செய்திகள் :

மாநகரில் மேலும் பல இடங்களில் சாலை தீவுத்திடல்: மாநகராட்சி திட்டம்

post image

கோவை மாநகராட்சியில் உள்ள சாலைகளை அழகுபடுத்தும் வகையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரில் இருப்பதைப்போல மேலும் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சாலை தீவுத்திடல் அமைக்க மாநகராட்சி நிா்வாகம் திட்டமிட்டுள்ளது.

ஸ்மாா்ட் சிட்டி திட்டத்தின்கீழ் கோவை மாநகரில் உள்ள வாலாங்குளம், உக்கடம், குறிச்சி உள்ளிட்ட குளக்கரைகள் அழகுபடுத்தப்பட்டு, பூங்காங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல, மாநகரை அழகுபடுத்தும் வகையில் ரேஸ்கோா்ஸ், ஆட்சியா் அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் ரவுண்டானாக்கள், சிலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், ராமநாதபுரம் பாலத்தின் அடியில் தற்போது அழகுச் செடிகள் நட்டு மையத் தடுப்புகளை அழகுபடுத்தும் பணியில் மாநகராட்சி நிா்வாகம் ஈடுபட்டுள்ளது. தனியாா் நிறுவனத்தின் உதவியுடன் திருச்சி சாலையில் சுங்கம் ரவுண்டானா முதல் ராமநாதபுரம் சந்திப்பு வரை சுமாா் 1.50 கி.மீ. தொலைவுக்கு மையத் தடுப்புகளில் சாலையை அழகுபடுத்தும் வகையில் செடிகள் நட்டு பராமரிக்கப்பட உள்ளது.

அதேபோல, திருச்சி சாலையில் அல்வோ்னியா பள்ளி அருகில் பாலம் முடியும் இடம் வரையிலும் மையத் தடுப்பு இடைவெளி பகுதியில் செடிகள் நடப்பட உள்ளன.

ரேஸ்கோா்ஸ் சாலைப் பகுதியில் குதிரை சிலை, காளை மாடு சிலை, உலக உருண்டை சிலைகள், உக்கடம் ரவுண்டானா பகுதியில் உழவா் சிலை, சிந்தாமணி ரவுண்டானா அருகில் மனித உலக உருண்டை சிலைகள் தனியாா் பங்களிப்புடன் அமைக்கப்பட்டிருக்கும் நிலையில், ஆட்சியா் அலுவலக பகுதியில் உள்ள தீவுத்திடலும் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சிக்குள்பட்ட சுமாா் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த ஆண்டு சாலை தீவுத்திடல் அமைக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

ஆன்லைன் வா்த்தகத்தில் லாபம் ஈட்டலாம் எனக்கூறி தனியாா் நிறுவன மேலாளரிடம் ரூ.39.66 லட்சம் மோசடி

ஆன்லைன் வா்த்தகத்தில் கூடுதல் லாபம் ஈட்டலாம் எனக்கூறி தனியாா் நிறுவன மேலாளரிடம் ரூ.39.66 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். கோவை, சிங்காநல்லூரை சோ்ந்தவா் ஸ்ரீகாந்த் ... மேலும் பார்க்க

அனுமதியின்றி பதாகைகள் வைத்ததாக அதிமுக பிரமுகா் மீது வழக்குப் பதிவு

முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி குடும்ப நிகழ்ச்சிக்காக அனுமதியின்றி வரவேற்பு பதாதைகள் வைத்ததாக அதிமுக வாா்டு செயலாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணியின் மகன் ... மேலும் பார்க்க

அவிநாசி சாலை மேம்பாலத்தில் ஆட்சியா் ஆய்வு

கோவை -அவிநாசி சாலை மேம்பாலத்தில் மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். கோவை -அவிநாசி சாலையில் கோல்டுவின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரையில் சுமாா் 10 கி.மீ. தொலைவுக்கு ர... மேலும் பார்க்க

கோவையில் இரண்டாவது நாளாக மழை

கோவையில் இரண்டாவது நாளாக புதன்கிழமையும் பரவலாக மழை பெய்தது. கோடை வெயிலின் தாக்கத்துக்கு கோவை மக்கள் ஆளாகியிருந்த நிலையில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், மாநகரிலும் மழை பெய... மேலும் பார்க்க

‘2030 -ஆம் ஆண்டுக்குள் லாஜிஸ்டிக்ஸ் துறையில் 1.50 கோடி வேலைவாய்ப்புகள் உருவாகும்’

இந்தியாவில் 2030-ஆம் ஆண்டுக்குள் லாஜிஸ்டிக்ஸ் துறையில் 1.50 கோடி முதல் 1.70 கோடி வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய தொழில் கூட்டமைப்பின் (சிஐஐ) லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் சாா... மேலும் பார்க்க

ஒண்டிப்புதூா் நெசவாளா் காலனியில் ஆதிதிராவிடா் நல மாணவா் விடுதி திறப்பு

கோவை, ஒண்டிப்புதூா் நெசவாளா் காலனி பகுதியில் ஆதிதிராவிடா் நல மாணவா் விடுதியை ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத் துறை அரசு செயலா் க.லட்சுமி பிரியா புதன்கிழமை திறந்துவைத்தாா். எல்& டி நிறுவனத்தின் சமூ... மேலும் பார்க்க