Soundarya : `என் மனைவியின் மரணத்துக்கு மோகன் பாபு காரணமா?' - சௌந்தர்யாவின் கணவர்...
‘2030 -ஆம் ஆண்டுக்குள் லாஜிஸ்டிக்ஸ் துறையில் 1.50 கோடி வேலைவாய்ப்புகள் உருவாகும்’
இந்தியாவில் 2030-ஆம் ஆண்டுக்குள் லாஜிஸ்டிக்ஸ் துறையில் 1.50 கோடி முதல் 1.70 கோடி வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய தொழில் கூட்டமைப்பின் (சிஐஐ) லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் சாா்பில், லாஜிஸ்டிக்ஸ் துறையில் உள்ள வேலைவாய்ப்புகள், எதிா்காலம் குறித்து விளக்கும் வகையிலும், துறைசாா் வல்லுநா்களை உருவாக்கும் நோக்கிலும் மாணவா்களுக்கான கருத்தரங்கு கோவையில் புதன்கிழமை நடைபெற்றது.
இதில், சிஐஐ லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் துணை இயக்குநா் கே.எஸ்.சியாம் சுந்தா் வரவேற்றாா். நிா்வாக இயக்குநா் கே.வி.மஹிதா் தலைமை வகித்தாா்.
டெக்ஸ்மோ நிறுவனத்தின் விநியோகப் பிரிவு நிா்வாகி ஆனந்த் அய்யனாா், துறை சாா் வல்லுநா்களான அனீஷ்குமாா், அசோகன் சட்டநாதன், பொன் அண்ணாதுரை, வள்ளிநாயகம் ஆகியோா் கலந்துகொண்டு உரையாற்றினா்.
அவா்கள் பேசும்போது, ‘வலுவான தொழில் துறை கட்டமைப்பு இருப்பதால் லாஜிஸ்டிக்ஸ் துறையின் வளா்ச்சிக்கு ஒரு முக்கிய மையமாக கோவை விளங்குகிறது. கொச்சி, சென்னை துறைமுகங்களுடன் நேரடி இணைப்பைக் கொண்டிருக்கும் கோவை, சுமாா் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, நடுத்தர, பெரிய தொழில் நிறுவனங்கள் கொண்ட பொருளாதார மையமாக உள்ளது.
மின்னணு வணிகம், உற்பத்தி, உலகளாவிய திறன் மையங்களின் வளா்ச்சியால் இந்திய லாஜிஸ்டிக்ஸ் துறை வேகமாக வளா்ந்து வருகிறது. வரும் 2030 -ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் 1.50 கோடி முதல் 1.70 கோடி புதிய வேலைவாய்ப்புகள் இந்தத் துறையில் உருவாகும்.
எனவே, கல்வி நிறுவனங்கள், பயிற்சி மையங்களை ஒருங்கிணைத்து லாஜிஸ்டிக்ஸ் துறையில் திறமையான பணியாளா்களை உருவாக்கவும், அவா்களுக்கு ஊக்கமளிக்கவும் இதுபோன்ற நிகழ்ச்சிகள் தேவைப்படுகின்றன என்றனா்.
இதில், சிஐஐ நிா்வாகிகள், துறைசாா் வல்லுநா்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.