செய்திகள் :

எதுவும் நல்ல விதத்தில் முடிவதில்லை: ஓய்வை அறிவித்த வங்கதேச வீரர்!

post image

வங்கதேச வீரர் மஹ்மதுல்லா (39) சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.

மஹ்மதுல்லா வங்கதேசத்தில் அதிகமாக ரன்கள் குவித்தவர்கள் வரிசையில் 4ஆவது இடத்தில் இருக்கிறார். அனைத்து ஐசிசி தொடர்களிலும் 4 சதங்கள் அடித்துள்ளார்.

மஹ்மதுல்லா தனது 17 வருட கிரிக்கெட் பயணத்தில் 239 ஒருநாள், 50 டெஸ்ட், 141 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

2007இல் ஒருநாள் போட்டிகளில் அறிமுகமாகிய மஹ்மதுல்லா 2011 உலகக் கோப்பையில் இங்கிலாந்துடனான போட்டியில் கவனம் பெற்றார்.

ஒருநாள் உலகக் கோப்பையில் 3 சதமடித்த ஒரே வங்க தேச வீரராக மஹ்மதுல்லா மட்டுமே இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஓய்வு குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் மஹ்மதுல்லா கூறியதாவது:

நான் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக முடிவெடுத்துள்ளேன். என்னை ஆதரித்த ரசிகர்கள், பயிற்சியாளர், எனது அணியினர் அனைவருக்கு நன்றி கூறுகிறேன்.

எனது பெற்றோர்களுக்கு மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனது மனைவியின் பெற்றோர் குறிப்பாக எனது மாமனார், மிகவும் முக்கியமாக எனது சகோதரர் எம்தாத் உல்லாஹ் எனது சிறுவயது முதல் என்னுடைய ஆலோசகராக பயிற்சியாளராக இருந்துள்ளார்.

கடைசியாக எனது மனைவி, குழந்தைகளுக்கும் நன்றிகள். எனது குழந்தை ரயீத் என்னை சிவப்பு & பச்சை வண்ண ஜெர்சியில் பார்ப்பதை மிஸ் செய்வான். எல்லாம் நல்ல விதத்தில் எதுவும் முடிவடையாது. ஆனால், நீங்கள் சம்மத்தித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும். வங்கதேச கிரிக்கெட்டுக்கும் எனது அணிக்கும் வாழ்த்துகள் என்றார்.

இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் சையத் அபித் அலி காலமானார்!

இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த ஆல்ரவுண்டர் சையத் அபித் அலி உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 83.ஆல்ரவுண்டரான சையத் அபித் அலி ஃபீல்டிங்கிக்கு பெயர் பெற்றவர். இவர் 1967 ஆம் ஆண்டு அடிலெய்டில் ந... மேலும் பார்க்க

லக்னௌ அணியில் பேட்ஸ்மேனாக மட்டும் களமிறங்கவுள்ள ஆஸி. ஆல்ரவுண்டர்!

பிரபல ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் லக்னௌ அணியில் பேட்ஸ்மேனாக மட்டும் விளையாடவுள்ளார்.இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. தொடரின் முதல் போட்டியில் நடப்பு சா... மேலும் பார்க்க

விரைவில் நியூசி. ஐசிசி கோப்பையை வெல்லும்: ரிக்கி பாண்டிங்

ஆஸி. முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் நியூசிலாந்து அணி விரைவில் கோப்பையை வெல்லும் எனக் கூறியுள்ளார். ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியின் இறுதிப் போட்டியில் 49ஆவது ஓவர் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித... மேலும் பார்க்க

ரோஹித் சர்மா ஏன் ஓய்வு பெறவேண்டும்?: ஏபிடி வில்லியர்ஸ்

சாம்பியன்ஸ் டிராபியை வென்ற ரோஹித் சர்மா ஓய்வு பெறுவதற்கு காரணமே இல்லை என தென்னாப்பிரிக்க வீரர் ஏபிடி வில்லியர்ஸ் கூறியுள்ளார்.டி20 உலகக் கோப்பை இந்திய அணி வென்றவுடன் ரோஹித், கோலி, ஜடேஜா ஓய்வை அறிவித்த... மேலும் பார்க்க

ராஜஸ்தானுடன் இணைந்தார் 13 வயது வீரர்! ரூ.1.10 கோடிக்கு வாங்கப்பட்டவர்!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சி முகாமில் மிக இளம் ஐபிஎல் வீரர் என்ற பெருமையை பெற்ற வைபவ் சூரியவன்ஷி இணைந்துள்ளார்.ஐபிஎல் மெகா ஏலத்தின் போது, வைபவ் சூரியவன்ஷியை ரூ.1.10 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி... மேலும் பார்க்க

ஐசிசியின் சிறந்த வீராங்கனை விருதை முதல்முறையாக வென்ற அலானா கிங்..!

சர்வதேசப் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் ஒவ்வொரு வீரர் மற்றும் வீராங்கனைக்கு ஒவ்வொரு மாதமும் ஐசிசி விருது வழங்கப்படுகிறது. பிப்ரவரி மாதத்துக்கான சிறந்த கிரிக்கெட் வீராங்கனைக்கான ஐசிசி வ... மேலும் பார்க்க