செய்திகள் :

திருப்பூர்: சிட்டாவில் பெயர் சேர்க்க ரூ.7000 லஞ்சம்... வசமாக சிக்கிய VAO; உதவியாளருடன் கைது!

post image

திருப்பூர் மாவட்டம், அவிநாசியை அடுத்த முருகம்பாளையத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (42). திருப்பூர் குமார் நகரைச் சேர்ந்தவர் சாரதாமணி. இருவரும் உறவினர்கள். இந்நிலையில், சாரதாமணி சமீபத்தில் ஊத்துக்குளி வட்டம் இடையபாளையத்தில் 2.25 ஏக்கர் நிலம் வாங்கியிருந்தார். அந்த இடத்துக்கான சிட்டாவில் பெயர் சேர்ப்பதற்காக, இடையபாளையத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் உரிய ஆவணங்களோடு விண்ணப்பித்திருந்தார். சிட்டாவில் பெயர் சேர்ப்பதற்காக கிராம நிர்வாக அலுவலர் பிரபு (44) மற்றும் கிராம நிர்வாக உதவியாளர் கவிதா (36) ஆகியோர் ரூ. 7 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளனர்.

லஞ்சம்

லஞ்சம் கொடுக்க விரும்பாத கார்த்திகேயன், அதுகுறித்து திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகார் அளித்தனர். அதன்பேரில், ரசாயனம் தடவிய லஞ்ச பணத்தை கார்த்திகேயனிடம் லஞ்ச ஒழிப்பு போலீஸார் கொடுத்தனர். அந்தப் பணத்தை கிராம நிர்வாக உதவியாளர் கவிதா உதவியுடன் கிராம நிர்வாக அலுவலர் பிரவு பெறும்போது, அங்கு மறைந்திருந்த போலீஸார் இருவரையும் கைது செய்தனர். சிட்டாவில் பெயர் சேர்ப்பதற்கு லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளர் இருவர் கைது செய்யப்பட்டுள்ளது திருப்பூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

NEP: `கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுங்கள்; கூட்டாட்சியை உடைத்து விடாதீர்கள்..!' - கேரள எம்.பி

மத்திய அரசின் தேசியக் கல்விக் கொள்கையையும், அதில் இருக்கும் மும்மொழிக் கொள்கை பெயரிலான இந்தித் திணிப்பையும் எதிர்த்து தற்போது நடைபெறும் நாடாளுமன்ற மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வில் தி.ம... மேலும் பார்க்க

25 ஆசிரியர்கள் பணி நீக்கம்; பாலியல் புகார்களில் அதிரடி காட்டும் பள்ளிக் கல்வித்துறை!

பாலியல் புகார்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. அதிலும் கடந்த சில மாதங்களாகத் தொடர்ச்சியாக வரும் ஆசிரியர்கள் மீதான பாலியல் புகார்களால் மாணவர்களிடையேயும், பெற்றோர்களிடையேயும் அச்ச உணர்... மேலும் பார்க்க

NEP Row: `தர்மேந்திர பிரதான் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்..!' - வைகோ ஆவேசம்

மத்திய அரசு, தமிழ்நாட்டில் அமலுக்குக் கொண்டுவரத் தீவிரம் காட்டி வரும் 'தேசியக் கல்விக் கொள்கை', 'தொகுதி மறுவரையறை' திட்டங்களுக்குக் கடும் எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன.குறிப்பாக, 'தேசியக் கல்விக் கொள... மேலும் பார்க்க

மசினகுடி: ``ஆட்டு மந்தைகளைப் போல் அடைத்தனர், குடிநீர் கூட இல்லை..'' - கொதிப்பில் மக்கள்

நீலகிரி மாவட்டம் உதகை அருகே அடர்ந்த வனப்பகுதிக்குள் பிரசித்திபெற்ற மசினகுடி பொக்காபுரம் மாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உள்பட்ட இந்த பகுதியில், கா... மேலும் பார்க்க

NTK: சோர்வடையும் நிர்வாகிகள்? ; கறார் காட்டும் தலைமை... நாதக-வின் 2026 தேர்தல் வியூகமென்ன?

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் ஃபீவர் அனலடிக்கத் தொடங்கியிருக்கும் இச்சூழலில், நாம் தமிழர் கட்சி தேர்தல் பணிகளில் பல்வேறு குழப்பங்கள் தலையெடுக்கின்றன. கட்சிக் கட்டமைப்பு, தலைமை ஒருங்கிணைப்பாளர் ச... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: ரூ.9.3 லட்சம் கோடி... அதிகரித்த மாநில கடன்; பழைய திட்டங்கள் ரத்து - பட்ஜெட் ஹைலைட்ஸ்!

மகாராஷ்டிராவில் சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு புதிய அரசு பதவியேற்று தாக்கல் செய்யப்படும் புதிய பட்ஜெட் மீது மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. துணை முதல்வர் அஜித் பவார் தாக்கல் செய்துள்ள ... மேலும் பார்க்க