செய்திகள் :

Budget 2025- 26: 'எல்லார்க்கும் எல்லாமும்' - தமிழக பட்ஜெட்டின் இலச்சினையை வெளியிட்ட மு.க.ஸ்டாலின்

post image

2025- 2026 ஆம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை நடைபெற இருக்கும் நிலையில், தமிழக பட்ஜெட்டின் இலச்சியினை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டிருக்கிறார்.

தமிழக சட்டப்​பேர​வை​யின் இந்த ஆண்டிற்கான முதல் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 6-ம் தேதி நடைபெற்று முடிந்தது. இந்நிலையில், சட்டப்பேரவையின் அடுத்த கூட்டத்தொடர் மார்ச் 14-ம் தேதி (நாளை) தொடங்குகிறது. நாளை காலை 9:30 மணிக்கு சட்டப்பேரவையில் 2025-2026-ம் ஆண்டுடிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யவிருக்கிறார் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு.

ஸ்டாலின் - தங்கம் தென்னரசு

கடந்த ஆண்டுகளில் தமிழக அரசுக்கு வந்த வருவாய் வரவுகள், செலவுகள், வாங்கிய கடன், கடனுக்கான வட்டி எவ்வளவு போன்ற தகவல்களை அவர் வெளியிட இருக்கிறார். அதேபோல், 2025-26-ம் ஆண்டில் தமிழக அரசு உத்தேசமாக மேற்கொள்ள உள்ள செலவுகள், உத்தேசமான வருவாய் வரவுகள் போன்ற தகவல்களையும் அவர் அளிக்கவுள்ளார். அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ளதால், இடைக்கால பட்ஜெட்டை மட்டுமே இந்த அரசு தாக்கல் செய்ய முடியும்.

அதனால், இந்த பட்ஜெட்டில் மக்களை கவரும் வகையில் பல்வேறு திட்டங்கள் இடம்பெற வாய்ப்புகள் இருக்கிறது. தமிழக பட்ஜெட் நாளை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், அதனை 100 இடங்களில் நேரடி ஒளிபரப்பு செய்ய சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் 'எல்லார்க்கும் எல்லாமும்' என்ற வாசகத்துடன் 2025- 2026 ஆம் நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட்டின் இலச்சியினையை ஸ்டாலின் வெளியிட்டிருக்கிறார். மேலும், ரூபாய்க்கான அடையாளக் குறியீட்டிற்கு பதில், தமிழ் எழுத்தான 'ரூ' என்பதை முதன்மைப்படுத்தி இலச்சினை வடிவமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

கழுகார் : `ஆலையைத் திறக்க வேறொரு ரூட் ’ டு `குழப்பத்தில் பெண் தெய்வப் பிரமுகர்’

அம்பலமாகும் கூட்டுச் சதி!மரக் கொள்ளைக்காக ஆப் ஆனதா சி.சி.டி.வி?‘ஜில்’ மாவட்ட நுழைவு வாயிலின் மலைச்சரிவில், யானைகளின் முக்கிய வழித்தடம் மற்றும் வாழ்விடம் அமைந்திருக்கிறது. அதிலுள்ள மரங்களை, ‘முதிர்ந்த ... மேலும் பார்க்க

கேரள : 'மும்மொழிக் கொள்கையை ஆதரிக்கிறோம், ஆனால் இந்தியை..!' - உயர்கல்வி அமைச்சர் ஆர்.பிந்து

மும்மொழிக் கொள்கையால் மத்திய அரசிற்கும், தமிழக அரசிற்கும் இடையே நிறைய கருத்து மோதல்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் மும்மொழிக் கொள்கையை ஆதரிப்பதாகவும், அதே நேரத்தில் இந்தி திணிப்பை எதிர்ப்ப... மேலும் பார்க்க

தொகுதி மறுவரையறை: `அண்ணல் அம்பேத்கரை குற்றம்சாட்டுகிறாரா ஸ்டாலின்?’ - பாஜக கனகசபாபதி | களம் பகுதி 3

எந்த ஒரு விவகாரத்துக்கும் பல முகங்கள் இருக்கும். பல்வேறு நபர்களின் பார்வைகள் வேறுபட்டு இருக்கும். அவை அனைத்தையும் ஒரே பகுதியில் இணைக்கும் ஒரு முயற்சி தான்,`களம்’இந்த மினி தொடரில் நாம் பார்க்கப் போவது ... மேலும் பார்க்க

சிதம்பரம்: `தீட்சிதர்கள் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது!’ - உயர் நீதிமன்றம் மறுத்த காரணமென்ன ?

கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோயிலில் கடந்த 2023-ம் ஆண்டு நடைபெற்ற ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, பக்தர்கள் கனகசபை மீது ஏறி நின்று வழிபடுவதற்கு அரசு அனுமதி அளித்திருந்தது. ஆனால் தங்கள் கோயிலுக்கு... மேலும் பார்க்க

மும்பை: `நான் ஏன் மராத்தி பேசவேண்டும்?' - வாடிக்கையாளரிடம் ஏர்டெல் ஊழியர் வாக்குவாதம், சர்ச்சை

சமீபத்தில் ஆர்.எஸ்.எஸ்.மூத்த தலைவர் பையாஜி ஜோஷி மும்பையில் அளித்திருந்த பேட்டியில், `மும்பையில் வாழ மராத்தி தெரிந்திருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை’ என்று குறிப்பிட்டு சர்ச்சையை கிளப்பி இருந்தார். இத... மேலும் பார்க்க