செய்திகள் :

பாகிஸ்தானில் தற்கொலைப் படைத் தாக்குதல்: 10 தீவிரவாதிகள் பலி!

post image

பாகிஸ்தானில் கைபர் பக்துங்வாவில் உள்ள எல்லைப் படை முகாம் அருகே ஒரு வாகனத்தில் நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதலில் 10 தீவிரவாதிகள் பலியாகினர்.

பாகிஸ்தானின் குவெட்டா பகுதியில் இருந்து பெஷாவர் நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஜாஃபர் விரைவு ரயிலை ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த பலூச் விடுதலை அமைப்பினர் சிறைப்பிடித்த நிலையில், 300-க்கும் மேற்பட்ட மக்கள் பயங்கரவாதிகளால் பிணைக் கைதிகளாக்கப்பட்டனர். இந்தச் சம்பவத்தில் 21 பயணிகளும், 4 ராணுவ வீரர்களும் பரிதாபமாகக் கொல்லப்பட்டனர்.

இந்தச் சம்பவம் நடைபெற்று இரண்டு நாள்கள்கூட ஆகாத நிலையில் கைபர் பக்துங்வாவில் உள்ள எல்லைப் படை முகாம் அருகே ஒரு வாகனத்தில் நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதலில் தெஹ்ரீக்-இ-தலிபான் இயக்கத்தைச் சேர்ந்த 10 தீவிரவாதிகள் பலியாகிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பயங்கரவாதிகள் ஜந்தோலா சோதனைச் சாவடியைத் தாக்க முயன்றுள்ளனர். எல்லைப்புறப் படை முகாம் அருகே ஒரு வாகனத்தில் வந்த தற்கொலைப் படையைச் சேர்ந்தவர் தன்னைத் தானே வெடிக்கச் செய்து கொண்டதாக பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் உறுதிபடுத்தியுள்ளனர்.

உலகளாவிய பயங்கரவாத குறியீட்டின் அடிப்படையில், பயங்கரவாதம் தொடர்பான இறப்புகளில் பாகிஸ்தான் 45 சதவிகிதத்துக்கு அதிகமான உயிரிழப்பை கண்டுள்ளது.

அதுமட்டுமின்றி 2023 ஆம் ஆண்டில் 748 முறை பயங்கரவாத தாக்குதல்களும், 2024 ஆம் ஆண்டில் 1,081 பயங்கரவாத தாக்குதல்களும் நடைபெற்றுள்ளது மக்களிடையே மேலும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

உக்ரைனில் போா் நிறுத்தத்துக்குத் தயாா்! -ரஷிய அதிபர் புதின்

மாஸ்கோ: உக்ரைனில் 30 நாள் போா் நிறுத்தத்துக்கு ரஷிய அதிபர் புதின் பச்சைக்கொடி காட்டியிருக்கிறார். உக்ரைன் விவகாரம் தொடர்பாக சௌதி அரேபியாவில் கடந்த செவ்வாய்க்கிழமை அமெரிக்க பிரதிநிதிகளுடன் நடந்த பேச்சு... மேலும் பார்க்க

அமெரிக்க விஸ்கிகளுக்கு வரிவிதித்தால் ஐரோப்பிய மது வகைகளுக்கு 200% வரி! -டிரம்ப்

அமெரிக்க விஸ்கி மீது ஐரோப்பிய யூனியன் திட்டமிட்டு வரி விதித்துள்ளதால், ஐரோப்பிய ஒயின், ஷாம்பெயின் மற்றும் மதுபானங்களுக்கு 200 சதவிகித வரி விதிக்கப்படும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.... மேலும் பார்க்க

காலநிலை உச்சி மாநாடு: சாலை அமைக்க அமேசான் காடுகளில் வெட்டப்பட்ட 1,000 மரங்கள்!

கால நிலை உச்சி மாநாட்டுக்காக அமேசான் காடுகளில் 1000 அதிகமான மரங்கள் வெட்டப்பட்டுள்ளதால் கடுமையான எதிர்ப்பு வலுத்துள்ளது.பிரேசிலில் நடைபெறவுள்ள காலநிலை உச்சி மாநாட்டுக்கு சாலை அமைப்பதற்காக ஆயிரத்துக்கு... மேலும் பார்க்க

ரஷிய ராணுவத்துக்கு வெடிகுண்டு பார்சல்களை அனுப்பிய நபர் கைது!

ரஷிய ராணுவ அதிகாரிகளுக்கு வெடிகுண்டு பார்சல் அனுப்பிய விவகாரத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டதாக ரஷிய பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. உக்ரைன் - ரஷிய போரைத் தொடர்ந்து உக்ரைனுக்கு உதவி செய்ய ஒத்துழைப்பு ... மேலும் பார்க்க

ரமலான்: 10 லட்சம் ஆடுகளை இறக்குமதி செய்கிறது அல்ஜீரியா!

ரமலான் பண்டிகையை முன்னிட்டு, கடும் வறட்சியில் சிக்கித் தவிக்கும் அல்ஜீரியாவின் தேவைக்கு ஏற்ப 10 லட்சம் ஆடுகளை இறக்குமதி செய்ய திட்டமிட்டிருப்பதாக, அந்நாட்டு அதிபர் அறிவித்துள்ளார்.ஞாயிறன்று நடைபெற்ற ஆ... மேலும் பார்க்க

கனடாவின் பிரதமராக மார்க் கார்னி நாளை பதவியேற்பு!

கனடாவின் 24-ஆவது பிரதமராக மார்க் கார்னி (59) நாளை(மார்ச் 14) பதவியேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.பதவியேற்பு விழா தொடர்பான அறிவிப்பை ஆளுநர் ஜெனரல் மேரி சைமன் அலுவலகம் புதன்கிழமை வெளியிட்டுள்ளது. முன... மேலும் பார்க்க