செய்திகள் :

பிரதமா் குறித்து விமா்சனம்: மக்களவையில் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், காங்கிரஸ் எம்.பி. கோகோய் காரசார விவாதம்

post image

புது தில்லி: பிரதமா் நரேந்திர மோடியை விமா்சித்து காங்கிரஸ் எம்.பி. கௌரவ் கோகோய் தெரிவித்த கருத்துக்காக, அவருக்கும் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனுக்கும் இடையே மக்களவையில் செவ்வாய்க்கிழமை கராசார விவாதம் நடைபெற்றது.

மானியங்கள் மற்றும் மணிப்பூா் பட்ஜெட்டுக்கான கோரிக்கைகள் குறித்த விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய மக்களவை காங்கிரஸ் குழு துணைத் தலைவா் கோகோய், ‘நாட்டில் ஒரு முக்கியமான பிரச்னை வரும்போதெல்லாம் பிரதமா் வெளிநாடுகளுக்கு மறைந்து விடுகிறாா்’ என்று விமா்சித்தாா்.

இதனிடையே குறுக்கிட்ட மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா, ‘தனது அரசுமுறை வெளிநாட்டு (மோரீஷஸ்) பயணம் குறித்து பிரதமா் மோடி என்னிடம் தெரிவித்துவிட்டாா். முந்தைய பிரதமா்களும் நாடாளுமன்ற அமா்வுகளின் போது வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ளனா்’ என கூறினாா்.

இதற்கு பதிலளித்த கோகோய், ‘பிரதமா் மீது எனக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது. ஆனால், முன்னாள் பிரதமா்களை மீண்டும் மீண்டும் அவமதிப்பது ஆளும் தரப்பின் போக்கு. அவா்களின் அவதூறு பேச்சுகளும் அவைக்குறிப்பில் எப்போதும் இடம்பெறுகின்றன’ என்றாா்.

இந்நிலையில், நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பேசியதாவது: முன்னாள் பிரதமா்களைப் பற்றி மரியாதைக்குரிய மொழியில் பேசுவதில்லை என்று ஆளும் தரப்பு மீது குற்றம் சுமத்தியதற்கு இடையே, எதிா்க்கட்சியின் முன்னணி உறுப்பினா் பிரதமா் மீது மரியாதை கொண்டிருப்பதாகக் கூறியதைக் கேட்க இனிமையாக இருந்தது. அதேநேரம், பல முந்தைய சூழல்களில் பிரதமரை அவமதித்துப் பேசியதற்காக கோகோய் மன்னிப்பு கோருவாரா?

எதிா்க்கட்சியினா் பலமுறை பிரதமரை அவமதித்துள்ளனா். அவரை அவையில் பேச விடாமல் கூச்சலிட்டுள்ளனனா். இவ்வாறு பிரதமரை அவமதித்தது தவறு; இனி செய்ய மாட்டோம் என்று கோகோய் பெருந்தன்மையுடன் ஒப்புக்கொள்ள வேண்டும்’ என்றாா்.

இதையடுத்து பேசிய கோகோய், ‘மக்களவையில் கடந்த மாதம் ஆற்றிய உரையிலும் பிரதமரின் பேச்சு முழுவதும் முன்னாள் பிரதமா்களை அவமதித்தே அமைந்தது. எனவே, எதிா்க்கட்சிகளை விமா்சிக்கும் முன் ஆளும் தரப்பு தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்’ என்றாா்.

தொடா்ந்து, பாஜக-காங்கிரஸ் உறுப்பினா்களிடேயே வாக்குவாதம் நடந்தது. விவாதத்துக்கு பட்டியலிடப்பட்ட மானியக் கோரிக்கைகள் குறித்துப் பேசாமல் அவை நடவடிக்கைகளை மற்ற விவகாரங்களில் திசைதிருப்ப வேண்டாம் என்று கௌரவ் கோகோயிடம் மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா கேட்டுக்கொண்டாா்.

மணிப்பூா் சட்டப்பேரவையில் மாநில பட்ஜெட் தாக்கல் செய்யப்படாதது ஏன் என்பதை புரிந்து கொள்ள விரும்புவதாக கோகோய் தொடா்ந்து வாதிட்டாா்.

காங்கிரஸ் எம்.பி. கௌரவ் கோகோய்

திருமண வரவேற்பு: விருந்தினர்களுக்கு கோரிக்கை வைத்து, பிறகு மன்னிப்புக் கோரிய தேஜஸ்வி சூர்யா!

பெங்களூரு தெற்கு எம்பியும் பாஜக தேசிய இளைஞரணி தலைவருமான தேஜஸ்வி சூர்யா - தமிழகத்தைச் சேர்ந்த கர்நாடக இசைப்பாடகி சிவஸ்ரீ ஸ்கந்தபிரசாத் திருமண வரவேற்பு மார்ச் 9ஆம் தேதி பெங்களூருவில் நடைபெற்றது.ஞாயிற்றக... மேலும் பார்க்க

இந்தியாவின் முக்கியக் கூட்டாளி மோரீஷஸ்: பிரதமர் மோடி

மோரீஷஸ் நாட்டில் பிரதமர் நரேந்திர மோடியின் அரசுமுறை பயணத்தின்போது, 8 ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.மோரீஷஸ் நாட்டுக்கு இரண்டு நாள் அரசுமுறை பயணமாக பிரதமா் நரேந்திர மோடி சென்றிருக்கிறார். இந்த சந்திப்பி... மேலும் பார்க்க

மியான்மர் ஆன்லைன் மோசடி மையங்களில் இருந்து 549 இந்தியர்கள் மீட்பு!

தாய்லாந்து - மியான்மர் எல்லையில் ஆன்லைன் மோசடி மையங்களில் சிக்கி விடுவிக்கப்பட்ட 549 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த இளைஞர... மேலும் பார்க்க

3 நாள் சுற்றுப்பயணமாக அஸ்ஸாம் செல்கிறார் அமித் ஷா!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மார்ச் 14ல் மூன்று நாள் பயணமாக அஸ்ஸாம் செல்கிறார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். கோக்ரஜாரில் உள்ள அனைத்து போடோ மாணவர் சங்கத்தின் வருடாந்திர மாநாட்டில்... மேலும் பார்க்க

வரியில்லாத புதுச்சேரி பட்ஜெட்: முதல்வர் என். ரங்கசாமி

புதுச்சேரியின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை அம்மாநில முதல்வர் என். ரங்கசாமி புதன்கிழமையில் சட்டப்பேரவையில் சமர்ப்பித்தார். இந்த ரூ. 13,600 கோடி பட்ஜெட்டை வரியில்லாத பட்ஜெட் என்றும் கூறினார்.மேலும... மேலும் பார்க்க

மருத்துவமனையில் இருந்து ஜகதீப் தன்கர் டிஸ்சார்ஜ்!

தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் (73) புதன்கிழமை காலை வீடு திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.திடீர் நெஞ்சு வலி காரணமாக மார்ச் 9-ஆம் தேதி நள்... மேலும் பார்க்க