செய்திகள் :

காலநிலை உச்சி மாநாடு: சாலை அமைக்க அமேசான் காடுகளில் வெட்டப்பட்ட 1,000 மரங்கள்!

post image

கால நிலை உச்சி மாநாட்டுக்காக அமேசான் காடுகளில் 1000 அதிகமான மரங்கள் வெட்டப்பட்டுள்ளதால் கடுமையான எதிர்ப்பு வலுத்துள்ளது.

பிரேசிலில் நடைபெறவுள்ள காலநிலை உச்சி மாநாட்டுக்கு சாலை அமைப்பதற்காக ஆயிரத்துக்கும் அதிகமான மரங்களை வெட்டப்பட்டுள்ள சம்பவத்துக்கு கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது.

ஐக்கிய நாடுகள் அவையின் காலநிலை உச்சி மாநாட்டுக்கு பல்லாயிரக்கணக்கான பிரதிநிதிகள் வரவிருப்பதால், இந்த மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தக் காடுகள் அழிப்பினால், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த கவலையை எழுப்பியுள்ளது.

அமேசான் மழைக் காடுகள் கரியமிலவாயுவை உறிஞ்சிக் கொண்டு ஆக்ஸிஜன் வழங்கும் பல்லுயிர்த் தளமாக விளங்குகிறது. சாலைகள் அமைக்கப்படுவதால், தங்களின் இயல்புவாழ்க்கைப் பாதிக்கப்படுவதாக உள்ளூர்வாசிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுமட்டுமின்றி, இதனால், விலங்குகளின் உயிருக்கும் ஆபத்து ஏற்படும் என்று விலங்கு நல ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிக்க: ரஷிய ராணுவத்துக்கு வெடிகுண்டு பார்சல்களை அனுப்பிய நபர் கைது!

நவம்பரில் நடைபெறும் இந்த மாநாட்டில் 50,000-க்கும் அதிகமான மக்கள் பயணிக்கும் வகையில், 4 வழிச்சாலைகள் அமைக்கப்படவிருக்கிறது. இது மக்களுக்கு எளிதாக போக்குவரத்தை ஏற்படுத்த உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வகையான காடுகள் அழிப்பது என்பதே காலநிலை உச்சி மாநாட்டுக்கு எதிரானது என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

சாலை அமையவிருக்கும் இடத்திலிருந்து 200 கி.மீ. தொலைவில் வசிக்கும் கிளாடியோ கூறுகையில், “அமேசான் காடுகளில் கிடைக்கும் அகாய் காய்களை அறுவடை செய்து பிழைப்பு நடத்தி வந்தோம். தற்போது இந்த மரங்கள் அழிக்கப்படுவதால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என வருத்தம் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், பிரேசிலின் அதிபரும், சுற்றுச்சூழல் அமைச்சருமான லூயிஸ் இனாசியோ லுலாடா சில்வா கூறுகையில், இது அமேசானில் நடைபெறும் காலநிலை உச்சி மாநாடு, அமேசான் காடுகள் பற்றிய மாநாடு இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

அமேசான் காடுகளின் தேவையை உலகுக்கு காண்பிக்கவும், அவற்றின் தேவையை அதிகரிக்கவும், காடுகளைப் பாதுகாக்க மத்திய அரசு என்ன செய்துள்ளது என்பதைக் காட்டவும் இந்த மாநாடு வாய்ப்பளிக்கும் என்றும் அதிபர் கூறியுள்ளார்.

இதையும் படிக்க: 40 ஆண்டுகளில் முதல் முறையாக சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! எரிமலை வெடிக்கும் அபாயம்?

அமெரிக்கா: தரையிறங்கிய விமானத்தில் தீ! 172 பயணிகள் நிலை?

அமெரிக்காவின் டென்வர் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானத்தில் வியாழக்கிழமை மாலை ஏற்பட்ட தீ விபத்தால் பதற்றம் நிலவுகிறது.முதல்கட்டமாக வெளியான தகவலின்படி, விமானத்தில் பயணித்த 172 பயணிகளும் பத்... மேலும் பார்க்க

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கு பொறுப்பேற்கத் தயாா்: டுடோ்த்தே

ஐ.நா.வின் சா்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் சுமத்தப்பட்டுள்ள மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கு பொறுப்பேற்கத் தயாராக இருப்பதாக பிலிப்பின்ஸ் முன்னாள் அதிபா் ரோட்ரிகோ டுடோ்த்தே கூறியுள்ளாா். இது தொடா்ப... மேலும் பார்க்க

சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்புவதில் மீண்டும் தாமதம்

இந்திய வம்சாவளியைச் சோ்ந்த நாசா விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவது மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.சுனிதாவையும் அவருடன் சென்றுள்ள மற்றொரு நாசா விண்வெளி வீரா் பட்ச் வில்மோரை... மேலும் பார்க்க

உக்ரைன் அமைதி திட்டத்தில் நடைமுறை சிக்கல்கள்: விளாதிமீா் புதின்

உக்ரைன் முன்வைத்துள்ள 30 நாள் போா் நிறுத்த திட்டத்தை நிறைவேற்றுவதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளதாக ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் கூறியுள்ளாா். ரஷியா வந்துள்ள பெலாரஸ் அதிபா் அலெக்ஸாண்டா் லுகஷென்காவுடன் பே... மேலும் பார்க்க

எங்கள் நாடு குறித்த இந்தியாவின் கருத்து தேவையற்றது - வங்கதேச வெளியுறவு அமைச்சகம்

‘எங்கள் நாடு குறித்து அண்மையில் இந்தியா தெரிவித்த கருத்து தேவையற்றது; இது மற்றொரு நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதற்கு சமம்’ என வங்கதேச வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது. வங்கதேசத்தில் வன்முறை... மேலும் பார்க்க

கூா்ஸ்க் பிராந்தியத்தின் முக்கிய நகரைக் கைப்பற்றிய ரஷியா

ரஷிய எல்லைப் பகுதியில் உள்ள கூா்ஸ்க் பிராந்தியத்தின் முக்கிய நகரான சுட்லாவில் இருந்து உக்ரைன் ராணுவத்தை வெளியேற்றி மீண்டும் அப்பகுதியைக் கைப்பற்றியதாக ரஷியா வியாழக்கிழமை தெரிவித்தது. கடந்த ஆண்டு ஆகஸ்ட... மேலும் பார்க்க