செய்திகள் :

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை தவறவிடும் இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளர்!

post image

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் மார்க் வுட் விளையாட முடியாத சூழல் உருவாகியுள்ளது.

இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் ஜூன் 20 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

மார்க் வுட்டுக்கு காயம்

அண்மையில் நிறைவடைந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியின்போது, இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளர் மார்க் வுட்டுக்கு காயம் ஏற்பட்டது.

இதையும் படிக்க:டாப் ஆர்டர் பேட்ஸ்மேனாக விளையாட விரும்பும் கே.எல்.ராகுல்!

மார்க் வுட்டுக்கு ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டபோது, அவருக்கு இடது முழங்காலில் காயம் ஏற்பட்டிருப்பது உறுதியானது. இதனையடுத்து, அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளது. அதனால், குறைந்தது அடுத்த 4 மாதங்களுக்கு அவரால் கிரிக்கெட் விளையாட முடியாத சூழல் உருவாகியுள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

இங்கிலாந்து அணி அதன் சொந்த மண்ணில் இந்தியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் வருகிற ஜூன் மாதம் முதல் விளையாடவுள்ளது. இந்தத் தொடர் முழுவதும் மார்க் வுட் விளையாட முடியாத சூழல் உருவாகியுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் அவர் மீண்டும் அணிக்குத் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க:லக்னௌ அணியில் பேட்ஸ்மேனாக மட்டும் களமிறங்கவுள்ள ஆஸி. ஆல்ரவுண்டர்!

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடர் நவம்பரில் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.

மகளிர் பிரிமீயர் லீக் எலிமினேட்டர்: குஜராத் ஜெயண்ட்ஸுக்கு 214 ரன்கள் இலக்கு!

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் எலிமினேட்டர் போட்டியில் முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்கள் எடுத்துள்ளது.மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் எலிமினே... மேலும் பார்க்க

டாப் ஆர்டர் பேட்ஸ்மேனாக விளையாட விரும்பும் கே.எல்.ராகுல்!

டாப் ஆர்டரில் களமிறங்கி நன்றாக விளையாடுவது தனக்கு இயல்பாக வருவதாக இந்திய அணியின் விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார்.இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான கே.எல்.ராகுல் வழக்கமாக 5-வத... மேலும் பார்க்க

டி20 சாம்பியன்-ஷிப் தொடர்: பாபர் அசாம், நசீம் ஷா விலகல்!

தேசிய டி20 சாம்பியன்-ஷிப் தொடரில் இருந்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் பாபர் அசாம் மற்றும் நசீம் ஷா இருவரும் விலகுவதாக அறிவித்துள்ளனர்.பாகிஸ்தானில் கடந்த 30 ஆண்டுகளுக்குப் பின்னர் சாம்பியன்ஸ் ட... மேலும் பார்க்க

டி20 தொடருக்காக நியூசிலாந்து சென்றடைந்த பாகிஸ்தான் அணி!

நியூசிலாந்துக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடுவதற்கான பாகிஸ்தான் அணி நியூசிலாந்து சென்றடைந்தது.பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிக... மேலும் பார்க்க

இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் சையத் அபித் அலி காலமானார்!

இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த ஆல்ரவுண்டர் சையத் அபித் அலி உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 83.ஆல்ரவுண்டரான சையத் அபித் அலி ஃபீல்டிங்கிக்கு பெயர் பெற்றவர். இவர் 1967 ஆம் ஆண்டு அடிலெய்டில் ந... மேலும் பார்க்க

லக்னௌ அணியில் பேட்ஸ்மேனாக மட்டும் களமிறங்கவுள்ள ஆஸி. ஆல்ரவுண்டர்!

பிரபல ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் லக்னௌ அணியில் பேட்ஸ்மேனாக மட்டும் விளையாடவுள்ளார்.இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. தொடரின் முதல் போட்டியில் நடப்பு சா... மேலும் பார்க்க