செய்திகள் :

Rohit: ``மைதானத்தில் பேசுவது வேண்டும் என்றே ஒருவரைக் காயப்படுத்த அல்ல..'' - ரோஹித் ஓப்பன் டாக்

post image

சாம்பியன் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலமாக 3 -வது முறையாக சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்ற அணி என்ற சாதனையை இந்திய அணி படைத்திருக்கிறது.

indian team

இந்திய அணியை வழிநடத்திய ரோஹித் சர்மா சாம்பியன் டிராபியில் வென்ற பிறகு பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார். அதில் பேசியிருக்கும் அவர், "எங்களிடம் உறுதியான அணி இருக்கிறது. அர்ப்பணிப்புள்ள அவர்களுடன் விளையாடும்போது மகிழ்ச்சியாக இருக்கும். ஒவ்வொருவருக்கும் அவர்களின் பங்கு மற்றும் பொறுப்புகள் என்ன என்பது தெரியும். மைதானத்தில் இருக்கும்போது உணர்ச்சிகள் அதிகமாக இருக்கும்.

அங்கு வைத்து பேசும் வார்த்தைகள் வேண்டும் என்றே ஒருவரைக் காயப்படுத்த அல்ல. எப்படியாவது வென்று விட வேண்டும் என்பதற்காகத்தான். வெற்றி அடைய நாங்கள் எதை வேண்டுமானாலும் செய்ய தயாராக இருக்கிறோம். நாங்கள் ஐந்து டாஸ்களிலும் தோற்றாலும் ஒரு போட்டியில் கூட தோல்வியைத் தழுவவில்லை. ஒரு தோல்வி கூட இல்லாமல் ஒரு தொடரை வெல்வது என்பது ஒரு பெரிய சாதனை, அது எனக்கு மிகுந்த திருப்தியைத் தருகிறது.

rohit sharma

உண்மையைச் சொல்லப்போனால் நாங்கள் கோப்பையை வெல்லும் வரை நாங்கள் அதைப் பற்றி யோசிக்கவில்லை. ஆனால் ஒரு போட்டியிலும் தோற்காமல் கோப்பையை வென்ற தருணம் எங்களுக்கு சிறப்பானதாக இருந்தது. அந்த வெற்றியை வார்த்தைகளில் சொல்வது கடினம்" என்று பேசியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

K.L.Rahul: ``இறங்குற இடமில்ல; பண்ற சம்பவம்தான் முக்கியம்"- ராகுல் ஏன் கொண்டாடப்பட வேண்டியவர்?

சாம்பியன்ஸ் டிராபியை இந்திய அணி வென்றிருக்கிறது. அத்தனை வீரர்களுமே அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையை மிகச்சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அதனால் இந்திய அணி சாம்பியன்ஸ் ... மேலும் பார்க்க

IPL: “ஐபிஎல் போட்டிகளின்போது புகையிலை, மதுபான விளம்பரங்கள் செய்யக்கூடாது”- மத்திய அமைச்சகம் உத்தரவு

ஐபிஎல் போட்டிகளின்போது மது மற்றும் புகையிலைப் பயன்பாடு தொடர்பான நேரடி மற்றும் மறைமுக விளம்பரங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் ஐபிஎல் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளது. 2025 ... மேலும் பார்க்க

Champion India: மீண்டும் சாம்பியன் டிராபி வென்ற இந்தியா; நடிகர்கள், முன்னாள் வீரர்களின் வாழ்த்துகள்

இந்தியா நியூசிலாந்து இடையே ஆன சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டி இன்று நடைபெற்று முடிந்துள்ளது. இறுதி போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றி இந்திய அணி சாதனை படைத்திரு... மேலும் பார்க்க

Rohit: லாய்ட், பாண்டிங், தோனி... எலைட் லிஸ்டில் ரோஹித் - ஒரே போட்டியில் பல சாதனைகள் படைத்த ஹிட்மேன்

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்திய அணி நேற்று நியூசிலாந்தை வீழ்த்தி, 2000-ம் ஆண்டில் இதேபோன்ற இறுதிப்போட்டியில் நியூசிலாந்திடம் அடைந்த தோல்வியைச் சரிகட்டியது.இந்தத் தொடரில் இறுதிப்போட்டிக்கு ... மேலும் பார்க்க

Virat Kohli: `ஷமியின் தாயார் பாதம் தொட்டு நெகிழ்ந்த விராட் கோலி' - இணையத்தில் வைரலாகும் வீடியோ

சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணி மூன்றாவது முறையாக (2002-ல் மட்டும் இந்தியாவும் இலங்கையும் கோப்பையைப் பகிர்ந்துகொண்டன) மகுடம் சூடியிருக்கிறது. துபாயில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் முதலில் பேட்ட... மேலும் பார்க்க

Mitchell Santner : ``நாங்கள் மிகச்சிறந்த அணியிடம் தோற்றிருக்கிறோம்" - தோல்வி பற்றி சாண்ட்னர்

பரபரப்பாக நடந்த இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை வென்றிருக்கிறது. 2013க்குப் பிறகு மீண்டும் இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை வென்ற... மேலும் பார்க்க