செய்திகள் :

லக்னௌ அணியில் பேட்ஸ்மேனாக மட்டும் களமிறங்கவுள்ள ஆஸி. ஆல்ரவுண்டர்!

post image

பிரபல ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் லக்னௌ அணியில் பேட்ஸ்மேனாக மட்டும் விளையாடவுள்ளார்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து விளையாடுகிறது.

பேட்ஸ்மேனாக மட்டும்...

விரைவில் ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ள நிலையில், லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஆல்ரவுண்டரான மிட்செல் மார்ஷ், இந்த சீசனில் பேட்டிங் மட்டும் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: எதுவும் நல்ல விதத்தில் முடிவதில்லை: ஓய்வை அறிவித்த வங்கதேச வீரர்!

ஆஸ்திரேலிய டி20 அணியின் கேப்டனான மிட்செல் மார்ஷ் விரைவில் ஐபிஎல் தொடருக்காக லக்னௌ அணியில் இணையவுள்ளார். காயம் காரணமாக இலங்கைக்கு எதிரான தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடாத மிட்செல் மார்ஷ், தற்போது ஐபிஎல் தொடரில் விளையாடவுள்ளார்.

காயத்திலிருந்து மீண்டுள்ள மிட்செல் மார்ஷ் லக்னௌ அணிக்காக முன்வரிசையில் இம்பாக்ட் வீரராக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆல்ரவுண்டரான மார்ஷ், இந்த சீசனில் பந்துவீச்சில் ஈடுபட மாட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: ரோஹித் சர்மா ஏன் ஓய்வு பெறவேண்டும்?: ஏபிடி வில்லியர்ஸ்

கடந்த 3 சீசன்களாக தில்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடிய மிட்செல் மார்ஷ், அடிக்கடி காயம் காரணமாக அவதிப்பட்டு வந்தார். கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் காயம் காரணமாக வெறும் 4 போட்டிகளில் மட்டுமே அவர் விளையாடினார்.

கடந்த ஆண்டு துபையில் நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியால் மிட்செல் மார்ஷ் ரூ.3.40 கோடிக்கு வாங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை தவறவிடும் இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளர்!

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் மார்க் வுட் விளையாட முடியாத சூழல் உருவாகியுள்ளது.இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட்... மேலும் பார்க்க

டாப் ஆர்டர் பேட்ஸ்மேனாக விளையாட விரும்பும் கே.எல்.ராகுல்!

டாப் ஆர்டரில் களமிறங்கி நன்றாக விளையாடுவது தனக்கு இயல்பாக வருவதாக இந்திய அணியின் விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார்.இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான கே.எல்.ராகுல் வழக்கமாக 5-வத... மேலும் பார்க்க

டி20 சாம்பியன்-ஷிப் தொடர்: பாபர் அசாம், நசீம் ஷா விலகல்!

தேசிய டி20 சாம்பியன்-ஷிப் தொடரில் இருந்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் பாபர் அசாம் மற்றும் நசீம் ஷா இருவரும் விலகுவதாக அறிவித்துள்ளனர்.பாகிஸ்தானில் கடந்த 30 ஆண்டுகளுக்குப் பின்னர் சாம்பியன்ஸ் ட... மேலும் பார்க்க

டி20 தொடருக்காக நியூசிலாந்து சென்றடைந்த பாகிஸ்தான் அணி!

நியூசிலாந்துக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடுவதற்கான பாகிஸ்தான் அணி நியூசிலாந்து சென்றடைந்தது.பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிக... மேலும் பார்க்க

இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் சையத் அபித் அலி காலமானார்!

இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த ஆல்ரவுண்டர் சையத் அபித் அலி உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 83.ஆல்ரவுண்டரான சையத் அபித் அலி ஃபீல்டிங்கிக்கு பெயர் பெற்றவர். இவர் 1967 ஆம் ஆண்டு அடிலெய்டில் ந... மேலும் பார்க்க

எதுவும் நல்ல விதத்தில் முடிவதில்லை: ஓய்வை அறிவித்த வங்கதேச வீரர்!

வங்கதேச வீரர் மஹ்மதுல்லா (39) சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்துள்ளார். மஹ்மதுல்லா வங்கதேசத்தில் அதிகமாக ரன்கள் குவித்தவர்கள் வரிசையில் 4ஆவது இடத்தில் இருக்கிறார். அனைத்து ஐசிசி தொடர... மேலும் பார்க்க