செய்திகள் :

இலங்கை: ரயில் மோதி யானைகள் பலியாவதைத் தடுக்க நடவடிக்கை!

post image

இலங்கையில் ரயில் பாதையில் யானைகள் குறுக்கே வந்து பலியாவைத் தடுக்க அந்நாட்டு ரயில்வே துறை நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த பிப்.20 அன்று இலங்கையின் கிழக்கிலுள்ள மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற ரயில் ஹர்பனா பகுதியில் வந்தபோது, ரயில் பாதையை கடக்க முயன்ற யானைக் கூட்டத்தின் மீது மோதியதில் ரயில் தடம் புரண்டது.

இதில், 6 யானைகள் சம்பவயிடத்திலேயே பலியான நிலையில் 2 யானைகள் படுகாயமடைந்தன. இந்த சம்பவத்தில் அந்த ரயிலில் பயணித்தவர்கள் யாருக்கும் எந்தவொரு ஆபத்தும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், படுகாயமடைந்த யானைகளில் ஒன்று சிகிச்சை பலனின்றி பலியானது.

இதே இடத்தில், கடந்த 2018 ஆம் ஆண்டு இதேபோன்ற ஓர் விபத்தில் ரயில் மோதி தாய் யானை ஒன்றும் அதன் 2 குட்டிகளும் பலியாகின.

இதையும் படிக்க:எத்தியோப்பியாவில் காலரா பாதிப்பு: 31 பேர் பலி!

இந்நிலையில், அப்பகுதியில் ரயில் மீது யானைகள் மோதுவதைத் தடுக்க வன விலங்கு ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் இலங்கை ரயில்வே அதிகாரிகள் இணைந்து பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து இலங்கை ரயில்வே துறையின் உயர் அதிகாரி பி எஸ் பொல்வட்டாகே கூறுகையில், ரயில்வே துறை அதன் 160 ஆண்டுக்கால வரலாற்றில் இயற்கை வளங்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருவதாகவும், இது போன்ற ரயில் விபத்துகளில் கடந்த நான்கு ஆண்டுகளில் 138 யானைகளும் கடந்த 17 ஆண்டுகளில் 1,238 யானைகளும் பலியாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், ரயில் ஓட்டுநர்களுக்கு சிறந்த தெரிவுநிலையை வழங்குவதற்காக தண்டவாளத்தின் இரு பக்கங்களையும் சுத்தம் செய்வது மற்றும் யானைகள் சிக்கிக் கொள்வதைத் தடுக்க தண்டவாளத்தில் உள்ள இடங்களை நிரப்புவது போன்ற நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டு வருவதாகக் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த 2024 ஆம் ஆண்டின் கணக்குப்படி இலங்கையில் மொத்தம் 5,800 யானைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ரைசினா உரையாடல்: நியூசிலாந்து பிரதமர் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் பங்கேற்பு!

இந்திய அரசின் அழைப்பை ஏற்று ரைசினா உரையாடல் மாநாட்டில் நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்ஸர்வர் ரிசர்ச் பவுண்டேஷனுடன் இண... மேலும் பார்க்க

அசாம்: அரசு மகளிர் காப்பகத்தில் ஹோலி கொண்டாடிய ஆளுநர்!

வடகிழக்கு மாநிலமான அசாமின் ஆளுநர் அம்மாநில அரசின் மகளிர் காப்பகத்தில் வசிப்பவர்களுடன் ஹோலி பண்டிகையை கொண்டாடியுள்ளார்.குவாஹட்டி மாவட்டத்தின் ஜலுக்பாரி பகுதியிலுள்ள அரசு மகளிர் காப்பகத்தில் வசிப்பவர்கள... மேலும் பார்க்க

பார்சிலோனா அணியின் முன்னாள் வீரரிடம் நீதிபதி விசாரணை!

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பார்சிலோனா கால்பந்து அணியின் முன்னாள் வீரர் ஜெரார்ட் பிக்கேவிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பார்சிலோனாவின் முன்னாள் வீரர் ஜெரார்ட் பிக்கேவிடம், சவூதி அரேபியாவில் ஸ்பானிஷ் சூப... மேலும் பார்க்க

தில்லி வந்தடைந்தார் நேபாள வெளியுறவுத் துறை அமைச்சர்!

நேபாள நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் அர்ஸு ரானா டியூபா இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். இந்தியவில் நடைபெறவுள்ள 2025 ஆம் ஆண்டிற்கான ரைசினா உரையாடல் மாநாட்டில் பங்கேற்பதற்காக நேபாளத்தின் வெளியுறவுத்... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் ஹோலி பண்டிகை கொண்டாட்டம்!

பாகிஸ்தான் நாட்டின் இந்து மக்களினால் ஹோலி பண்டிகை கடூம் பாதுகாப்புடன் கொண்டாடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் சிறுபான்மையினரின் வழிபாட்டு தளங்களை பராமரிக்கும் எவாக்யூ டிரஸ்ட் பிராப்பர்ட... மேலும் பார்க்க

ஹோலி: தன் மீது சாயம் பூசியதை எதிர்த்த இளைஞர் கொலை!

ராஜஸ்தான் மாநிலம் தௌஸா மாவட்டத்தில் தன் மீது சாயம் பூசுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ளார். தௌஸா மாவட்டத்தின் ரல்வாஸ் கிராமத்தைச் சேர்ந்த ஹன்ஸ்ராஜ் (வயது 25) என்ற இளைஞர் கடந்த மா... மேலும் பார்க்க