செய்திகள் :

பாகிஸ்தான் தனது பாவங்களுக்கு விலை கொடுக்க நேரிடும்: காங்கிரஸ் சாடல்

post image

ஜம்மு நகரம் மற்றும் பிற பகுதிகளில் இந்திய ராணுவ நிலைகளை குறிவைத்து வியாழக்கிழமை இரவு பாகிஸ்தான் நடத்திய ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் நடத்திய தாக்குதல் தோல்வியை அடுத்து தொடர் குண்டுவெடிப்பு மற்றும் சைரன்கள் சப்தங்களைத் தொடர்ந்து ஜம்மு-காஷ்மீர் முழுவதும் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், பாகிஸ்தான் தனது பாவங்களுக்கு விலை கொடுக்க நேரிடும் என்று காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்திற்குட்பட்ட பஹல்காம் சுற்றுலாத் தளத்தின் பைசாரன் பள்ளத்தாக்கில் ஏப். 22 ஆம் தேதி சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தத் தாக்குதலில் அப்பாவி மக்கள் 26 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில், 13 நாள்கள் கழித்து ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தான் எல்லை மற்றும் பாகிஸ்தான் எல்லைக்குட்பட்ட காஷ்மீரில் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள் மீது பாதுகாப்புப் படையினர் செவ்வாய்க்கிழமை (மே 6) நள்ளிரவு துல்லி ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தினர்.

இந்தத் தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்பின் 4 இலக்குகள், லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் 3 இலக்குகள் மற்றும் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் 2 தளங்கள் என 9 பயங்கரவாத முகாம்கள் தகர்க்கப்பட்டன.

இந்த நிலையில், ஜம்மு, பதான்கோட், உதம்பூர் மற்றும் பிற பகுதிகளில் உள்ள ராணுவ நிலைகள் மற்றும் சத்வாரி, சம்பா, ஆர்எஸ் புரா மற்றும் ஆர்னியாவில் உள்ள பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள் மீது பாகிஸ்தான் ட்ரோன் மற்றும் எட்டு ஏவுகணைத் தாக்குதலை வியாழக்கிழமை இரவு நடத்தியது.

இதையடுத்து பாகிஸ்தானின் அனைத்து ஆளில்லாத ட்ரோன் மற்றும் ஏவுகணைகளையும் இந்தியாவின் ‘ஒருங்கிணைந்த ஆளில்லா விமான எதிா்ப்பு’ அமைப்பு ஒவ்வொரு ஏவுகணையையும் இடைமறித்து வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தியது. பாகிஸ்தான் தாக்குதலை நிரூபிக்கும் வகையிலான தடயங்கள் பல இடங்களிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.

ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல் தோல்வியை மறைப்பதற்காக பாகிஸ்தான் ராணுவத்தினர் கட்டுப்பாட்டுக் கோடு மற்றும் ஜம்மு- காஷ்மீரின் பல இடங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தியது.

உரி, குப்வாரா (கர்னா, தங்தார்), பந்திபோரா (குரேஸ்), ரஜெளரி மற்றும் ஆர்.எஸ். புரா ஆகிய இடங்களில் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள் துப்பாக்கிச் சூடு மற்றும் பீரங்கித் தாக்குதலை நடத்தியது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் ஏற்படும் என்ற அச்சங்களுக்கிடையே, இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.

கேரள காங்கிரஸ் தலைவராக சன்னி ஜோசப் நியமனம்: ராகுல் வாழ்த்து

இந்த நிலையில், பாகிஸ்தான் தனது பாவங்களுக்கு விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்று காங்கிரஸ் கூறியுள்ளது.

இதுதொடர்பாக ஜம்மு-காஷ்மீர் மாநில காங்கிரஸ் தலைமை செய்தித் தொடர்பாளர் ரவீந்தர் சர்மா கூறியிருப்பதாவது:

ஜம்மு நகரம் மற்றும் பிற பகுதிகளில் இந்திய ராணுவ நிலைகளை குறிவைத்து வியாழக்கிழமை இரவு பாகிஸ்தான் நடத்திய ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைத் தாக்குதலை இந்தியாவின் ‘ஒருங்கிணைந்த ஆளில்லா விமான எதிா்ப்பு’ அமைப்பு வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தியது. பாகிஸ்தானின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள ரவீந்தர் சர்மா, "பாகிஸ்தான் தனது பாவங்களுக்கு விலை கொடுக்க வேண்டியிருக்கும்" என்று கூறினார்.

ஜம்மு, பதான்கோட் மற்றும் உதம்பூர் உள்ளிட்ட இராணுவ தளங்களை ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்க பாகிஸ்தானின் புதிய முயற்சிகளை வியாழக்கிழமை இரவு இந்தியா முறியடித்தது, இரு நாடுகளுக்கும் இடையே பரந்த மோதல் ஏற்படும் என்ற அச்சத்தின் மத்தியில், இரு நாடுகளுக்கும் இடையே பதட்டங்கள் அதிகரித்துள்ளன.

பதற்றமான நேரத்தில் மக்கள் நிதானத்துடனும் பொறுப்புடனும் நடந்து கொள்ள வேண்டும்: அகிலேஷ் யாதவ்

பதற்றமான நேரத்தில் மக்கள் நிதானத்துடனும் பொறுப்புடனும் நடந்து கொள்ள வேண்டும்: அகிலேஷ் யாதவ் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிவையில், மக்கள் நிதானத்துடனும் பொறுப்... மேலும் பார்க்க

தாணே: மாரடைப்பால் உயிரிழந்த பாதுகாப்புப் படை வீரரின் உடல் அடக்கம்

தாணே: குஜராத் மாநிலம் வதோதராவில் மாரடைப்பால் உயிரிழந்த தொழிற் பாதுகாப்புப் படை வீரரின் உடல் அவரது சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் வெள்ளிக்கிழமை அடக்கம் செய்யப்பட்டது.மகாராஷ்டிரம் மாநிலம் தாணே மாவட்டம், ... மேலும் பார்க்க

கேரள காங்கிரஸ் தலைவராக சன்னி ஜோசப் நியமனம்: ராகுல் வாழ்த்து

புது தில்லி: புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கேரள காங்கிரஸ் தலைவர் சன்னி ஜோசப்பிற்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் தலைவர் ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் அவர் மாநிலத்தின் நீதி... மேலும் பார்க்க

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை (மே. 9) பவுனுக்கு ரூ. 920 குறைந்து ரூ.72,120-க்கும் விற்பனையாகிறது.கடந்த சில நாள்களாக ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்தது. இந்த நிலையில... மேலும் பார்க்க

பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் முறியடிப்பு: ஜம்மு-காஷ்மீரில் பதற்றம் அதிகரிப்பு

ஜம்மு நகரம் மற்றும் பிற பகுதிகளில் இந்திய ராணுவ நிலைகளை குறிவைத்து வியாழக்கிழமை இரவு பாகிஸ்தான் நடத்திய ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் நடத்திய தாக்குதல் தோல்வியை அடுத்து தொடர் குண்டுவெடிப்பு மற்ற... மேலும் பார்க்க

பாகிஸ்தான் ஏவுகணைகளை அசால்டாக சுட்டு வீழ்த்திய ‘எஸ்-400’ வான் பாதுகாப்பு அமைப்பு

15 ராணுவத் தளங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ஏவுகணைகளை ரஷிய தயாரிப்பான ‘எஸ்-400’ வான் பாதுகாப்பு அமைப்பைக் கொண்டு அசால்டாக இந்தியா முறியடித்தது.பஹல்காம் தாக்குதலுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஆபரேஷன்... மேலும் பார்க்க