செய்திகள் :

'காற்று மாசு' - உலகின் டாப் 20 நகரங்களில் 13 இந்திய நகரங்கள்; எந்தெந்த மாநிலங்கள் மாசடைந்துள்ளன?

post image

உலகின் அதிகம் மாசடைந்த 20 நகரங்களில் 13 நகரங்கள் இந்தியாவில் இருப்பதாக மார்ச் 11ம் தேதி வெளியான அறிக்கை கூறுகிறது. அந்த அறிக்கையின்படி, அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள பைர்னிஹாட் நகரம் தான் இந்தியாவிலேயே அதிகம் மாசடைந்த நகரமாக உள்ளது. டெல்லி உள்ளிட்ட முக்கிய நகரங்கள் அதில் இடம்பெற்றுள்ளன.

பைர்னிஹாடில் உள்ளா இரும்பு, எஃகு ஆலைகள், உள்ளூர் தொழிற்சாலைகள், மதுபான ஆலைகள் அதன் காற்று மாசுக்கு முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது.

AIR Pollution

சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த காற்று தர தொழில்நுட்ப நிறுவனம் IQAir, உலக காற்று தர அறிக்கை 2024-ஐ வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி உலகிலேயே அதிக மாசடைந்த தலைநகரமாக டெல்லி முதலிடம் பிடித்துள்ளது. 2023ம் ஆண்டு அறிக்கையில் டெல்லி மூன்றாவது இடத்திலிருந்தது குறிப்பிடத்தக்கது.

13 இந்திய நகரங்கள் என்ன?

பைர்னிஹாட், அஸ்ஸாம்

டெல்லி

முல்லன்பூர், பஞ்சாப்

ஃபரிதாபாத், ஹரியானா

லோனி, உத்தரப்பிரதேசம்

புது டெல்லி, டெல்லி

குருக்ராம், ஹரியானா

கங்காநகர், ராஜஸ்தான்

கிரேட் நொய்டா, உத்தரப்பிரதேசம்

பிவாடி, ராஜஸ்தான்

முஸஃபர்நகர், உத்தரப்பிரதேசம்

ஹனுமன்கர்ஹ், ராஜஸ்தான்

நொய்டா, உத்தரப்பிரதேசம்

AIR Pollution

இந்தியாவைப் பொறுத்தவரை உத்தரப்பிரதேசம், டெல்லி, ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப் மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களில் உள்ள நகரங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

முதல் 20 இடங்களில் இருக்கும் மற்ற நகரங்களில் பாகிஸ்தானைச் சேர்ந்த லாகூர், முல்தான், பெஷாவர், சியால்கோட் ஆகிய நான்கு நகரங்களும் சீனா, சாட், கஜகஸ்தான் நாடுகளில் இருந்து தலா ஒரு நகரமும் இடம்பெற்றுள்ளது.

எனினும் ஒட்டுமொத்தமாக இந்தியாவில் காற்று மாசின் அளவு கொஞ்சம் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். 2023ம் ஆண்டு சராசரியாக காற்றில் ஒரு கியூபிக் மீட்டருக்கு 54.4 மைக்ரோகிராம் என்ற அளவில் இருந்து... 2024ம் ஆண்டு 50.6 மைக்ரோகிராம் என்ற அளவாக குறைந்துள்ளது.

ஆனால் டெல்லியில் 102.4 மைக்ரோகிராம் என்பதிலிருந்து 108.3 மைக்ரோகிராமாக உயர்ந்துள்ளது.

Tiger death: கூடலூரில் மேலும் ஒரு புலியின் சடலம் கண்டெடுப்பு; தீவிர விசாரணையில் வனத்துறை

உலக அளவில் வங்கப் புலிகளை அதிக எண்ணிக்கையில் கொண்டிருக்கும் வனப்பகுதியாக நீலகிரி பல்லுயிர் வள மண்டலம் விளங்கி வருகிறது. புலிகள் காப்பகம் மட்டுமின்றி அதனை ஒட்டியுள்ள தனியார் தேயிலை, காப்பி தோட்டங்களிலு... மேலும் பார்க்க

`ஒரு தலைவன்; 5 தலைவிகள்’ ; குட்டியை மறைக்கும், மாம்பிஞ்சுக்கு ஏங்கும்..! - இது மான்களின் வாழ்க்கை

மான்களை வேட்டையாட, புலியோ, சிறுத்தையோ, செந்நாய்களோ, நரிகளோ, கழுதைப்புலிகளோ தூரத்தில் வரும்போதே, மரங்களின் மீது உட்கார்ந்திருக்கிற மயில்கள் அகவல் செய்து மான்களை எச்சரித்து விடுமாம். மயில்கள் ஏன் மான்கள... மேலும் பார்க்க

Valentine's Day: `ஓநாயின் இரைகளுக்கு உங்கள் Ex-ன் பெயரை வைக்க வாய்ப்பு’ - ஏன் தெரியுமா?

`உங்கள் முன்னாள் காதலியின் பெயரை ஓநாய்க்கு வீசப்படும் இரைகளுக்கு நீங்கள் வைப்பீர்களா?’... என்ன கேள்வி இது என்று தோன்றும். ஆனால் அமெரிக்காவின் டெக்சாஸில் இருக்கும் ஒரு காட்டுயிர் சரணாலயத்தில் இவ்வாறு ச... மேலும் பார்க்க

பாம்பு ஏன் தனது தோலை உரிக்கிறது தெரியுமா? - ஆச்சர்யப் பின்னணி

பாம்பு தனது தோலை உரிக்கும் போது அவற்றைப் பார்த்தால் கொத்துமென்று கேள்விப்பட்டிருப்போம். அது உண்மையா? எதற்காக இவ்வாறு பாம்பு தன் தோலை உரித்துக் கொள்கின்றன என்பது குறித்துத் தெரிந்து கொள்ளலாம்.மனிதர்களி... மேலும் பார்க்க

கோவை: 6 ஆண்டுகளுக்குப் பிறகு தடாகம் பகுதிக்கு வந்த சின்னத்தம்பி யானை!

கோவை தடாகம், ஆனைக்கட்டி, மருதமலை சுற்றுவட்டார பகுதிகளில் உலா வந்த சின்னத்தம்பி என்ற காட்டு யானை மக்களிடம் நன்கு பிரபலம். அதன் சேட்டைகள் மற்றும் நடவடிக்கைகளுக்கு பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. அதேநேர... மேலும் பார்க்க