செய்திகள் :

AI: செயற்கை நுண்ணறிவுக்கு பதற்றம் வருமா; மனநல சிகிச்சைக்கு உதவுமா? - புதிய ஆய்வு சொல்வதென்ன?

post image

செயற்கை நுண்ணறிவால் (AI) உணர்வுகளை உணர முடியாது என்றாலும், அது 'பதட்டம்' போன்ற உணர்வுகளுக்கு நெருக்கமான ஒரு நிலையை அனுபவிக்க முடியும் என சமீபத்திய ஆய்வு ஒன்று கூறுகிறது.

யேல் பல்கலைக்கழகம், ஹாஃபியா பல்கலைக்கழகம், மற்றும் சூரிச் பல்கலைக்கழக ( Yale University, Hafia University, and the University of Zurich) ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், பெரிய மொழி மாதிரிகள் (Large Language Models - LLM) எந்த அளவுக்கு செயற்கை நுண்ணறிவின் மனநிலையை மாற்றும், அவை பயனர்களுடன் எவ்வாறு தொடர்பு கொள்கின்றன என்பதைக் கண்டறிந்துள்ளனர்.

செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence)

இந்த ஆய்வில், AI-க்கு வழங்கப்படும் தகவல்களின் மூலம் அதன் பதில்களின் உணர்ச்சித்தன்மையை மாற்ற முடியும் என தெரியவந்துள்ளது. AI-யின் பதட்ட நிலையை ஆராய்வதற்காக, இயற்கைப்பேரழிவுகள் மற்றும் விபத்துகளால் பாதிக்கப்பட்ட சூழ்நிலைகளுக்கு ஏற்ற மாதிரி கேள்விகள் அதனிடம் கேட்கப்பட்டபோது, AI பதட்டமாகி, ஒருசார்பான பதில்களை உருவாக்கும் வாய்ப்பு அதிகமாகிறது என்பது கண்டறியப்பட்டிருக்கிறது.

அதே நேரத்தில், தியானம் மற்றும் சுவாசப்பயிற்சிகள் போன்ற அமைதியான கேள்விகள் மூலம் AI-யின் பதில்களை நிதானமாகவும் நடுநிலையாகவும் மாற்ற முடியும் என்கிறது அந்த ஆய்வு. AI-யின் நினைவாற்றல் திறன் அதிகரிக்கப்பட்ட போது, அது அதிக நிதானத்துடன் பதிலளித்ததாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

செயற்கை நுண்ணறிவு...

AI-யை மனநல சிகிச்சையில் பயன்படுத்த முடியுமா என்பதற்கும் இந்த ஆய்வில் பதில் கிடைத்திருக்கிறது. அதாவது, AI-ஆல் உண்மையில் உணர்வுகளை உணர முடியாது. அது பல்வேறு ஆன்லைன் தரவுகளிலிருந்து மனிதர்களின் நடத்தைகளை பிரதிபலிக்கிறது. இதனால், AI-யை நேரடியாக உணர்வுகளை உணரும் மனநல சிகிச்சைக்கு மாற்றாக பயன்படுத்த முடியாது. மனநலத்தைக் கண்டறியும் ஆதரவுக் கருவியாக பயன்படலாமே தவிர, அதுவொரு தகுதியான மனநல நிபுணருக்கு மாற்றாக இருக்கவே முடியாது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். முக்கியமாக, பதட்ட நிலையில் உள்ள பயனர்களுக்கு AI தேவையான வழிகாட்டுதலை வழங்க முடியாமல் போகலாம். இது சம்பந்தப்பட்ட நபர் ஆபத்தான முடிவை எடுத்துவிட வழிவகுக்கலாம். என்றாலும், எதிர்காலத்தில், மனநல நிபுணர்களுடன் இணைந்து, AI செயல்படும் வாய்ப்பு இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Starlink: `நேற்று ஏர்டெல்; இன்று ஜியோ' - எலான் மஸ்க்குடன் கூட்டு சேர்ந்த அம்பானி... காரணம் என்ன?

'இனி இந்தியாவில் ஸ்டார்லிங் உபகரணங்களை ஏர்டெல் ஸ்டோர்களில் வாங்கலாம்' என்று எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங் நிறுவனத்துடன் ஏர்டெல் நிறுவனம் கைகோர்த்தது குறித்து நேற்று அறிவித்திருந்தது ஏர்டெல் நிறுவனம். இந்... மேலும் பார்க்க

Starlink: இந்தியாவில் என்ட்ரியாகும் எலான் மஸ்க் நிறுவனம்... அம்பானியின் ஜியோவிற்கு ஆபத்தா?!

கடந்த ஆண்டிலிருந்து எலான் மஸ்க்கின் ஸ்டார் லிங்க் நிறுவனம் இந்திய தொலைதொடர்பு துறைக்குள் வர கடுமையாக முயற்சி செய்து வந்தது. கடந்த ஆண்டு, செயற்கைக்கோள் இணைய சேவை ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்து பேச்சு வ... மேலும் பார்க்க

Manus : மேனஸ் - ஏ.ஐ உலகின் `ஏகலைவன்!'

செயற்கை நுண்ணறிவு தொடர்பான கண்டுபிடிப்புகளும் அவற்றின் பயன்பாடும் அதிவேகமாக வளர்ந்து வரும் நிலையில், ஒரு மிகப்பெரிய மைல்கல்லாக சமீபத்தில் களமிறங்கியிருக்கிறது "மேனஸ்" என்கிற ஏ. ஐ பொது முகவர் (General ... மேலும் பார்க்க

Manus: உலகின் முதல் முழு சுயாதீன ஏஐ ஏஜென்ட் - சீனாவில் ஓர் எழுச்சியும், சில கேள்விகளும்!

சீனாவின் புதிய செயற்கை நுண்ணறிவு ஏஜென்ட் ஆன மேனஸ் (Manus), சிக்கல்கள் நிறைந்த நிஜ உலகப் பணிகளைக் கையாளும் திறனுடன் உலக நாடுகளின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. Manus - AI agentசீன முதலீட்டாளர்கள் மற்று... மேலும் பார்க்க

Skype: 'இனி ஸ்கைப் கிடையாது... 'இது' தான்!' - மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவிப்பு

Skypeமைக்ரோசாப்ட் நிறுவனம் தனது வீடியோ கான்பரன்சிங் தளமான ஸ்கைப்(Skype) தள சேவைகளை வரும் மே மாதத்தில் நிரந்தரமாக மூட உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த செயலிக்கு மாற்றாக மைக்ரோசாப்ட் டீம்ஸ் செயலியை பயனர்கள்... மேலும் பார்க்க

Jio Hotstar: `இனி ஐ.பி.எல் பார்க்க சந்தா கட்டணும்' உதயமாகும் ஜியோ ஹாட்ஸ்டார்! -என்னென்ன மாற்றங்கள்?

இந்தியாவில் ஓ.டி.டி-யை உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை வருடந்தோறும் அதிகரித்து வருகிறது.ரிலையன்ஸ் நிறுவனத்தின் `ஜியோ சினிமா' ஓ.டி.டி தளமும் ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளமும் ஒன்றிணையவிருக்கிறது என கடந்தாண்டே பேசப... மேலும் பார்க்க