செய்திகள் :

இந்திய எல்லையில் பாகிஸ்தான் டிரோன்கள் வீசிய போதைப் பொருள்கள் பறிமுதல்!

post image

ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள இந்திய எல்லையில் பாகிஸ்தானிலிருந்து டிரோன் மூலம் கடத்தப்பட்ட போதைப் பொருள் பொட்டலங்களை எல்லைப் பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

பாகிஸ்தானிலிருந்து கட்டுப்படுத்தப்பட்ட டிரோன் ஒன்று நேற்று (மார்ச் 12) ஸ்ரீ கங்காநகர் மாவட்டத்தின் கஜ்சிங்பூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் பறப்பதாக அப்பகுதி மக்கள் சிலர் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர்.

அந்த புகாரின் அடிப்படையில் எல்லைப் பாதுகாப்புப் படை மற்றும் குற்றப் புலனாய்வுத் துறையினர் இணைந்து அப்பகுதியிலுள்ள வயல்கள் முழுவதும் சோதனை மேற்கொண்டனர்.

இந்நிலையில், இன்று (மார்ச் 13) காலை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் பாகிஸ்தானிலிருந்து கட்டுப்படுத்தப்பட்ட டிரோன் மூலம் இந்திய எல்லைக்குள் சுமார் 2.5 கி.மீ. தொலைவுக்கு ஊடூறுவி அப்பகுதியிலுள்ள கோதுமை வயலில் வீசப்பட்ட மர்ம பொட்டங்களைப் பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்தனர்.

இதையும் படிக்க: ஜம்மு - காஷ்மீரில் 76 பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாகத் தகவல்!

பின்னர், பறிமுதல் செய்யப்பட்ட பொட்டலத்தை சோதனை செய்ததில் அதில் 1.116 கிலோ அளவிலான ஹெராயின் எனும் போதைப் பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த போதைப் பொருளின் மதிப்பானது இந்திய ரூ.5 கோடி எனக் கணக்கிடப்பட்டுள்ளது. மேலும், இன்னும் சில ஹெராயின் பொட்டலங்கள் அங்குள்ள வயல்களில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

எனவே, பாகிஸ்தானிலிருந்து டிரோன் மூலம் போதைப் பொருள் கடத்தப்படுவதைத் தடுக்க எல்லைப் பாதுகாப்புப் படை, குற்றப் புலானாய்வுத் துறை மற்றும் கஜ்சிங்பூர் காவல் துறையினர் ஆகியோர் அப்பகுதிகளில் தடுப்புகளை அமைத்து தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

சமீபத்தில், பஞ்சாப்பில் டிரோன் மூலம் பாகிஸ்தானிலிருந்து போதைப் பொருள்களை கடத்தி அதனை மாநிலம் முழுவதும் விநியோகித்து வந்த ஒரு சிறுவன் உள்பட 3 பேரை காவல் துறையினர் கைது செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

முதல்வர் ஸ்டாலின் தனது பெயரை தமிழில் மாற்றத் தயாரா? - தமிழிசை சௌந்தரராஜன்

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது பெயரை தமிழில் மாற்றிக்கொள்ளட்டும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். 2025-2026 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தமிழக சட்டப்பேரவையில் நாளை(மார்ச் 14) ... மேலும் பார்க்க

திபெத்தில் தொடர் நிலநடுக்கம்...! பீதியில் மக்கள்!

சீனாவின் தன்னாட்சி பகுதியான திபெத்தில் இன்று ஒரே நாளில் அடுத்தடுத்து 3 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது. திபெத்தின் நிலப்பரப்பிலிருந்து சுமார் 10 கி.மீ. ஆழத்தில் இன்று (மார்ச் 13) அதிகாலை 01.42 மணியளவில் ... மேலும் பார்க்க

பாமக எம்எல்ஏ மீது திமுகவினர் தாக்குதல்: அன்புமணி கண்டனம்!

சேலத்தில் முத்துநாயக்கன்பட்டி ஊராட்சி பாலக்குட்டப்பட்டியில் பள்ளிக் கட்டட அடிக்கல் நாட்டு விழாவுக்குச் சென்ற பாமக எம்எல்ஏ அருள் மீது திமுகவினர் தாக்குதல் நடத்தியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இ... மேலும் பார்க்க

சிறைப்பிடிப்பு எதிரொலி: பாக். பிரதமர் பலூசிஸ்தான் பயணம்!

பாகிஸ்தான் நாட்டில் பயணிகள் ரயில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட பலூசிஸ்தான் மாகாணத்திற்கு அந்நாட்டு பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் பயணம் மேற்கொள்கின்றார். பலூசிஸ்தான் மாகாணத்தில் கடந்த மார்ச்.11 அன்று குவேட்டாவி... மேலும் பார்க்க

கொலையில் முடிந்த ஆடு,கோழி மேய்ச்சல் பிரச்னை: உறவினர் கைது

அவிநாசி அருகே ஆடு,கோழி மேய்ச்சல் பிரச்னையால் வயதான விவசாய தம்பதியரை வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பிய உறவினர் விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அவிநாசியில் ... மேலும் பார்க்க

தமிழர் வடிவமைத்த ரூபாய் குறியீட்டை மாற்றியுள்ளது திமுக! - அண்ணாமலை குற்றச்சாட்டு

தமிழர் வடிவமைத்த ரூபாய் குறியீட்டை திமுக அரசு மாற்றியுள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,'திமுக அரசின் 2025-26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக... மேலும் பார்க்க