செய்திகள் :

ஆடு மேய்ப்பதில் தகராறு; வயதான தம்பதியை வெட்டிக் கொன்ற உறவினர் கைது; திருப்பூரில் கொடூரம்

post image

திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே துலுக்கமுத்தூர் ஊஞ்சல்பாளையம் சாலை பெரியதோட்டத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி (80). இவரது மனைவி பருவதம் (72). விவசாய குடும்பத்தைச் சேர்ந்த தம்பதிக்கு மகன், மகள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், தோட்டத்து வீட்டில் பழனிசாமி, அவரது மனைவி பருவதம் மட்டும் தனியாக வசித்து வந்தனர். வியாழக்கிழமை காலை நீண்ட நேரமாகியும் இருவரும் வெளியே வராததால், அருகிலிருந்தவர்கள் தோட்டத்துக்குள் சென்று பார்த்தபோது, இருவரும் வெட்டுக் காயங்களுடன் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.

கொலை

இதுதொடர்பாக அவிநாசி போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேற்கு மண்டல ஐ.ஜி., செந்தில்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரீஷ் யாதவ் ஆகியோர் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்தைப் பார்வையிட்டனர். தொடர்ந்து கொலை செய்யப்பட்ட தம்பதியின் சடலங்களைக் கைப்பற்றி விசாரித்தனர்.

பெரியதோட்டம் பகுதியில் வசித்து வரும் உறவினரான ரமேஷ்(40) என்பவர், தனது ஆடு, மாடுகளைப் பழனிசாமியின் தோட்டத்துக்குள் மேய்த்து வந்தார். அத்துடன் ரமேஷ் வளர்க்கும் நாய்களும் பழனிசாமியின் தோட்டத்துக்குள் சென்று பயிர்களைச் சேதப்படுத்தி வந்துள்ளன. இதனால், ரமேஷுக்கும், பழனிசாமிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

கொலை

புதன்கிழமை இதுதொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்றிரவு மதுபோதையிலிருந்த ரமேஷ் பழனிசாமியின் புகுந்து வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பருவதம், பழனிசாமி ஆகியோரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துள்ளார். பின்னர் அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் ரமேஷ் தப்பிச்சென்றபோது, அவிநாசி புறவழிச்சாலை தேவராயம்பாளையம் பிரிவு அருகே நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்கினார்.

இதில் லேசான காயமடைந்த ரமேஷ் அவிநாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதும் தெரியவந்தது. இதுகுறித்து அவிநாசி போலீஸார் கொலை வழக்குப் பதிந்து ரமேஷைக் கைது செய்தனர். தோட்டத்து வீட்டில் வசித்து வந்த வயதான தம்பதி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம், திருப்பூர் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

காட்பாடி: லைசென்ஸ் இல்லாத பிஸ்டல்; ஃபைனான்ஸியரின் முதுகை துளைத்த புல்லட் - நடந்தது என்ன?

வேலூர், காட்பாடி அருகேயுள்ள கழிஞ்சூர் பகுதியைச் சேர்ந்தவர் ஃபைனான்ஸியர் அருள்சுடர். இவர், காட்பாடி காந்தி நகரில் உள்ள ஆதிலட்சுமி தெய்வசிகாமணி திருமண மண்டபம் அருகே அலுவலகம் ஒன்றையும் நடத்தி வருகிறார். ... மேலும் பார்க்க

சென்னை: ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை - மருத்துவர் எடுத்த விபரீத முடிவுக்கு என்ன காரணம்?

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பகுதியைச் சேர்ந்தவர் டாக்டர் பாலமுருகன் (53). இவர் சென்னை திருமங்கலத்தில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இவரின் மனைவி சுமதி. இவர் வழக்கறிஞராக உள்ளார். இந்தத் தம்பதி... மேலும் பார்க்க

பார்க்கிங் பிரச்னை; விஞ்ஞானியை அடித்துக் கொன்ற பக்கத்து வீட்டுக்காரர்கள்... மொகாலியில் அதிர்ச்சி!

மொகாலியில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் எஜுகேசன் மற்றும் ரிசர்ச் மையத்தில் டாக்டர் அபிஷேக் (39) என்பவர் விஞ்ஞானியாகப் பணியாற்றி வந்தார். ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அபிஷேக் ஸ்விட்சர்லா... மேலும் பார்க்க

குஜராத்: மாணவர்கள் உட்பட 7 பேர்: 18 மாதங்களாக தொடர் பாலியல் வதை - கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கொடுமை!

குஜராத் மாநிலத்தில் கல்லூரி மாணவி ஒருவர் கடந்த 18 மாதங்களாக 7 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு வந்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. குஜராத் மாநிலம், பனஸ்கந்தா மாவட்டத்தைச் சேர்ந்த 18 ... மேலும் பார்க்க

திருப்பூர்: தோட்டத்து வீட்டில் வசித்த தம்பதி அடித்துக் கொலை - ஆதாயக் கொலையா? - போலீஸார் விசாரணை!

திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே துலுக்கமுத்தூர் ஊஞ்சப்பாளையம் சாலை பெரிய தோட்டத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி (82). இவரது மனைவி பருவதம் (75). விவசாய குடும்பத்தைச் சேர்ந்த இவர்களது மகன், மகள் இருவரும் தி... மேலும் பார்க்க

சென்னை: குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்ட மருத்துவர் - கடன் தொல்லை? ; விசாரித்து வரும் காவல்துறை

சென்னை திருமங்கலத்தில் கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. திருமங்கலம் 7-வது சாலையில் வசித்தவர்கள் மருத்துவர் பாலமுருகன் - வ... மேலும் பார்க்க