செய்திகள் :

Infosys: `எதர்கெடுத்தாலும் 'AI' என்று பேசுகிறார்கள்; அது ஒரு சாதராண தொழில்நுட்பம்' - நாராயண மூர்த்தி

post image

சில மாதங்களுக்கு முன்னர் இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி ஊழியர்கள் அனைவரும் வாரத்துக்கு 70 மணிநேரம் வேலை செய்ய வேண்டும் எனக் கூறியிருந்தார். அதற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. இதையடுத்துத் தற்போது செயற்கை நுண்ணறிவால் பெரிதாக வேலைகள் பறிபோகும் ஆபத்தில்லை என்று பேசியிருக்கிறார்.

இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி!

சமீபத்திய நேர்காணல் ஒன்றில் இது குறித்துப் பேசியிருக்கும் நாராயண மூர்த்தி, "இப்போதெல்லாம் இந்தியாவில் எதற்கெடுத்தாலும் AI பற்றி பேசுவது ஃபேஷனாகிவிட்டது. அது ஒரு ப்ரோகிராம் செய்யப்பட்ட சாதரண தொழில்நுட்பம்தான்.

மெஷின் லேர்னிங் மற்றும் நிறைய தரவுகளை அதில் செலுத்துவதால் அது திறன் மிகுந்ததாக வேலை செய்கிறது. இருப்பினும் அது பழைய புரோகிராம்களையே வடிவமைக்கிறது. மேற்பார்வையின்றி செயல்படுவதால் அதை நாம் முழுமையாக நம்பியிருக்க முடியாது. அதை நாம் திறன் மிகுந்த வேலைகள் செய்யப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

AI சில வேலைகளுக்கு மாற்றாக இருக்கும், அதனால் வேலைகள் போக வாய்ப்பிருக்கிறது. ஆனால், அது மாறுதல் கொண்டது. அதை நாம் ஒரு உதவியாளர் போல பயன்படுத்திக் கொண்டால் பிரச்னைகள் இல்லை" என்று பேசியிருக்கிறார்.

Starlink: `நேற்று ஏர்டெல்; இன்று ஜியோ' - எலான் மஸ்க்குடன் கூட்டு சேர்ந்த அம்பானி... காரணம் என்ன?

'இனி இந்தியாவில் ஸ்டார்லிங் உபகரணங்களை ஏர்டெல் ஸ்டோர்களில் வாங்கலாம்' என்று எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங் நிறுவனத்துடன் ஏர்டெல் நிறுவனம் கைகோர்த்தது குறித்து நேற்று அறிவித்திருந்தது ஏர்டெல் நிறுவனம். இந்... மேலும் பார்க்க

AI: செயற்கை நுண்ணறிவுக்கு பதற்றம் வருமா; மனநல சிகிச்சைக்கு உதவுமா? - புதிய ஆய்வு சொல்வதென்ன?

செயற்கை நுண்ணறிவால் (AI) உணர்வுகளை உணர முடியாது என்றாலும், அது 'பதட்டம்' போன்ற உணர்வுகளுக்கு நெருக்கமான ஒரு நிலையை அனுபவிக்க முடியும் என சமீபத்திய ஆய்வு ஒன்று கூறுகிறது. யேல் பல்கலைக்கழகம், ஹாஃபியா பல... மேலும் பார்க்க

Starlink: இந்தியாவில் என்ட்ரியாகும் எலான் மஸ்க் நிறுவனம்... அம்பானியின் ஜியோவிற்கு ஆபத்தா?!

கடந்த ஆண்டிலிருந்து எலான் மஸ்க்கின் ஸ்டார் லிங்க் நிறுவனம் இந்திய தொலைதொடர்பு துறைக்குள் வர கடுமையாக முயற்சி செய்து வந்தது. கடந்த ஆண்டு, செயற்கைக்கோள் இணைய சேவை ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்து பேச்சு வ... மேலும் பார்க்க

Manus : மேனஸ் - ஏ.ஐ உலகின் `ஏகலைவன்!'

செயற்கை நுண்ணறிவு தொடர்பான கண்டுபிடிப்புகளும் அவற்றின் பயன்பாடும் அதிவேகமாக வளர்ந்து வரும் நிலையில், ஒரு மிகப்பெரிய மைல்கல்லாக சமீபத்தில் களமிறங்கியிருக்கிறது "மேனஸ்" என்கிற ஏ. ஐ பொது முகவர் (General ... மேலும் பார்க்க

Manus: உலகின் முதல் முழு சுயாதீன ஏஐ ஏஜென்ட் - சீனாவில் ஓர் எழுச்சியும், சில கேள்விகளும்!

சீனாவின் புதிய செயற்கை நுண்ணறிவு ஏஜென்ட் ஆன மேனஸ் (Manus), சிக்கல்கள் நிறைந்த நிஜ உலகப் பணிகளைக் கையாளும் திறனுடன் உலக நாடுகளின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. Manus - AI agentசீன முதலீட்டாளர்கள் மற்று... மேலும் பார்க்க

Skype: 'இனி ஸ்கைப் கிடையாது... 'இது' தான்!' - மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவிப்பு

Skypeமைக்ரோசாப்ட் நிறுவனம் தனது வீடியோ கான்பரன்சிங் தளமான ஸ்கைப்(Skype) தள சேவைகளை வரும் மே மாதத்தில் நிரந்தரமாக மூட உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த செயலிக்கு மாற்றாக மைக்ரோசாப்ட் டீம்ஸ் செயலியை பயனர்கள்... மேலும் பார்க்க