செய்திகள் :

ரோஹித் சர்மா ஏன் ஓய்வு பெறவேண்டும்?: ஏபிடி வில்லியர்ஸ்

post image

சாம்பியன்ஸ் டிராபியை வென்ற ரோஹித் சர்மா ஓய்வு பெறுவதற்கு காரணமே இல்லை என தென்னாப்பிரிக்க வீரர் ஏபிடி வில்லியர்ஸ் கூறியுள்ளார்.

டி20 உலகக் கோப்பை இந்திய அணி வென்றவுடன் ரோஹித், கோலி, ஜடேஜா ஓய்வை அறிவித்தார்கள். அதேபோல் சாம்பியன்ஸ் டிராபியை வென்றவுடன் ரோஹித் சர்மா ஓய்வு பெறுவாரென எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், ரோஹித் சர்மா இதனை மறுத்துவிட்டார். விராட் கோலியும் எதுவும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தெ.ஆ.வீரர் ஏபிடி வில்லியர்ஸ் தனது யூடியூப் சேனலில் கூறியதாவது:

ரோஹித் ஏன் ஓய்வு பெறவேண்டும்?

மற்ற கேப்டன்களை ஒப்பிடும்போது ரோஹித்தின் வெற்றி சதவிகிதம் 74%ஆக இருக்கிறது. இது மற்றவர்களை மிக அதிகம். ரோஹித் இதேபோல் சென்றால் எக்காலத்துக்குமான ஒருநாள் போட்டிகளின் மிகச் சிறந்த கேப்டனாக மாறிவிடுவார்.

வதந்திகளை ரோஹித்தும் ஓய்வுபெறப்போவதில்லை எனக் கூறியுள்ளார்.

ரோஹித் ஏன் ஓய்வு பெறவேண்டும்? கேப்டனாக மட்டுமில்லை, பேட்டராகவும் ரோஹித் சிறப்பாக செயல்படுகிறார். இறுதிப் போட்டியில் 76 ரன்கள் அடித்து சிறப்பான தொடக்கதை அளித்தார்.

ரோஹித் சாதனைகளே அவருக்காக பேசும்

அழுத்தம் அதிகமாக இருக்கும்போது முதல் ஆளாக முன்னின்று அணியை வழிநடத்தினார். அவர் எந்தவிதமான விமர்சனங்களையும் எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. அவரது சாதனைகளே அவருக்காக பேசும். அது மட்டுமில்லை, அவர் தனது ஆட்டத்தையும் மாற்றியுள்ளார்.

பவர்பிளேவில் அவரது ஸ்டிரைக்-ரேட்டை பாருங்கள். 2022க்குப் பிறகு 115ஆக முன்னேறியுள்ளது. அதுதான் நல்லது, சிறந்ததுக்குமான வித்தியாசம். அது உங்களது சொந்த ஆட்டத்தை மாற்றும், அது நிற்கவே போவதில்லை.

எப்போதுமே எதாவது சிறப்பாக செயல்படவும் கற்றுக்கொள்ளவும் இருக்கத்தான் செய்யும் என்றார்.

எதுவும் நல்ல விதத்தில் முடிவதில்லை: ஓய்வை அறிவித்த வங்கதேச வீரர்!

வங்கதேச வீரர் மஹ்மதுல்லா (39) சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்துள்ளார். மஹ்மதுல்லா வங்கதேசத்தில் அதிகமாக ரன்கள் குவித்தவர்கள் வரிசையில் 4ஆவது இடத்தில் இருக்கிறார். அனைத்து ஐசிசி தொடர... மேலும் பார்க்க

விரைவில் நியூசி. ஐசிசி கோப்பையை வெல்லும்: ரிக்கி பாண்டிங்

ஆஸி. முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் நியூசிலாந்து அணி விரைவில் கோப்பையை வெல்லும் எனக் கூறியுள்ளார். ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியின் இறுதிப் போட்டியில் 49ஆவது ஓவர் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித... மேலும் பார்க்க

ராஜஸ்தானுடன் இணைந்தார் 13 வயது வீரர்! ரூ.1.10 கோடிக்கு வாங்கப்பட்டவர்!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சி முகாமில் மிக இளம் ஐபிஎல் வீரர் என்ற பெருமையை பெற்ற வைபவ் சூரியவன்ஷி இணைந்துள்ளார்.ஐபிஎல் மெகா ஏலத்தின் போது, வைபவ் சூரியவன்ஷியை ரூ.1.10 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி... மேலும் பார்க்க

ஐசிசியின் சிறந்த வீராங்கனை விருதை முதல்முறையாக வென்ற அலானா கிங்..!

சர்வதேசப் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் ஒவ்வொரு வீரர் மற்றும் வீராங்கனைக்கு ஒவ்வொரு மாதமும் ஐசிசி விருது வழங்கப்படுகிறது. பிப்ரவரி மாதத்துக்கான சிறந்த கிரிக்கெட் வீராங்கனைக்கான ஐசிசி வ... மேலும் பார்க்க

சிறந்த வீரருக்கான ஐசிசியின் விருதை 3ஆவது முறையாக வென்ற ஷுப்மன் கில்..!

ஒவ்வொரு மாதமும் சிறப்பாக செயல்படும் வீரர்களை தேர்ந்தெடுத்து அவர்களில் ஒருவருக்கு அம்மாதத்துக்கான சிறந்த வீரர் விருதினை ஐசிசி வழங்கி வருகிறது. அந்த வகையில் பிப்ரவரி மாதத்துக்கான சிறந்த வீரர் விருதுக்கா... மேலும் பார்க்க

இந்திய கிரிக்கெட் வாரியமாக செயல்படும் ஐசிசி..! மே.இ.தீ. லெஜண்ட் கடும் விமர்சனம்!

மே.இ.தீ. அணியின் வேகப் பந்து வீச்சாளர்களின் தந்தையாக கருதப்படும் ஆண்டி ராபட்ஸ் ஐசிசியின் நடவடிக்கைகள் இந்தியாவுக்கு சாதகமாக இருப்பதாக கடுமையாக விமர்சித்துள்ளார்.ஐசிசி என்பது சர்வதேச கிரிக்கெட் வாரியமா... மேலும் பார்க்க