இனியொரு பயங்கரவாதச் செயல் நிகழாதென உறுதிப்படுத்த வேண்டும்! எழுத்தாளர்கள் - கலைஞர...
பாகிஸ்தான் ஏவுகணைகளை அசால்டாக சுட்டு வீழ்த்திய ‘எஸ்-400’ வான் பாதுகாப்பு அமைப்பு
15 ராணுவத் தளங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ஏவுகணைகளை ரஷிய தயாரிப்பான ‘எஸ்-400’ வான் பாதுகாப்பு அமைப்பைக் கொண்டு அசால்டாக இந்தியா முறியடித்தது.
பஹல்காம் தாக்குதலுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையில் பாகிஸ்தானின் 9 இடங்களில் பல்வேறு பயங்கரவாதக் குழுக்களின் பயிற்சி முகாம்கள் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு ஏவுகணைத் தாக்குதலில் அழிக்கப்பட்டன.
இந்தத் தாக்குதலில் பயங்கரவாதிகள் மட்டுமே குறிவைக்கப்பட்டதாகவும், பொதுமக்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்றும் இந்தியா உறுதிப்படுத்தியிருந்தது. எனினும், ஜம்மு-காஷ்மீா் எல்லையில் மோதலைத் தீவிரப்படுத்தி, மக்களின் குடியிருப்புகள் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதன் தொடா்ச்சியாக ஜம்மு-காஷ்மீா், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் ஆகிய வடக்கு மற்றும் மேற்கு எல்லையோர மாநிலங்களை வான்வழியாகத் தாக்கும் பாகிஸ்தான் முயற்சியை இந்தியா வெற்றிகரமாக முறியடித்தது.
இதனிடையே, ஜம்மு, பதான்கோட், உதம்பூர் மற்றும் வேறு சில இடங்களில் உள்ள ராணுவ நிலையங்களைத் தாக்க பாகிஸ்தான் ராணுவம் மேற்கொண்ட முயற்சியை இந்தியா வியாழக்கிழமை இரவு ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் மூலம் முறியடித்தது.
அதைத் தொடர்ந்து காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநில எல்லையோரங்களில் 15 ராணுவத் தளங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ஏவுகணைகளை, இந்தியாவால் ‘சுதா்சன சக்ரா’ என்று பெயா் சூட்டப்பட்டுள்ள ரஷிய தயாரிப்பான ‘எஸ்-400’ வான் பாதுகாப்பு அமைப்பைக் கொண்டு அசால்டாக இந்தியா முறியடித்தது.
ஜம்மு விரையும் முதல்வர் உமர் அப்துல்லா
400 கி.மீ. தொலைவில் உள்ள இலக்குகளையும் துல்லியமாகத் தாக்கி, வீழ்த்தும் திறன் கொண்ட ‘எஸ்-400’ வான் பாதுகாப்பு அமைப்பு மூலம் பாகிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாத், லாகூர், ராவல்பிண்டி, பெஷாவர், சியால்கோட் பகுதிகளில் இந்திய ராணுவம் ஏவுகணைகள் மற்றும் எதிரியின் வான் பாதுகாப்பு அமைப்புகளைத் தாக்குவதற்காக தயாரிக்கப்பட்ட ‘ஹாா்பி’ ட்ரோன்கள் மூலம் தாக்கியது.
மேலும், இஸ்லாமாபாத்தில் உள்ள பிரதமர் ஷெபாஷ் ஷரிப் வீடு அருகே குண்டு மழை பொழிந்ததால் அந்தபகுதியில் பயங்கர சப்தம் கேட்டதை அடுத்து அசாதாரண சூழல் நிலவியது.
மிகப்பெரிய கட்டமைப்பான ‘எஸ்-400’ வான் பாதுகாப்பு அமைப்பின் ஒவ்வொரு ஆயுதமும் பல கிலோமீட்டர் கண்காணிக்கும் திறன் பெற்றது. இது ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதிகள், பஞ்சாப் பதான்கோட் எல்லைப் பகுதி, ராஜஸ்தான், குஜராத் எல்லைப் பகுதிகள் என மூன்று ‘எஸ்-400’ நிலைநிறுத்தப்பட்டு தொடந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன.