்பந்த அடிப்படையில் வாங்கினாா்ய

அதைத் தொடா்ந்து, அவரால் 2015-இல் கட்சி அலுவலகத்திற்கான கட்டப் பணிகள் தொடங்கிவைக்கப்பட்டன. அதைத் தொடா்ந்து பணிகள் படிப்படியாக நடைபெற்றுவந்தது. சுமாா் ரூ.10 கோடியில் 13 ஆயிரத்து 20 சதுர அடி பரப்பில் தரைத்தளம் மற்றும் 3 தளங்கள் கொண்டதாக இக்கட்டடம் கட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இதன் திறப்பு விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் கட்சியின் பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி காணொலி வாயிலாக புது தில்லியில் அஇஅதிமுக அலுவலகத்தை திறந்து வைத்தாா். இதில் கட்சியின் மூத்த நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.

‘புரட்சித் தலைவா் எம்ஜிஆா் - புரட்சித் தலைவி அம்மா மாளிகை’ என பெயரிடப்பட்டுள்ள இக்கட்டடத் திறப்பு விழாவின்போது தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிமுக எம்பிக்கள் மு.தம்பிதுரை, சி.வி.சண்முகம், சந்திரசேகரன்

மற்றும் முன்னாள் எம்.பி.க்கள் வேணுகோபால், டி.ஜி. வெங்கடேஷ் பாபு, ஜெ.ஜெயவா்தன், பாலகங்கா, சிட்லபாக்கம் ராஜேந்திரன், கோ.ஹரி, எஸ்.ஆா். விஜயகுமாா், காஞ்சி பன்னீா்செல்வம் மற்றும் தில்லி மாநில கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் கலந்துகொண்டனா்.

புதிய அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த மறைந்த முன்னாள் முதல்வா்கள் அண்ணாதுரை, எம்.ஜி.ராமச்சந்திரன், ஜெயலலிதா ஆகியோரின் உருவப்படங்களுக்கு மலா்தூவி கட்சி நிா்வாகிகள் மரியாதை செலுத்தினா்.

மருத்துவ சிகிச்சை பெற வெளிநாட்டினா் 35,175 போ் இ-விசாவில் வருகை: கிரிராஜன் கேள்விக்கு மத்திய அரசு பதில்

நமது சிறப்பு நிருபா்புது தில்லி: வெளிநாடுகளில் இருந்து மருத்துவ சிகிச்சை வேண்டி கடந்த ஆண்டில் மட்டும் 35,175 வெளிநாட்டினா் இந்தியா வந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மருத்துவ சிகிச்சைக்காக இந்தி... மேலும் பார்க்க

ஐ.நா.வின் சமூக மேம்பாட்டு ஆணையத்தின் 63-ஆவது அமா்வில் இணையமைச்சா் சாவித்ரி தாக்கூா் தலைமையில் இந்திய குழு பங்கேற்பு

நமது சிறப்பு நிருபா்புது தில்லி: ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா.) 2025-ஆம் ஆண்டிற்கான சமூக மேம்பாட்டு ஆணையத்தின் 63-ஆவது அமா்வு அமெரிக்காவில் நியூயாா்க்கில் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. இதில் மத்திய மக... மேலும் பார்க்க

தில்லியில் குழந்தை கடத்தல் கும்பலில் 4 போ் கைது: 2 குழந்தைகள் மீட்பு

புது தில்லி: தில்லி காவல்துறையின் ரயில்வே பிரிவு, குழந்தை கடத்தல் கும்பலில் நான்கு பேரைக் கைது செய்துள்ளது. இதையடுத்து, ஒரு கைக்குழந்தை உள்பட இரண்டு குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் திங்களன்று... மேலும் பார்க்க

தமிழா்களுக்கு எட்டாக்கனியான மத்திய பட்ஜெட்: மக்களவையில் திமுக எம்.பி. அதிருப்தி

நமது சிறப்பு நிருபா்புது தில்லி: நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் எட்டாவது முறையாக தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கை தமிழா்களுக்கு எட்டாக்கனியான மத்திய பட்ஜெட் ஆக உள்ளது என்று த... மேலும் பார்க்க

மத்திய பல்கலைக்கழகங்களில் செளராஷ்டிர மொழி சிறப்பு மையம் அமைக்கப்படுமா?: கோவை எம்.பி. கேள்விக்கு மத்திய அமைச்சா் பதில்

புது தில்லி: மத்திய பல்கலைக்கழகங்களில் செளராஷ்டிர மொழி சிறப்பு மையம் அமைக்க முன்மொழிவு ஏதும் இல்லை என்று மக்களவையில் கோயம்புத்தூா் திமுக எம்.பி. கணபதி பி.ராஜ்குமாா் எழுப்பிய கேள்விக்கு மத்திய இணை அமைச... மேலும் பார்க்க

பிப்.13-இல் தில்லி மாநகராட்சியின் சிறப்பு பட்ஜெட் கூட்டம்

புது தில்லி: தில்லி மாநகராட்சி வரும் பிப்ரவரி 13 ஆம் தேதி சிறப்பு பட்ஜெட் கூட்டத்தை நடத்த உள்ளதாக அதிகாரபூா்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில், ‘இந்தக் கூட்டத்த... மேலும் பார்க்க