செய்திகள் :

உக்ரைனுக்கு மீண்டும் ராணுவ உதவி வழங்க அமெரிக்கா முடிவு!

post image

உக்ரைனுக்கு மீண்டும் ராணுவ உதவிகளை வழங்க அமெரிக்கா முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உக்ரைன் - ரஷியா இடையே போர்நிறுத்தம் தொடர்பாக சவுதி அரேபியாவில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், கலந்துகொண்ட உக்ரைன் அதிபர் அலுவலகத்தின் துணைத் தலைவரும் தூதுக்குழு உறுப்பினருமான பாவ்லோ பாலிசா, “பேச்சுவார்த்தையின்போது எழுப்பப்பட்ட கோரிக்கைகள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன” எனக் குறிப்பிட்டதாக உக்ரைன் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

உக்ரைனுடனான உளவுத்துறை தொடர்புகளை இடைநிறுத்தம் செய்திருந்த அமெரிக்கா தற்போது அதனை நீக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க | பாகிஸ்தான்: சிறைப்பிடிக்கப்பட்ட ரயிலில் இருந்து 190 பயணிகள் மீட்பு!

உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி சில நாள்களுக்கு முன்பு வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து உக்ரைனுக்கான தனது இராணுவ உதவியை அமெரிக்கா நிறுத்தியது.

இதனைத் தொடர்ந்து, டிரம்ப்புக்கு ஸெலென்ஸ்கி மன்னிப்புக் கடிதம் அனுப்பியதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், சவுதி அரேபியாவில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் அமெரிக்கா உக்ரைனுக்கு பாதுகாப்பு உதவியை மீண்டும் வழங்கும் என்று தெரிவித்துள்ளது.

நேற்று நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தை 8 மணி நேரம் நீடித்தது. இதில், அமெரிக்காவால் முன்மொழியப்பட்ட 30 நாள் போர்நிறுத்தத் திட்டத்தை உக்ரைன் ஏற்றுக்கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பாகிஸ்தான் ரயில் சிறைபிடிப்பு: 33 பயங்கரவாதிகள் கொலை... மீட்புப் பணிகள் நிறைவு!

பாகிஸ்தானில் தீவிரவாத அமைப்பினரால் சிறைப்பிடிக்கப்பட்ட ரயிலில் 33 பயங்கரவாதிகளைக் கொன்று 300-க்கும் மேற்பட்ட பயணிகளை அந்நாட்டு ராணுவம் மீட்டெடுத்த நிலையில் மீட்புப் பணிகள் நிறைவடைந்தன. ரயில் சிறைப்பிட... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: சிறைப்பிடிக்கப்பட்ட ரயிலில் இருந்து 190 பயணிகள் மீட்பு!

பாகிஸ்தானில் தீவிரவாத அமைப்பினரால் சிறைப்பிடிக்கப்பட்ட ரயிலில் இருந்து 190 பேரை அந்நாட்டு ராணுவம் மீட்டுள்ளது. இந்த மீட்புப் போராட்டத்தில் 30 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்ததாகவும், சில பிணைக் கைதிகள்... மேலும் பார்க்க

அமெரிக்காவில் பிறந்த குழந்தை! பார்த்தவர்களுக்கு கடும் அதிர்ச்சி!

அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில், நிறைமாத கர்ப்பிணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு குழந்தை பிறந்தது. ஆனால், பிறந்த குழந்தையைப் பார்த்த அனைவரும் தங்களது கண்ணையே நம்ப முடியாமல் கடும் அதிர்ச்ச... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: மனித வெடிகுண்டுகளாக பயணிகள்! 250 பேரை மீட்பதில் சிக்கல்!

பாகிஸ்தானில் பயங்கராவதிகள் சிறைப்பிடித்துள்ள ரயிலில் பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டுள்ள 250 பயணிகளை மீட்பதில் சிக்கல் தொடர்ந்து வருகின்றது.இதுவரை 155 பயணிகளை ரயிலில் இருந்து மீட்டுள்ள பாகிஸ்தான் ராணுவத்த... மேலும் பார்க்க

30 நாள் போர்நிறுத்தம்: பேச்சுவார்த்தையில் உக்ரைன் முன்வைத்த 5 முக்கிய முடிவுகள்!

ரஷியா - உக்ரைன் போர்நிறுத்தப் பேச்சுவார்த்தையில் 5 முக்கிய முடிவுகளை உக்ரைன் நாட்டு பிரதிநிதிகள் முன்வைத்தனர்.ரஷியா - உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக, சௌதி அரேபியாவின் ஜெட்டா நகரில் அமெரிக்கா மற்றும் ... மேலும் பார்க்க

டெஸ்லா காருடன் அமெரிக்க அதிபர் டிரம்ப், எலான் மஸ்க்! வெள்ளை மாளிகைக்கு புதுவரவு.!

அமெரிக்க அதிபரான டொனால்ட் டிரம்ப் டெஸ்லா கார் ஒன்றை வாங்கியுள்ளார். மேலும், வெள்ளை மாளிகை முன் அவருடன் எலான் மஸ்க் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.அமெரிக்க அதிபரான டொனால... மேலும் பார்க்க