செய்திகள் :

அசாம்: அரசு மகளிர் காப்பகத்தில் ஹோலி கொண்டாடிய ஆளுநர்!

post image

வடகிழக்கு மாநிலமான அசாமின் ஆளுநர் அம்மாநில அரசின் மகளிர் காப்பகத்தில் வசிப்பவர்களுடன் ஹோலி பண்டிகையை கொண்டாடியுள்ளார்.

குவாஹட்டி மாவட்டத்தின் ஜலுக்பாரி பகுதியிலுள்ள அரசு மகளிர் காப்பகத்தில் வசிப்பவர்களுடன் அம்மாநில ஆளுநர் லக்‌ஷ்மன் பிரசாத் ஆச்சாரியா, இன்று (மார்ச் 14) ஹோலி பண்டிகையை கொண்டாடியுள்ளார்.

இதுகுறித்து வெளியான அறிக்கையில், அங்கு வசிக்கும் பெண்களிடையே மகிழ்ச்சியைப் பரப்பவும், சொந்தம் என்ற உணர்வை ஊக்குவிக்கவும் ஆளுநர் அவர்களுடன் ஹோலி பண்டிகை கொண்டாடியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: கன்னட நடிகை ரன்யா ராவின் ஜாமீன் மனு தள்ளுபடி

இதனைத் தொடர்ந்து, ஆளுநர் லக்‌ஷ்மன் பிரசாத் அந்த காப்பகத்தில் வசிக்கும் பெண்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் பரிசுக்களையும் வழங்கினார்.

மேலும், அங்கு வசிக்கும் பெண்கள் வாழ்க்கையின் நேர்மறையான விஷயங்களில் கவனம் செலுத்துமாறும், ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபட்டு நம்பிக்கையுடன் இருக்குமாறும் அவர் அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, நீர் செடிகளிலிருந்து பல்வேறு பொருள்களை தயாரிப்பதில் அவர்களின் திறமைகளையும் படைப்பாற்றலையும் குறிப்பிட்டு அவர் பாராட்டினார்.

ரைசினா உரையாடல்: நியூசிலாந்து பிரதமர் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் பங்கேற்பு!

இந்திய அரசின் அழைப்பை ஏற்று ரைசினா உரையாடல் மாநாட்டில் நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்ஸர்வர் ரிசர்ச் பவுண்டேஷனுடன் இண... மேலும் பார்க்க

இலங்கை: ரயில் மோதி யானைகள் பலியாவதைத் தடுக்க நடவடிக்கை!

இலங்கையில் ரயில் பாதையில் யானைகள் குறுக்கே வந்து பலியாவைத் தடுக்க அந்நாட்டு ரயில்வே துறை நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த பிப்.20 அன்று இலங்கையின் கிழக்கிலுள்ள மட்டக்களப்பிலி... மேலும் பார்க்க

பார்சிலோனா அணியின் முன்னாள் வீரரிடம் நீதிபதி விசாரணை!

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பார்சிலோனா கால்பந்து அணியின் முன்னாள் வீரர் ஜெரார்ட் பிக்கேவிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பார்சிலோனாவின் முன்னாள் வீரர் ஜெரார்ட் பிக்கேவிடம், சவூதி அரேபியாவில் ஸ்பானிஷ் சூப... மேலும் பார்க்க

தில்லி வந்தடைந்தார் நேபாள வெளியுறவுத் துறை அமைச்சர்!

நேபாள நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் அர்ஸு ரானா டியூபா இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். இந்தியவில் நடைபெறவுள்ள 2025 ஆம் ஆண்டிற்கான ரைசினா உரையாடல் மாநாட்டில் பங்கேற்பதற்காக நேபாளத்தின் வெளியுறவுத்... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் ஹோலி பண்டிகை கொண்டாட்டம்!

பாகிஸ்தான் நாட்டின் இந்து மக்களினால் ஹோலி பண்டிகை கடூம் பாதுகாப்புடன் கொண்டாடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் சிறுபான்மையினரின் வழிபாட்டு தளங்களை பராமரிக்கும் எவாக்யூ டிரஸ்ட் பிராப்பர்ட... மேலும் பார்க்க

ஹோலி: தன் மீது சாயம் பூசியதை எதிர்த்த இளைஞர் கொலை!

ராஜஸ்தான் மாநிலம் தௌஸா மாவட்டத்தில் தன் மீது சாயம் பூசுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ளார். தௌஸா மாவட்டத்தின் ரல்வாஸ் கிராமத்தைச் சேர்ந்த ஹன்ஸ்ராஜ் (வயது 25) என்ற இளைஞர் கடந்த மா... மேலும் பார்க்க