செய்திகள் :

மகாராஷ்டிரா: ரூ.9.3 லட்சம் கோடி... அதிகரித்த மாநில கடன்; பழைய திட்டங்கள் ரத்து - பட்ஜெட் ஹைலைட்ஸ்!

post image

மகாராஷ்டிராவில் சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு புதிய அரசு பதவியேற்று தாக்கல் செய்யப்படும் புதிய பட்ஜெட் மீது மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. துணை முதல்வர் அஜித் பவார் தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் பெண்கள் மிகவும் எதிர்பார்த்த மகளிர் உரிமைத்தொகை ரூ.1500-லிருந்து 2100 ஆக அதிகரிக்கப்படவில்லை. தேர்தலுக்கு முன்பு இத்தொகை 2100 ஆக அதிகரிக்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்திருந்தனர். அதோடு இத்திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை 10 ஆயிரம் கோடி அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது. துணை முதல்வர் அஜித் பவார் தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. உத்தவ் தாக்கரே ஆட்சியில் அறிமுகம் செய்யப்பட்ட மலிவு விலை சாப்பாடு திட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தேர்தலின் போது வாக்குறுதி கொடுத்தனர். ஆனால் அது தொடர்பாக எந்த வித அறிவிப்பும் இடம் பெறவில்லை.

அஜித் பவார்

ஏற்கனவே இருந்த திட்டங்களுக்குத்தான் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 30 லட்சத்திற்கு அதிகமான மதிப்புள்ள எலக்ட்ரிக் கார்களுக்கான சாலை வரி 6 சதவீதம் விதிக்கப்பட்டுள்ளது. 30 லட்சத்திற்கு குறைவான வாகனங்கள் தொடர்ந்து வரியில் இருந்து விலக்கு பெறும் என்றும், எல்பிஜி மற்றும் சி.என்.சி மூலம் இயங்கும் வாகனங்களுக்கு விதிக்கப்படும் வரியும் அதிகரிக்கப்பட்டுள்ளது. வளர்ச்சித்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் 45 சதவீதம் மாநிலத்தின் பின் தங்கிய பகுதிகளாக இருக்கும் விதர்பா மற்றும் மராத்வாடாவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் சத்ரபதி சிவாஜி, சாம்பாஜி உட்பட தலைவர்களுக்கு 12 நினைவு சின்னங்கள் கட்டப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில் ஒன்று முறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயிக்கு மும்பையில் கட்டப்படுகிறது. மாநிலத்தின் கடன் தொகை 9.3 லட்சம் கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 10 சதவீதத்திற்கும் அதிகமாகும். வளர்ச்சித்திட்டங்களை நிறைவேற்ற தேவையான ரூ.1.6 லட்சம் கோடியை வெளியில் இருந்து குறைந்த வட்டிக்கு கடனாக வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வருவாய் பற்றாக்குறை ரூ.45891 கோடியாக இருந்தது. 40 லட்சம் கோடி முதலீட்டை ஈர்க்கும் வகையில் புதிய தொழில் கொள்கை அறிவிக்கப்படும் என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. நிதி பற்றாக்குறை காரணமாக கல்வி போன்ற பெரும்பாலான திட்டங்களுக்கு நிதி மிகவும் குறைக்கப்பட்டுள்ளது.

`தமிழ்நாடு பிச்சைக்கார மாநிலமா... உயிரே போனாலும் அடிபணிய மாட்டோம்!' - ஸ்டாலின் காட்டம்

மத்திய அரசு, தமிழ்நாட்டில் அமலுக்குக் கொண்டுவரத் தீவிரம் காட்டி வரும் 'தேசியக் கல்விக் கொள்கை', 'தொகுதி மறுவரையறை' திட்டங்களுக்குக் கடும் எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன.மத்திய அரசின் தேசியக் கல்விக் க... மேலும் பார்க்க

NEP: `கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுங்கள்; கூட்டாட்சியை உடைத்து விடாதீர்கள்..!' - கேரள எம்.பி

மத்திய அரசின் தேசியக் கல்விக் கொள்கையையும், அதில் இருக்கும் மும்மொழிக் கொள்கை பெயரிலான இந்தித் திணிப்பையும் எதிர்த்து தற்போது நடைபெறும் நாடாளுமன்ற மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வில் தி.ம... மேலும் பார்க்க

திருப்பூர்: சிட்டாவில் பெயர் சேர்க்க ரூ.7000 லஞ்சம்... வசமாக சிக்கிய VAO; உதவியாளருடன் கைது!

திருப்பூர் மாவட்டம், அவிநாசியை அடுத்த முருகம்பாளையத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (42). திருப்பூர் குமார் நகரைச் சேர்ந்தவர் சாரதாமணி. இருவரும் உறவினர்கள். இந்நிலையில், சாரதாமணி சமீபத்தில் ஊத்துக்குளி ... மேலும் பார்க்க

25 ஆசிரியர்கள் பணி நீக்கம்; பாலியல் புகார்களில் அதிரடி காட்டும் பள்ளிக் கல்வித்துறை!

பாலியல் புகார்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. அதிலும் கடந்த சில மாதங்களாகத் தொடர்ச்சியாக வரும் ஆசிரியர்கள் மீதான பாலியல் புகார்களால் மாணவர்களிடையேயும், பெற்றோர்களிடையேயும் அச்ச உணர்... மேலும் பார்க்க

NEP Row: `தர்மேந்திர பிரதான் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்..!' - வைகோ ஆவேசம்

மத்திய அரசு, தமிழ்நாட்டில் அமலுக்குக் கொண்டுவரத் தீவிரம் காட்டி வரும் 'தேசியக் கல்விக் கொள்கை', 'தொகுதி மறுவரையறை' திட்டங்களுக்குக் கடும் எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன.குறிப்பாக, 'தேசியக் கல்விக் கொள... மேலும் பார்க்க

மசினகுடி: ``ஆட்டு மந்தைகளைப் போல் அடைத்தனர், குடிநீர் கூட இல்லை..'' - கொதிப்பில் மக்கள்

நீலகிரி மாவட்டம் உதகை அருகே அடர்ந்த வனப்பகுதிக்குள் பிரசித்திபெற்ற மசினகுடி பொக்காபுரம் மாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உள்பட்ட இந்த பகுதியில், கா... மேலும் பார்க்க