செய்திகள் :

திருப்பூர்: தோட்டத்து வீட்டில் வசித்த தம்பதி அடித்துக் கொலை - ஆதாயக் கொலையா? - போலீஸார் விசாரணை!

post image

திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே துலுக்கமுத்தூர் ஊஞ்சப்பாளையம் சாலை பெரிய தோட்டத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி (82). இவரது மனைவி பருவதம் (75). விவசாய குடும்பத்தைச் சேர்ந்த இவர்களது மகன், மகள் இருவரும் திருமணமாகி வெவ்வேறு பகுதியில் வசித்து வருகின்றனர். தோட்டத்து வீட்டில் வயதான தம்பதி மட்டும் தனியாக வசித்து வந்தனர். இந்நிலையில் இன்று காலை நீண்ட நேரமாகியும் பழனிசாமி, பருவதம் இருவரும் வெளியே வராததால், பக்கத்து தோட்டத்துக்காரர்கள் அவர்களது வீட்டுக்குச் சென்று பார்த்துள்ளனர். அப்போது பழனிசாமியும், அவரது மனைவி பருவதமும் ரத்தக் காயங்களுடன் அடித்துக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தது தெரியவந்தது.

போலீஸ் விசாரணை

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அவிநாசி போலீஸார் இருவரது உடல்களையும் கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதியவர்கள் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டார்களா அல்லது நகை மற்றும் பணத்திற்காக கொலை செய்யப்பட்டார்களா என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசிபாளையம் அருகே சேமலைகவுண்டம்பாளையத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 100 நாட்களைக் கடந்தும் போலீஸார் குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் திணறி வரும் நிலையில், தற்போது வயதான விவசாய தம்பதி கொலை செய்யப்பட்ட சம்பவம், திருப்பூர் சுற்றுவட்டாரப் பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பார்க்கிங் பிரச்னை; விஞ்ஞானியை அடித்துக் கொன்ற பக்கத்து வீட்டுக்காரர்கள்... மொகாலியில் அதிர்ச்சி!

மொகாலியில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் எஜுகேசன் மற்றும் ரிசர்ச் மையத்தில் டாக்டர் அபிஷேக் (39) என்பவர் விஞ்ஞானியாகப் பணியாற்றி வந்தார். ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அபிஷேக் ஸ்விட்சர்லா... மேலும் பார்க்க

குஜராத்: மாணவர்கள் உட்பட 7 பேர்: 18 மாதங்களாக தொடர் பாலியல் வதை - கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கொடுமை!

குஜராத் மாநிலத்தில் கல்லூரி மாணவி ஒருவர் கடந்த 18 மாதங்களாக 7 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு வந்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. குஜராத் மாநிலம், பனஸ்கந்தா மாவட்டத்தைச் சேர்ந்த 18 ... மேலும் பார்க்க

சென்னை: குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்ட மருத்துவர் - கடன் தொல்லை? ; விசாரித்து வரும் காவல்துறை

சென்னை திருமங்கலத்தில் கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. திருமங்கலம் 7-வது சாலையில் வசித்தவர்கள் மருத்துவர் பாலமுருகன் - வ... மேலும் பார்க்க

`ரூ.1,200 கோடி முறைகேடு; எலும்புகள் வைத்து பில்லி சூனியம்'- மும்பை மருத்துவமனையில் அதிர்ச்சி புகார்!

மும்பை பாந்த்ராவில் உள்ள லீலாவதி மருத்துவமனை மிகவும் பிரபலம் ஆகும். சமீபத்தில் நடிகர் சைஃப் அலிகான் அவரது வீட்டில் திருடனால் தாக்கப்பட்டபோது இந்த மருத்துவமனையில்தான் சிகிச்சை எடுத்துக்கொண்டார். தொண்டு... மேலும் பார்க்க

ராமநாதபுரம்: தாக்கியவர்களை கைதுசெய்யக் கோரி உயிரை மாய்த்த முதியவர்; எஸ்.பி அலுவலகம் முன் விபரீதம்!

ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்தவர் சேது மாணிக்கம் (70). இவர் ஆட்டோ ஓட்டுநர். இந்நிலையில் ராமேஸ்வரம் என்.எஸ்.கே வீதி பகுதியில் ஆட்டோவை ஓட்டிச் சென்றுள்ளார் சேது மாணிக்கம். அப்போது சால... மேலும் பார்க்க

Tollgate: புதிதாக திறக்கவிருந்த டோல்கேட்டை அடித்து நொறுக்கிய மக்கள்... வத்தலகுண்டில் நடந்தது என்ன?

திண்டுக்கல்லில் இருந்து வத்தலகுண்டு வரை இருவழிச்சாலை மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல்லில் இருந்து குமுளி வரை நான்கு வழிச்சாலைக்காக திட்டம் தொடங்கப்படவுள்ளது. இந்நிலையில் இந்த இரு வழிச்சாலையில் ... மேலும் பார்க்க