செய்திகள் :

டாப் ஆர்டர் பேட்ஸ்மேனாக விளையாட விரும்பும் கே.எல்.ராகுல்!

post image

டாப் ஆர்டரில் களமிறங்கி நன்றாக விளையாடுவது தனக்கு இயல்பாக வருவதாக இந்திய அணியின் விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான கே.எல்.ராகுல் வழக்கமாக 5-வது இடத்தில் களமிறங்கி விளையாடுபவர். ஆனால், அண்மையில் நிறைவடைந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கே.எல்.ராகுல் பின்வரிசையில் களமிறங்கி சிறப்பாக விளையாடினார். அவர் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் 5 இன்னிங்ஸ்களில் விளையாடி 174 ரன்கள் குவித்தார்.

இதையும் படிக்க: லக்னௌ அணியில் பேட்ஸ்மேனாக மட்டும் களமிறங்கவுள்ள ஆஸி. ஆல்ரவுண்டர்!

டாப் ஆர்டரில் விளையாட விருப்பம்

விரையில் ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ள நிலையில், தான் ஒரு டாப் ஆர்டர் பேட்ஸ்மேனாகவே கிரிக்கெட் விளையாடத் தொடங்கியதாகவும், டாப் ஆர்டரில் களமிறங்கி விளையாடுவது தனக்கு மிகவும் பிடித்திருப்பதாகவும் கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: டாப் ஆர்டர் பேட்ஸ்மேனாகவே நான் கிரிக்கெட் விளையாடத் தொடங்கினேன். எனது 11-வது வயதில் முதல் முறையாக தொழில் முறை போட்டியில் விளையாடத் தொடங்கியது முதல் இந்திய அணிக்காக ஆரம்ப காலக் கட்டங்களில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேனாகவே விளையாடினேன். அந்த இடத்தில் களமிறங்கி விளையாடி என்னால் நன்றாக ரன்கள் குவிக்க முடிகிறது. டாப் ஆர்டரில் நன்றாக விளையாடுவது எனக்கு இயல்பாக வருகிறது.

இதையும் படிக்க: டி20 தொடருக்காக நியூசிலாந்து சென்றடைந்த பாகிஸ்தான் அணி!

ஒரு அணியாக விளையாடும்போது, உங்களுக்கு என்ன வேண்டும் என்பதை உங்களால் எப்போதும் தேர்ந்தெடுக்க முடியாது. அணியின் தேவையை புரிந்துகொண்டு அதற்கேற்றவாறு விளையாடுவதற்கு தயாராக இருக்க வேண்டும். கடந்த சில ஆண்டுகளாக அணியின் தேவையை உணர்ந்து அதற்கேற்றவாறு விளையாட கற்றுக் கொண்டேன். எந்த இடத்தில் களமிறக்கப்பட்டாலும் அணிக்காக நன்றாக விளையாட கற்றுக்கொண்டேன் என்றார்.

மகளிர் பிரிமீயர் லீக் எலிமினேட்டர்: குஜராத் ஜெயண்ட்ஸுக்கு 214 ரன்கள் இலக்கு!

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் எலிமினேட்டர் போட்டியில் முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்கள் எடுத்துள்ளது.மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் எலிமினே... மேலும் பார்க்க

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை தவறவிடும் இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளர்!

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் மார்க் வுட் விளையாட முடியாத சூழல் உருவாகியுள்ளது.இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட்... மேலும் பார்க்க

டி20 சாம்பியன்-ஷிப் தொடர்: பாபர் அசாம், நசீம் ஷா விலகல்!

தேசிய டி20 சாம்பியன்-ஷிப் தொடரில் இருந்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் பாபர் அசாம் மற்றும் நசீம் ஷா இருவரும் விலகுவதாக அறிவித்துள்ளனர்.பாகிஸ்தானில் கடந்த 30 ஆண்டுகளுக்குப் பின்னர் சாம்பியன்ஸ் ட... மேலும் பார்க்க

டி20 தொடருக்காக நியூசிலாந்து சென்றடைந்த பாகிஸ்தான் அணி!

நியூசிலாந்துக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடுவதற்கான பாகிஸ்தான் அணி நியூசிலாந்து சென்றடைந்தது.பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிக... மேலும் பார்க்க

இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் சையத் அபித் அலி காலமானார்!

இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த ஆல்ரவுண்டர் சையத் அபித் அலி உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 83.ஆல்ரவுண்டரான சையத் அபித் அலி ஃபீல்டிங்கிக்கு பெயர் பெற்றவர். இவர் 1967 ஆம் ஆண்டு அடிலெய்டில் ந... மேலும் பார்க்க

லக்னௌ அணியில் பேட்ஸ்மேனாக மட்டும் களமிறங்கவுள்ள ஆஸி. ஆல்ரவுண்டர்!

பிரபல ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் லக்னௌ அணியில் பேட்ஸ்மேனாக மட்டும் விளையாடவுள்ளார்.இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. தொடரின் முதல் போட்டியில் நடப்பு சா... மேலும் பார்க்க