செய்திகள் :

அதிமுக எம்எல்ஏக்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!

post image

தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளதையடுத்து அதிமுக எம்எல்ஏக்களுடன் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

தமிழக அரசின் அடுத்த நிதியாண்டுக்கான (2025-26) நிதிநிலை அறிக்கை, சட்டப்பேரவையில் இன்று (மாா்ச் 14) தாக்கல் செய்யப்பட உள்ளது.

இதையொட்டி தமிழ்நாடு சட்டமன்ற வளாகத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வருகை தந்துள்ளார்.

மேலும், தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளதையடுத்து அதிமுக எம்எல்ஏக்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

இதையும் படிக்க | தமிழ்நாடு பட்ஜெட் இலச்சினையில் 'ரூ' குறியீடு!

அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலை தமிழ்நாடு எதிா்கொள்ளவுள்ள நிலையில், அதற்கு முன்பாக திமுக தலைமையிலான அரசு தாக்கல் செய்யும் முழுமையான நிதிநிலை அறிக்கை இதுவாகும்.

எனவே, பொதுமக்கள், அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் என பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகள், எதிா்பாா்ப்புகளை நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டிருக்கிறது.

ஹோலி: தன் மீது சாயம் பூசியதை எதிர்த்த இளைஞர் கொலை!

ராஜஸ்தான் மாநிலம் தௌஸா மாவட்டத்தில் தன் மீது சாயம் பூசுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ளார். தௌஸா மாவட்டத்தின் ரல்வாஸ் கிராமத்தைச் சேர்ந்த ஹன்ஸ்ராஜ் (வயது 25) என்ற இளைஞர் கடந்த மா... மேலும் பார்க்க

சிரியாவின் மின்சார உற்பத்திக்கு உதவும் கத்தார்!

சிரியாவின் மின்சார உற்பத்திக்காக கத்தார் நாடு இயற்கை எரிவாயு வழங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிரியா நாட்டில் நிலவும் மின்சார தட்டுப்பாடுகளை சரிசெய்ய கத்தார் நாட்டிலிருந்து நாளொன்றுக்கு 2 மில்லியன்... மேலும் பார்க்க

ஹிஜாப் விவகாரத்தில் செயலி, சிசிடிவி, டிரோன் மூலம் கண்காணிக்கும் அரசு: ஐநா அறிக்கை!

ஹிஜாப் விவகாரத்தில் அந்நாட்டுப் பெண்களை நவீன முறைகளில் ஈரான் அரசு கண்காணிப்பதாக ஐ.நா. சபை அறிக்கை வெளியிட்டுள்ளது. ஈரான் நாட்டில் பெண்கள் கட்டாயம் தலையை மறைத்து ஹிஜாப் அணிய வேண்டும் என்ற சட்டம் உள்ளது... மேலும் பார்க்க

ரூபாய் குறியீடு நீக்கம்: கருணாநிதி உருவம் பொறித்த நாணயங்களை திமுக வீசி எறிந்துவிடுமா? - அன்புமணி

தமிழக நிதிநிலை அறிக்கை இலச்சினையை ரூபாய் குறியீட்டை திமுக அரசு நீக்கியுள்ளதற்கு, கருணாநிதி உருவம் பொறித்த நாணயங்களை திமுக வீசி எறிந்துவிடுமா? என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.... மேலும் பார்க்க

அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தைப் புறக்கணித்த செங்கோட்டையன்!

சட்டப்பேரவை நிகழ்வுகள் தொடங்கும்முன் நடைபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. 2025-26 ஆம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் ... மேலும் பார்க்க

ரூ.3,796 கோடி நிதியை நிலுவை: நிதியமைச்சா் தங்கம் தென்னரசு

மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் மத்திய அரசிடமிருந்து வரப்பெறக்கூடிய தொகைகளின் விகிதம் தொடர்ச்சியாக மிக அதிக அளவில் குறைந்து கொண்டே வருகிறது. இதனால், 2016-17 மற்றும் 2024-25 ஆண்டுகளுக்கு... மேலும் பார்க்க