பீகார்: மனைவியைப் பழிவாங்கச் சாலை விதிகளை மீறிய நபர்; காரணம் கேட்டு அதிர்ச்சி அட...
NEEK: `தனுஷ் பொறாமைப்படுவதைப் பார்த்தேன்' - இசைவெளியீட்டு விழாவில் சரண்யா பேசியதென்ன?
‘ராயன்’ படத்துக்குப் பிறகு ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தை இயக்கியிருக்கிறார் தனுஷ்.
இந்தப் படத்தில் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக அனிகா சுரேந்திரன் நடித்திருக்கிறார். தவிர மாத்யூ தாமஸ், பிரியா பிரகாஷ் வாரியர், வெங்கடேஷ் மேனன், சரண்யா ஆகியோர் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-11/3z1p1bro/neek3082024m2.jpg)
இப்படத்தின் பாடல்களும், டிரைலரும் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய சரண்யா பொன்வண்ணன், “ எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. எப்படி நான் நடித்த நாயகனைப் பற்றி இன்றும் பேசிக்கொண்டு இருக்கிறார்களோ, அதுபோல ‘VIP’படத்தை இன்றளவும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.
என்னை வெளியில் பார்க்கும்போது சிலர் தனுஷின் அம்மா வருகிறார் என்றுதான் சொல்வார்கள். அதைக் கேட்கும்போது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கும். சினிமா என்னை தனுஷோடு ஒரு குடும்பமாகவே இணைத்திருக்கிறது. இவ்வளவு நாள் தனுஷ் என் மகனாக இருந்தார். இந்த செட்டில் பவிஷ்தான் என் மகன். செட்டில் பவிஷ் உடன் நடிக்கும்போது தனுஷ் பொறாமைப்படுவதைப் பார்த்தேன்.
தனுஷை எல்லோரும் ‘மல்டி டாஸ்க்’ நபர் என்று சொல்வார்கள். அதையெல்லாம் விட அவர் ஒழுக்கமான மனிதர். கடினமாக உழைக்கக்கூடியவர். அதனால்தான் அவர் வெற்றி அடைந்துகொண்டே இருக்கிறார். பவிஷ் இந்தப் படத்தில் கடினமாக உழைத்திருக்கிறார். அதற்கான வெற்றி நிச்சயமாகக் கிடைக்கும்” என்று சரண்யா நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...