செய்திகள் :

ஐசிசி ஒருநாள் தரவரிசை: ரோஹித் சர்மா, ரச்சின் அதிரடி முன்னேற்றம்! கோலிக்கு சரிவு!

post image

ஐசிசி ஒருநாள் தரவரிசையில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, நியூசிலாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் அதிரடியாக முன்னேற்றம் பெற்றுள்ளனர்.

சர்வதேச கிரிக்கெட் தரவரிசைப் பட்டியல் வாரந்தோறும் புதன்கிழமை வெளியிடப்படுவது வழக்கம். அதன்படி, இந்த வாரத்துக்கான ஒருநாள் தரவரிசைப் பட்டியல் இன்று(மார்ச் 12) வெளியிடப்பட்டுள்ளது. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்கள் இந்தப் பட்டியலில் முன்னேற்றம் பெற்றுள்ளனர்.

இந்தியா - நியூசிலாந்து அணிகள் விளையாடிய சாம்பியன்ஸ் டிராபியின் இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடி 76 ரன்கள் விளாசி ஆட்டநாயகன் விருது வென்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மா 2 இடங்கள் முன்னேறி மீண்டும் 3-வது இடத்தைப் பிடித்துள்ளார். இறுதிப் போட்டியில் ஒரு ரன்னில் ஆட்டமிழந்த விராட் கோலி ஒரு இடம் சரிந்து 5-வது இடத்தில் உள்ளார்.

இதையும் படிக்க: பிசிசிஐ ஒப்பந்தத்திலிருந்து நீக்கப்பட்ட பின் வாழ்வில் நிறைய கற்றுக்கொண்டேன்! -ஷ்ரேயஸ்

சாம்பியன்ஸ் டிராபியில் தொடர் நாயகன் விருது வென்ற நியூசிலாந்து அணியின் இளம் அதிரடி ஆட்டக்காரர் ரச்சின் ரவீந்திரா அதிரடியாக 14 இடங்கள் முன்னேறி 14 வது இடத்தைப் பிடித்துள்ளார். இந்திய இளம் வீரர் கில் முதலிடத்தில் தொடர்கிறார்.

ஐசிசி தரவரிசையில் முதல் 10 இடங்கள்

  1. ஷுப்மன் கில் -784 புள்ளிகள்

  2. பாபர் அசாம் - 770 புள்ளிகள்

  3. ரோஹித் சர்மா -756 புள்ளிகள்

  4. ஹென்ரிச் கிளாசன் -744 புள்ளிகள்

  5. விராட் கோலி - 736 புள்ளிகள்

  6. டேரில் மிட்செல் -721 புள்ளிகள்

  7. ஹாரி டெக்டர் -713 புள்ளிகள்

  8. ஸ்ரேயாஸ் ஐயர்-704 புள்ளிகள்

  9. சரித் அசலங்கா -694 புள்ளிகள்

  10. இப்ராஹிம் ஸ்த்ரான் - 676 புள்ளிகள்

இதையும் படிக்க: ரிஷப் பந்த் வீட்டுல விசேஷம்..! நடனமாடிய தல தோனி, சின்ன தல ரெய்னா!

சிறந்த வீரருக்கான ஐசிசியின் விருதை 3ஆவது முறையாக வென்ற ஷுப்மன் கில்..!

ஒவ்வொரு மாதமும் சிறப்பாக செயல்படும் வீரர்களை தேர்ந்தெடுத்து அவர்களில் ஒருவருக்கு அம்மாதத்துக்கான சிறந்த வீரர் விருதினை ஐசிசி வழங்கி வருகிறது. அந்த வகையில் பிப்ரவரி மாதத்துக்கான சிறந்த வீரர் விருதுக்கா... மேலும் பார்க்க

இந்திய கிரிக்கெட் வாரியமாக செயல்படும் ஐசிசி..! மே.இ.தீ. லெஜண்ட் கடும் விமர்சனம்!

மே.இ.தீ. அணியின் வேகப் பந்து வீச்சாளர்களின் தந்தையாக கருதப்படும் ஆண்டி ராபட்ஸ் ஐசிசியின் நடவடிக்கைகள் இந்தியாவுக்கு சாதகமாக இருப்பதாக கடுமையாக விமர்சித்துள்ளார்.ஐசிசி என்பது சர்வதேச கிரிக்கெட் வாரியமா... மேலும் பார்க்க

இன்டர்நேஷ்னல் மாஸ்டர் லீக்: இந்தியா உள்பட 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேற்றம்!

இன்டர்நேஷ்னல் மாஸ்டர் லீக் கிரிக்கெட் தொடரில் இந்தியா உள்பட 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேற்றமடைந்துள்ளது. மார்ச்.1 முதல் மாஸ்டர்ஸ் லீக் டி20 கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியா, ஆஸ... மேலும் பார்க்க

பிசிசிஐ ஒப்பந்தத்திலிருந்து நீக்கப்பட்ட பின் வாழ்வில் நிறைய கற்றுக்கொண்டேன்! -ஷ்ரேயஸ்

பிசிசிஐ ஒப்பந்தத்திலிருந்து நீக்கப்பட்ட பின் வாழ்வில் நிறைய கற்றுக்கொண்டதாக இந்திய நட்சத்திர வீரர் ஷ்ரேயஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.பாகிஸ்தானில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி அசத்தலாக வி... மேலும் பார்க்க

ரிஷப் பந்த் வீட்டுல விசேஷம்..! நடனமாடிய தல தோனி, சின்ன தல ரெய்னா!

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்தின் சகோதரி திருமண விழாவில் இந்திய கிரிக்கெட் அணியினர் கலந்துகொண்டு நடனமாடிய விடியோக்கள் இணையத்தில் வைராலாகி வருகிறது.12 ஆண்டுகளுக்குப் பின்னர் சாம்பியன்ஸ் டிர... மேலும் பார்க்க

ஐபிஎல்: சென்னை - மும்பை போட்டிக்கான டிக்கெட் ரூ. 1.23 லட்சம்!

சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடும் முதல் போட்டிக்கான அதிகாரபூர்வ டிக்கெட் விற்பனை தொடங்குவதற்கு முன்னதாகவே, மறுவிற்பனை தளத்தில் ரூ. 1.23 லட்சம் வரை டிக்கெட் விற்பனை செய்யப்படு... மேலும் பார்க்க