செய்திகள் :

தனியார் கிடங்கிலிருந்து 400 குவிண்டால் ரேஷன் அரிசி பறிமுதல்!

post image

இந்தூர்: இந்தூர் நிர்வாகமானது தனியார் கிடங்கிலிருந்து சுமார் 400 குவிண்டால் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

இந்தூர்-உஜ்ஜைன் சாலையில் உள்ள கிடங்கில் சட்டவிரோதமாக சேமித்து வைக்கப்பட்டு, குஜராத்துக்கு அனுப்புவதற்காக லாரிகளில் ஏற்றப்பட உள்ள நிலையில் கைப்பற்றப்பட்டது என்று மாவட்ட உணவு மற்றும் வழங்கல் கட்டுப்பாட்டாளர் எம்.எல். மாரு தெரிவித்தார். இதனையடுத்து கிடங்கு சீல் வைக்கப்பட்டது. இந்த அரிசியானது பொது விநியோக திட்ட பயனாளிகளுக்கு இலவசமாக விநியோகிக்கப்பட இருந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பயனாளிகளிடமிருந்து ரேஷன் அரிசியை கிலோவுக்கு ரூ.12 முதல் ரூ.16 வரை வாங்கி, இடைத்தரகர்களுக்கு விற்பனை செய்வதாக நாங்கள் அறிந்தோம். இடைத்தரகர்கள் கிலோ ஒன்றுக்கு ரூ.22 முதல் ரூ.23 வரை வியாபாரிகளுக்கு விற்பனை செய்த நிலையில் அவர்கள் கிலோவுக்கு ரூ.27 வரை விற்பனை செய்தனர்.

இந்த மோசடியில் சதீஷ் அகர்வால் மற்றும் ஐந்து பேர் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுவதாக மாரு தெரிவித்தார். சதீஷ் அகர்வாலுக்கு இதற்கு முன்பு மூன்று முறை அத்தியாவசிய பொருட்கள் வழங்கல் பராமரிப்பு சட்டம், 1980 இன் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

இது குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதையும் படிக்கவும்: இந்திய பங்குச் சந்தையில் கடந்த 5 நாட்களில் ரூ.16.97 லட்சம் கோடி இழப்பு!

பகலில் தினக்கூலி, இரவில் கொலைகாரர்கள்! ஹம்பி பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிர்ச்சி தகவல்!

பெங்களூரு : கர்நாடகத்தில் உள்ள சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலா தளமான ‘ஹம்பி’ இஸ்ரேல் தேசத்து பெண் சுற்றுலா பயணியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் தொடர்புடைய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.... மேலும் பார்க்க

உ.பி.யில் பட்டப்பகலில் இளைஞர் சுட்டுக் கொலை!

உத்தரப் பிரதேசத்தின் லக்கிம்பூர் கெரியில் பரபரப்பான சாலையில் 20 வயது இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மிஸ்ரானா பகுதியில் உள்ள புறக்காவல் நிலையத்திற்கு அருகில் ஒரு பரப... மேலும் பார்க்க

அவையில் தர்மேந்திர பிரதான் மன்னிப்பு கேட்க வேண்டும்: கனிமொழி

மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவையில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி கூறியுள்ளார். நாடாளுமன்றக் கூட்டத்தில் திங்கள்கிழமை பேசிய மத்திய அமைச்சர... மேலும் பார்க்க

நாடாளுமன்ற வளாகத்தில் திமுக கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம்!

மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் திமுக கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் பார்க்க

நீட் விண்ணப்பம்: திருத்தம் மேற்கொள்ள இன்று வரை அவகாசம்!

இளநிலை நீட் தேர்வுக்கான விண்ணப்பங்களில் மாணவர்கள் திருத்தம் மேற்கொள்வதற்கான அவகாசம் இன்றுடன்(மார்ச் 11) நிறைவடைகிறது.நாடு முழுவதும் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படி... மேலும் பார்க்க

மோரீஷஸில் பிரதமர் மோடிக்கு பிரம்மாண்ட வரவேற்பு!

2 நாள்கள் அரசுமுறை பயணமாக மோரீஷஸ் நாட்டுக்குச் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.மோரீஷஸ் தேசிய தினம் மாா்ச் 12-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதில் சிறப்பு விருந்தின... மேலும் பார்க்க