செய்திகள் :

தெலங்கானா: இன்றுமுதல் பீரின் விலையில் 15% உயர்வு!

post image

தெலங்கானாவில் பீரின் விலையில் 15 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.

தெலங்கானாவில் பீர் விலையை அதிகரிக்குமாறு கோரிய யுனைடெட் ப்ரூவெரிஸின் கோரிக்கையால் பீர் விலையில் 15 சதவிகிதம்வரையில் அதிகரித்து தெலங்கானா அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2019 - 2020 ஆம் ஆண்டிலிருந்து யுனைடெட் ப்ரூவெரிஸின் பீர்களின் அடிப்படை விலையில் மாற்றம் இல்லாததால், பெரும் இழப்புதான் ஏற்படுகிறது என்று அந்நிறுவனம் கூறியது.

பீர்களில் அதிகளவில் விற்பனையாகும் கிங்ஃபிஷர், கிங்ஃபிஷர் ஸ்ட்ராங், கிங்ஃபிஷர் அல்ட்ரா, கிங்ஃபிஷர் அல்ட்ராமேக்ஸ் முதலான பீர்களை தயாரிக்கும் யுனைடெட் ப்ரூவெரிஸ், பீர்களின் விலையை அதிகரிக்குமாறு தெலங்கானா அரசிடம் கோரியது.

இதையும் படிக்க:நிறுவனங்களைப் பழிவாங்கும் ஊழியர்கள்! ஏன்?

இருப்பினும், அந்நிறுவனத்தின் கோரிக்கையை தெலங்கானா அரசு கண்டுகொள்ளாததால், நிதி நெருக்கடி காரணமாக ஜனவரி 8 ஆம் தேதி முதல் பீர் விற்பனையை நிறுத்தியது.

இந்த நிலையில், மதுபான விற்பனை மூலம் அரசுக்கு வருவாய் கிடைப்பதில் தடை ஏற்படாமலிருக்க, யுனைடெட் ப்ரூவெரிஸின் கோரிக்கைக்கு தெலங்கானா அரசு அனுமதியளித்ததுடன், பீர் விலையில் 15 சதவிகிதம் உயர்த்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, இன்றுமுதல் (பிப். 11) 15 சதவிகித விலையேற்றத்துடன் பீர்கள் விற்பனை செய்யப்படும் என்று யுனைடெட் ப்ரூவெரிஸ் அறிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி, பீர் தொழில்துறையில் நிலுவையில் உள்ள பிரச்னைகளைத் தீர்க்குமாறும் முதல்வர் ரேவந்த் ரெட்டியிடம் பீர் தொழிற்துறையினர் கோரிக்கை விடுத்தனர்.

அதிக அளவிலான தயாரிப்பாக பீர்கள் இருப்பதால், உள்ளூரில் தயாரிக்கப்படும் பீர் மாநிலத்தின் விநியோகச் சங்கிலி, வேலைவாய்ப்பு, துணைத் தொழில்கள், தளவாடங்கள் துறையில் குறிப்பிடத்தக்க பொருளாதாரத் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

தனியார் கிடங்கிலிருந்து 400 குவிண்டால் ரேஷன் அரிசி பறிமுதல்!

இந்தூர்: இந்தூர் நிர்வாகமானது தனியார் கிடங்கிலிருந்து சுமார் 400 குவிண்டால் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.இந்தூர்-உஜ்ஜைன் சாலையில் உள்ள கிடங்கில் சட்டவிரோதமாக சேமித்து வைக்கப்பட்டு, குஜராத்துக்கு அன... மேலும் பார்க்க

கும்பமேளா: ரயிலில் இடம் கிடைக்காததால் ஏசி பெட்டிகளில் ஜன்னல்களை உடைத்து நுழைந்த பயணிகள்!

உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் திரண்டுள்ளது. அங்குள்ள திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிவிட்டு தங்கள் சொந்த ... மேலும் பார்க்க

4 மனைவிகளுடன் குடும்பம் நடத்திய கல்யாணராமன் கைது!

இன்றைய இளைஞர்கள் பலர் திருமணம் செய்ய பெண் கிடைக்காமல் தவிக்கும் சூழலில், கேரளத்தைச் சேர்ந்தவொரு வாலிபர் இளம்பெண்கள் நால்வரை ஏமாற்றி திருமணம் செய்துகொண்டு குடும்பம் நடத்தி வந்திருப்பது தெரிய வந்துள்ளது... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற ஆசிரியை.. கண்ணியத்துடன் இறக்கும் உரிமையைப் பெறப்போகும் முதல் ஆள்!

தேவநாகரி: கர்நாடக மாநிலத்தில் பல்வேறு சட்டப்போராட்டங்களுக்குப் பின், ஓய்வுபெற்ற அரசுப் பள்ளி ஆசிரியை காரிபசம்மா (85) கண்ணியத்துடன் இறக்கும் உரிமையைப் பெறும் முதல் ஆளாக மாறப்போகிறார்.கண்ணியத்துடன் இறக்... மேலும் பார்க்க

கட்சிவிட்டுக் கட்சி தாவுவது காங்கிரஸ் கலாசாரம்! -ஆம் அத்மி

புது தில்லி : ஆம் ஆத்மி கட்சிக்குள் எந்தவொரு சலசலப்பும் இல்லை என்று பஞ்சாப் மாநில முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.கடந்த 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற... மேலும் பார்க்க

விருந்து விஷமானது: உ.பி.யில் 40 பேர் உடல்நல பாதிப்பு!

உத்தரப் பிரதேசத்தின் ஃபரித்பூர் கிராமத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் விருந்து சாப்பிட்ட சுமார் 40 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றுள்ள... மேலும் பார்க்க